தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு, எதிர்வரும் 23ஆம் திகதியன்று, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மாநகர அபிவிருத்தி அமைச்சுப் பதவியே பொன்சேகாவுக்கு கிடைக்கவிருப்பதாக அறியமுடிகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பியான எம்.கே.டி.எஸ் குணவர்தன மரணமடைந்ததையடுத்து ஏற்பட்ட எம்.பி பதவி வெற்றிடத்துக்கே, சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நேற்றிரவு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சாய்ந்தமருது கிளையில் இடம்பெற்ற கருத்தரங்கை குழப்பி, மர்க்கஸிக்கும் கல்லெறிந்து, மர்க்கஸையும் உடைக்க திட்டமிட்டு, மர்க்கஸில் பயானை கேட்டுக் கொண்டிருந்த எமது சகோதரர்களுக்கு கல்லெறிந்தும் தாக்கிய அனைவருக்கு எதிராகவும் குறிப்பாக சட்டத்தை அமுல் படுத்தாமல் பாரபட்சம் காட்டிய கல்முனை போலிஸ் அதிகாரிககளுக்கும் தக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
Related Pots
இன்ஷா அல்லாஹ் இன்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சாய்ந்தமருது கிளையில் இரத்ததான முகாம் நடைபெறும்.
அனைத்து சகோதர, சகோதரிகளும் தங்களது குருதிக்கொடைகளை அல்லாஹுவுக்காக வழங்கி அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்.
அல்குர்ஆன் 5:32
Related Pots
எதிர்வரும் வாரத்தில் தனது மூத்த மகன் நாமல் ராஜபக்ஷ, கைது செய்யப்படுவார் என்றும் அதற்கு அவரைத் தயாராக இருக்குமாறு, தான் கூறியதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஒருவர் கைது செய்யப்படுவதற்கு முன்னர், அவரைப் பற்றிய கேள்விகள் நாடாளுமன்றத்தில் அதிகமாக கேட்கப்படும் என்றும் கடந்த வாரங்களில் நாமல் ராஜபக்ஷ குறித்தான கேள்விகள் அதிகமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனாலேயே சிறைக்குச் செல்வதற்கு தயாராக இருக்குமாறு, தனது மகனுக்கு தான் கூறியதாக அவர் தெரிவித்தார்.
Related Pots
Related Pots
நண்பர்களே நீங்களும் COMPUTER கற்க வேண்டுமா இதோ உங்களுக்காக நீங்கள் இப்போது வீட்டில் இருந்தபடியே COMPUTER கற்கலாம்
வெறும் 200/ ரூபாய் மட்டுமே
Tamil Tutorial DVD list
>IT Students
>House wife
>Office workers
>Foreign employees
>Teachers
$. Ms Word
$. Ms Excel
$. Ms power point
$. Ms Access
$. Adobe Photoshop
$. Adobe Illustrator
$. Adobe InDesign
$. Dreamweaver
$. Macromedia Flash
$. Corel DRAW X3
$. Corel DRAW X5
$. HTML
$. HTML 5
$. Python
$. PHP
$. Tally
$. After Effects Cs6
$. Auto desk 3D Max
$. Maya
$. Cinema 4D
$. Auto Desk AutoCAD
$. JAVA
$. JAVA Scrip
t
$. VB Script
$. VB Script
$. C Language
$. C++
$. C#.Net
$. Internet & email
$. Hardware engineering
$. Visual basis 6.0
$. Blogger
$. Jquery
$. Google AdSense
$. WordPress
$. Cooking: veg
$. Cooking: non Veg
$. Cooking: Sweets
$. iPhone Repairing
and more.....
Related Pots
இரண்டு கருந்துளைகள் ஒன்றையொன்று சுற்றி பிணைந்தபோது அண்டவெளியில் ஏற்பட்ட ஈர்ப்பு கவர்ச்சி அலைகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது வானியல் அறிவியலில் அதிசயிக்கத்தக்க அடுத்த கட்டமாக வர்ணிக்கப்படுகிறது.
