வில்பத்து சரணாயலம் அழிப்பு தொடர்பில் ஆணைக்குழுவொன்றை நியமித்து ஆராய வேண்டும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்த முஸ்லீம் மக்களை சட்டவிரோதமாக தாம் மீள்குடியேற்றுவதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழு, ஊழல் தடுப்பு ஆணைக்குழு, ஏப்.சி.ஐ.டி, சி.ஐ.டி மற்றும் பொலிஸார் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கென செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்களில் ஒருவரேனும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்து தீர்மானமொன்றிக்கு வரவில்லை என ரிஷாட் பதியூதீன் கேள்வி எழுப்பியுள்ளார். தமக்கு எதிரான யாரிடமாவது ஆதாரங்கள் இருப்பின் மேல் குறிப்பிட்ட எந்தவொரு பிரிவிலும் முறைப்பாடு செய்யலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வில்பத்து சரணாலய காடழிப்பு தொடர்பில் தமக்கு எந்தவித தொடர்பும் இல்லை என அமைச்சர் ரஷாட் பதியூதீன் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அடிப்படை அற்றவை எனவும் வில்பத்து சரணாயலப் பகுதியில் இடம்பெயர்ந்தவர்களை தாம் மீள்குடியேற்றியமை உறுதிப்படுத்தப்பட்டால் அரசியலில் இருந்து விலகிக் கொள்வதாக கூறியுள்ளார்.
 
முகநூலில் கணக்கை ஆரம்பிக்கும் இலங்கையர்களின் ஆகக்குறைந்த வயது எல்லையை 16 ஆக மாற்ற அரசாங்கம் முயற்சித்து வருகின்றது என கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டது. 

முகநூலில் கணக்கை ஆரம்பிப்பதற்கான வயது எல்லை பொதுவாக 13 ஆக உள்ளது. இந்நிலையில் 13 வயது பூர்த்தியானவர்கள் பல இலங்கையர்கள் முகநூலில் கணக்கை தொடங்குகின்றனர். இவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் சந்தர்ப்பங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் இளம் சமூகத்தைப் பாதுகாக்க முகநூலில் கணக்கு ஆரம்பிக்கும் இலங்கையர்களின் வயது எல்லையை 16 ஆக மாற்றுவதற்கு அரசாங்கம் சிந்தித்து வருகின்றது. 

இது குறித்து சட்டவாளர்கள், துறைசார் நிபுணர்கள், புத்திஜீவிகளின் கருத்துக்களை அரசாங்கம் அறிந்து வருகின்றது.



முதலாம் உலக யுத்தத்தின்பொழுது, பிரித்தானிய வல்லரசின் காலணித்துவ ஆதிக்கத்தின் கீழிருந்த நாடுகளில் இருந்து இலட்சக் கணக்கான வீரர்கள் பிரித்தானியாவிற்காக இணைந்து போரிட்டார்கள்.
அதில் இந்திய உபகண்டத்திலிருந்து 15 இலட்சம் போர் வீரர்கள் கலந்து கொண்டார்கள். இதில் 4 இலட்சம் பேர் முஸ்லிம்களாவர்.
தொழுகையில் ஈடுபட்டுள்ள சிலரை இங்கு படத்தில்


ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழு 177 நாடுகளின் ஆதரவுடன், பலஸ்தீன் மக்களுக்கு தங்களை தாங்களே ஆளும் உரிமை இருக்கிறது என்ற எழுத்து வடிவிலான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
இதன்மூலம் பலஸ்தீன் மக்கள் தங்களை தாங்களே ஆளக்கூடியதுடன் , தங்களுக்கான சுதந்திரமான பிரதேசத்தையும் கொண்டிருக்கும்.அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் கீழுள்ள எல்லா நிறுவனங்களையும், எல்லா நாடுகளையும் இத்தீர்மானத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் படியும், பலஸ்தீனிய மக்கள் தங்களது உரிமைகளை எவ்வளவு விரைவாக பெற முடியுமோ, அவ்வளவு விரைவாக பெறுவதற்கு உதவி செய்யும்படியும் வேண்டிக்கொண்டது.
இத்தீர்மானத்தின்படி, பலஸ்தீனியர்கள் அனுபவித்துவரும் சொல்லொனா துயரங்கள் உடனடியாக முடிவுக்குவரும் தேவை யிதுப்பதும், இஸ்ரவேலின் நில அபகரிப்புகள் நிறுத்தப்பட வேண்டிய தருணம் வந்து விட்டதையும், பலஸ்தீனையர்களும், இஸ்ரவேலியர்களும் தங்களுக்குள் எப்பொழுதுமே தொடரக்கூடிய சமாதானத்துடனும், நீதியுடனும், புரிந்துணர்வுடன் வாழ வேண்டிய தருணம் வந்துள்ளது என்பதை குறிக்கும்.
ஐக்கியநாடுகள் சபையின் முன்னைய பிரதானமான "அமைதிக்கான நில விட்டுக்கொடுப்பு" (Land for peace) என்ற தீர்மானத்தின் அடிப்படையிலும், அரபு நாடுகளின் "சமாதானத்திற்கான முன்னெடுப்பு" (Peace initiative) என்ற வரைபுக்குள்ளும் அடங்குகிறது.
இத்தீர்மானம், ஏற்கனவே சர்வதேச நீதிமன்றத்தின் 9ஜூலை 2004 ம் ஆண்டு வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய இஸ்ரவேலின் மதில் சுவரே பலஸ்தீனியர்களின் உரிமைகளை பாதித்ததற்கான காரணம் என்பதையும் குறிப்பிட்டுள்ளது.
கீழ்வரும் ஏழு நாடுகள் இத்தீர்மானத்திற்கெதிராக வாக்களித்துள்ளன. இஸ்ரவேல், அமெரிக்கா, கனடா, பலாவு, மிக்ரனோஸியா, நவ்ரு, மார்ஸல் தீவுகள்
நான்கு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
கமரூன், டொங்கா, தெற்கு சூடான், கொண்டூராஸ்.


கார்டியன் ரிப்போர்ட் என்ற பத்திரிகை ஒரு அழகான ஆக்கத்தை நேற்று வெளியிட்டது
அதில் அமெரிக்க குடியரசு கட்சியின் வேட்பாளர் டிரம்ப் அவர்களுக்கு பதிலடி தரும் விதத்தில் பல செய்திகளை பதிவு செய்துள்ளது
அமெரிக்காவை உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்தவர்கள் முஸ்லிம்கள் என்றும் முஸ்லிம்கள் இல்லாத அமெரிக்க ஏழைநாடாக மாறிவிடும் என்றும் அநத பத்திரிகை கூறியுள்ளது
இதர்கு சான்றாக அமெரிக்காவின் உயர்வுக்கு காரணமாக அமைந்த முஸ்லிம் விஞ்ஞானிகள் புகழ்பெற்ற அமெரிக்க முஸ்லிம் மருத்துவர்கள் பொறியாளர்கள் ஆய்வாளர்கள் போன்றவர்களின் பட்டியலை அந்த பத்திகை வெளியிட்டு அமெரிக்க முஸ்லிம்கள் மூலமே முன்னேறியது என்ற உண்மையை உலகிற்கு அம்பல படுத்தியுள்ளது





முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கும் பிரமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் பலத்த வாக்குவாதம் இடபெற்றுள்ளது.
வெறுப்பூட்டும் சட்டமூலத்தை நிறைவேற்றாமையே இந்த வாக்குவாதத்துக்கு காரணம்.
வெறுப்பூட்டும் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டால் பொதுபல சேனாவின் கொட்டத்தை அடக்க முடியும் என கூறிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தவறும் பட்சத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் சிறுபான்மை சமுகம் நம்பிக்கை இழக்க கூடும் எனவும்பொதுபல சேனா புனித குர்ஆனை அவமதித்து பேசியதையும் பிரதமரிடம் எடுத்து கூறி உள்ளார்.
இதற்கான தீர்வை பிரதமர் மிகவிரைவில் எடுக்க வேண்டும் எனவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பிரதமரிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
                                           

                                only photo











உலகிலேயே மிகக்கூடுதலான திருகுர்ஆன் கல்வியை முடித்த 120,000+ முஸ்லிம்களின் பட்டமளிப்புவிழா இந்தோனிஷியாவில் உதைபந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்றது.