விண்வெளியில் சூரியனைப் போன்ற மிகப் பெரிய நட்சத்திரங்கள் உள்ளன. அவை தங்களது வாழ்நாளின் இறுதியில் கருந்துளைகளாக (black-hole) மாறும். அவை ஒன்றையொன்று சுற்றும்போது அண்டவெளியில் (space-time) அதிர்வுகள் ஏற்பட்டு அவை ஈர்ப்பு கவர்ச்சி அலைகளாக வெளியாகும் என்று 100 ஆண்டுகளுக்கு முன்பே இயற்பியல் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கணித்திருந்தார்.
அந்த கணிப்பு சரியானது என்பதை விஞ்ஞானிகள் இப்போது உறுதி செய்துள்ளனர். இதுகுறித்து லிகோ (LIGO – Advanced Laser Interferometer Gravitational-Wave Observatory) திட்ட செயல் இயக்குநர் டேவிட் ரிட்ஸ், வாஷிங்டனில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
விண்வெளியில் ஏதோ ஒரு இடத்தில் சூரியனை போன்று 29 மற்றும் 36 மடங்குகள் பெரிய இரண்டு ராட்சத கருந்துளைகள் அல்லது விண்மீன்கள் ஒன்றை ஒன்று சுற்றிக் கொண்டே மோதிப் பிணைந்துள்ளன. அந்த நிகழ்வால் ஏற்பட்ட ஈர்ப்பு கவர்ச்சி அலைகளை இப்போது கண்டுபிடித்துள்ளோம்.
அந்த இரண்டும் பிணைந்து சூரியனைவிட 62 மடங்குகள் பெரிதாக மாறிவிட்டது. இந்த நிகழ்வால் உருவான ஈர்ப்பு கவர்ச்சி அலைகள் பிரபஞ்சத்தின் கீச்சுக்குரல் போல வெளிப்பட்டிருக்கின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Pots
ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்தின் செயலாளர் அப்துர் ராசிக் புத்த மதத்தை இழிவு படுத்தும் விதமாக பேசியதாக கூறி பொது பல சேனாவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
குறித்த வழக்கில் ஆரம்பமாக ஒரு சுவாரஷ்யம் நடைபெற்றது.
அதாவது தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் துணை செயலாளர்களில் ஒருவரான மவ்லவி ரஸ்மின் இலங்கையை சேர்ந்தவரில்லை என்றும் அவர் வெளிநாட்டவராக இருக்கலாம் என்றும் தமது தரப்பு சந்தேகிப்பதாகவும் அதனை உறுதி செய்யுமாறும் பொது பல சேனாவின் சார்பில் நீதி மன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி கோரிக்கை வைத்தார்.
அவருடைய கோரிக்கைக்கிணங்க தௌஹீத் ஜமாஅத்தின் துணை செயலாளர் ரஸ்மினின் ஆளடையாள அட்டை உடனே நீதிபதிக்கு காண்பிக்கப்பட்டது. அதனை அருகிலிருந்த பொலிஸ் அதிகாரியிடம் கையளித்த நீதிபதி இது உண்மையானது தானா? என்று வினவினார்.
குறித்த பொலிஸ் அதிகாரி அதனை பரிசோதித்து விட்டு இது உண்மை தான் என்று சொன்னவுடன் இப்போது உங்கள் சந்தேகம் தீர்ந்து விட்டது தானே? என்று நீதிபதி பொது பல சேனா தரப்பு சட்டத்தரணிக்கு கூறினார்.
அதன் பின்னர் மத நிந்தனை பற்றிய வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டது.
Related Pots
விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ள ஞானசார தேரரின் வழக்கை விசாரித்த நீதிபதி ரங்க திசானாயக்க
ஞானசார தேரருக்கு கடும் தொனியில் சில அறிவுருத்தல்களை வழங்கியுள்ளார்.