அமெரிக்காவில் சிக்காகோ நகரில் , இஸ்லாமிய நம்பிக்கைகளையும், மத அனுஷ்டானங்களையும் ஆதரிக்கின்றோம் என்பதனை காட்டுவதற்காக முஸ்லிமல்லாத பாடசாலையொன்றின் மாணவிகள் முஸ்லிம்களை போன்று ஹிஜாப் அணிந்து ஒரு மைல் தூர நடைப்பயணம் ஒன்றை மேற்கொண்டார்கள்.
இதற்கு பன்னிரெண்டுக்கும் அதிகமான முஸ்லிமல்லாத பெண்கள் சம்மதித்து, முஸ்லிம்களை போன்று ஹிஜாப் அணிந்து சென்றார்கள்.
பாடசாலை அதிபர் ஜோன் கியாம் கூறுகையில், உயர் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவிகளுக்கு இது ஒரு சோதனைக்காலம். இவ்வாறான நிகழ்வுகள் முஸ்லிம்களை பற்றிய தவறான அபிப்பிராயங்களை இல்லாமலாக்குவதுடன், இது எமது மாணவிகளுக்கு முஸ்லிம் சமுதாயத்தை பற்றி அறிவதற்கு ஓர் நல்ல சந்தர்ப்பம்.ஹிஜாப் அணிந்து இம்மாணவிகள் பாடசாலைக்குள் நடமாடும்பொழுது, அவர்கள் மற்றைய மாணவிகளில் இருந்து எவ்வாறு வித்தியாசமாக தெரிந்தார்கள் என்பதை காண முடிந்தது. நான் இதை வரவேற்பதுடன், இதையிட்டு பெருமையடைகின்றேன் எனவும் கூறினார்.
ஷார்லி மோஸ்லி என்னும் பெண் கூறும் பொழுது, நான் இந்நிகழ்சியில் பங்கு பெறுவதையிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனெனில் எனது மாமா ஒரு முஸ்லிமாவார்.
இந்த நிகழ்ச்சி இஸ்லாமிய நம்பிக்கையை அதிகமாக மனிதர்கள் அங்கீகரிப்பதற்கு ஏதுவாக உள்ளது. இம்மார்க்கத்தைபற்றி மேலும் அறிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன்.
அதிகமான மாணவிகள் ஹிஜாப் அணிவதன்மூலம், கூடுதலான மக்கள் ஹிஜாபை பற்றியும், இஸ்லாமிய மார்க்கத்தை பற்றியும் தெளிவு பெறுவதனால் எங்களது பாடசாலை சூழல் அமைதியும், சந்தோஷமும் மிக்கதாக காணப்படுகிறது
இந் நிகழ்வு, பத்தாம்பசலித்தனமாக முஸ்லிம்கள்மீதும் இஸ்லாத்தின் மீதும் காட்டப்படும் காரணமற்ற வெறுப்பை இல்லாமலாக்குமெனவும், ஒருவரின் வெளித்தோற்றத்தை வைத்து அவரை எடை போட முடியாது, அவருடன் பழக வேண்டுமென்றும் இந் நிகழ்ச்சியை ஏற்பாடுசெய்த பாடசாலையின் சிரேஷ்ட மாணவியான யாஸ்மின் அப்துல்லாஹ் கூறினார்.
அமெரிக்காவில் ஆகக் கூடுதலான முஸ்லிம்கள் இலினோயஸ் மாநிலத்திலேயே வாழ்கிறார்கள். மதவெறுப்பின் காரணமாக ஏற்படும் குற்றங்களும், குழப்பங்களும் இங்கு அதிகரித்தே வருகிறது.
ஆதாரம்:---- The Siasat Daily


சவுதி அரேபியா தலைமையில் பயங்கரவாதத்தை அழிக்க இஸ்லாமிக் ராணுவ கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. கூட்டமைப்பில் பாகிஸ்தான் உள்பட 34 நாடுகள் பங்கு கொண்டு உள்ளது.

ரியாத்தை தலைமையகமாக கொண்டு பயங்கரவாதத்திற்கு எதிராக கூட்டுத் தாக்குதல் நடத்த, ‘இஸ்லாமிக் ராணுவ கூட்டமைப்பிற்கு’ 34 நாடுகள் ஒப்புதல் தெரிவித்து உள்ளது. சவுதி அரேபியா தலைமையில் தீவிரவாதத்திற்கு எதிராக போரிட இந்நாடுகள் முடிவு செய்துஉள்ளன. ரியாத்தை தலைமையமாக கொண்டு தாக்குதல் நடத்தப்படும், தீவிரவாதத்திற்கு எதிராக இந்நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படும் என்று சவுதி அரேபியா பத்திரிக்கையில் செய்தி வெளியிடப்பட்டு உள்ளது. 
இஸ்லாமியம் உலகில் ஊழல் மற்றும் அழிவை தடுக்கிறது. தீவிரவாதம் மனித கண்ணியம் மற்றும் உரிமையை தொடர்ந்து மீறுகிறது, முக்கியமாக வாழ்க்கை மற்றும் பாதுகாப்பு உரிமையை மீறுகிறது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
புதிய கூட்டமைப்பில் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகள் இடம்பெற்று உள்ளது. பாகிஸ்தான், துருக்கி, எகிப்து மற்றும் போருக்கு தயாராக உள்ள லிபியா மற்றும் ஏமன் போன்ற நாடுகளும் இடம்பெற்று உள்ளது. தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க நாடுகளான மாலி, சாட், சோமாலியா மற்றும் நைஜிரியா ஆகிய நாடுகளும் இக்கூட்டமைப்பில் இடம்பெற்று உள்ளது. சவுதி அரேபியாவிற்கு எதிரான ஈரான் கூட்டமைப்பில் இடம்பெற வில்லை. 