ஞானசார தேரர் சார்பாக ஆஜாரான வழக்கரிஞரிடம் சந்தேக நபர் (ஞானசாரர்) பிணை கோருகிறாரா என நீதிபதி கேட்டுள்ளார்.
ஆம் என ஞானாசார தேரரின் வழக்கறிஞர் பதில் வழங்க
எங்களை கைது செய்து உள்ளே போடுங்கள் என கூச்சல் போட்டவர்களுக்கு இப்போது
எதற்கு பிணை அவர் கேட்பதற்காக என்னால் பிணை வழங்க முடியாது சட்டத்தில்
இடமிருந்தால் பிணை வழங்குவேன்.
சந்தேகனபரின் முன்னைய செயற்பாடுகளை பார்த்தால் ஏதோ ஒன்றை அடைவதற்காக திட்டமிட்டு நீதிமன்றை அவமதித்தது போல தெரிகிறது.
யாரினதும் தனிப்பட்ட விடயங்களை அடைந்துகொள்ள நீதிமன்றை பயன்படுத்த இடமளிக்க
முடியாது , அப்படி எவரும் செயற்பட முற்பட்டால் கடுமயான தண்டனைகளை சந்திக்க
நேரிடும் என நேற்று ஞானசார தேரரின் வழக்கை விசாரித்த நீதிபதி
திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வழக்கு விடயம் தொடர்பாகவும் நீதிமன்ற செயற்பாடுகள் தொடர்பாக ஞானசார
தேரருக்கு ஊடகங்களுக்கு கருத்து கூற நீதிபதி கட்டுப்பாடு
விதித்திருந்தார்.
Related Pots
ஹோமாகம
நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்ப்பட்ட ஞானசார தேரரின் நீதிமன்ற
அவமதிப்பு வழக்கில் இன்று ஞானசார தேரர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு
சற்றுமுன்னர் பிணை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஞானசார தேரர் 14 நாட்கள்
விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் இரண்டு லட்சம் பெறுமதியான இரண்டு சரீர
பிணையில் அவரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
பிணையில் வந்த தேரர் மீண்டும் உள்ளே !
முன்னதாக நீதிமன்ற அவமதிப்பு
வழக்கில் இரண்டு லட்சம் இரு சரீர பிணைகளில் விடுவிக்கப்பட்ட
தேரருக்கு ஊடகவியளாலர் எக்னெலிகொடவின் மனைவியை அச்சுருத்திய வழக்கில் நாளை
வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதீ ரங்க விஜேசிங்க உத்தரவிட்டுள்ளார்.
Related Pots
சிறுநீரங்கள் தான் உடலில் உள்ள கழிவுப் பொருட்களை சிறுநீரின் வழியே பிரித்து வெளியேற்றுவது. இப்படி கழிவுகளை பிரித்து வெளியேற்றுவதால், அந்த சிறுநீரகங்களின் மூலை முடுக்குகளில் நச்சுக்கள் தங்கி, அதுவே பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய சிறுநீரக நோயின் 12 அறிகுறிகள்!!! இதைத் தடுக்க சிறுநீரகங்களைச் சுத்தமாக வைத்துக் கொள்ளும் உணவை உட்கொள்ள வேண்டியது அவசியம். மேலும் சிறுநீரகங்கள் பாழாவதற்கு நம் அன்றாட பழக்கவழக்கங்களும் ஓர் காரணம்.
அந்த பழக்கவழக்கங்களைத் தவிர்த்தால் சிறுநீரகங்கள் சேதமடைவதைத் தடுக்கலாம். மக்களே! இந்த உணவுகளை சாப்பிட்டா சிறுநீரகத்தில் கல் உருவாகும்… கவனமா இருங்க… சரி, இப்போது உடலின் மிகவும் முக்கிய உறுப்பான சிறுநீரகங்களைச் சேதப்படுத்தும் நம் பழக்கவழக்கங்கள் என்னவென்று படித்து, அவற்றைத் தவிர்த்து உங்கள் சிறுநீரகங்களை பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.
சிறுநீரை அடக்குதல்