சிரியா மற்றும் ஏமனில் நடைபெறும் போரில் எதிரான தக்குதலில் சவுதிஅரேபியா மற்றும் ஈரான் எதிர்-எதிர் நிலையை கொண்டு உள்ளனர். 

சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான படை தாக்குதல் நடத்திவருகிறது. இதன் ஒருபகுதியாக ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா தாக்குதல் நடத்திவருகிறது. 

சவூதி துணை இளவரசர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் முகமது பின் சல்மான் பேசுகையில், புதிய இஸ்லாமிக் ராணுவ கூட்டமைப்பு, தீவிரவாத குழுக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தும், மற்ற நாடுகளுடன் இணைந்து பணியாற்ற தொழில்நுட்பத்தை வலுப்படுத்தும் மற்றும் சர்வதேச அளவில் தீவிரவாதத்தை ஒழிக்க, சர்வதேச சமூகத்திற்கு ஆதரவு அளிக்கும். ”தற்போது ஒவ்வொரு இஸ்லாமிய நாடுகளும் தீவிரவாதத்திற்கு எதிராக தனித்தனியாக போரிடுகிறது... எனவே கூட்டணி என்பது மிகவும் முக்கியமானது,” என்று தெரிவித்து உள்ளனர்.


கடந்த 60 வருடகாலமாக இலங்கையுடன் அமெரிக்கா பல்வேறு பணிகளில் இணைந்து கொண்டதையிட்டு  மகிழ்ச்சி அடைவதுடன், தொடர்ந்தும் இலங்கையின் நிலைபேறான பல அபிவிருத்தித் திட்டங்களுக்கு அமெரிக்கா உதவவுள்ளது. இதைத் தெரிவிப்பதில் தாம் பெருமிதம் கொள்வதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் இராஜாங்க செயலகத்தின் ஆலோசகரான தோமஸ் சனொன் தெரிவித்தார்.

திருகோணமலை, அமரந்தி பே ஹோட்டலில் இன்று  நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் 

அவர்  மேலும் கருத்து தெரிவிக்கையில்,
விவசாய அபிவிருத்தி, சுகாதாரம், கல்வி, ஜனநாயகம், பொருளாதார வளர்ச்சி, நல்லாட்சி, மனிதநேய நடவடிக்கை போன்றவை தொடர்பான நிகழ்ச்சிகள் நாடெங்கிலும் முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த 60 வருடங்களில் இலங்கை எட்டியுள்ள வெற்றிகளை கண்டு நாம் மகிழ்ச்சி அடைகிறோம். தொடர்ந்தும் அனைத்து இலங்கையர்களுக்கும் சேவை வழங்கக்கூடிய வகையில் சிறந்த சிவில் சமூகம் மற்றும் வினைத்திறன் மிக்க அரசாங்கத்துக்கு நாம் உதவுவோம்' என்றும் குறிப்பிட்ட அவர் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக 23 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அதன்மூலம் பல திட்டங்களை வகுத்து அதன் ஊடாக மூவின மக்களையும் ஒன்றிணைத்து நாட்டில் சமத்துவத்தினை கட்டி எழுப்ப முடியும் எனவும் இங்கு தெரிவித்தார்

அதனைத்தொடர்ந்த்து குறித்த பகுதியில் அமைந்துள்ள 2ஆம் உலக மகாயுத்தத்தில் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்துள்ள திருகோணமலை போர்க் கல்லறைக்கும் விஜயம் செய்தார். அங்கு அனைத்து கல்லறைகளையும் பார்வையிட்ட அவர் மலர் வளையம் வைத்து அஞ்சலியுடனான மரியாதை செய்தார். 

இந்நிகழ்வில் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்ணான்டோ, மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்,  திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஐக்கிய நாடுகள் சபையுடனும் ஏனைய நாடுகளுடனும் இலங்கை இணைந்து பிரச்சினைகளை சாதகமாக தீர்த்துக்கொள்ள முனைகிறது என ஐக்கிய நாடுகளுக்கான இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ரொஹான் பெரேரா  தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கில் உள்ள இலங்கை தூதரகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வின்போது இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை, 1955ஆம் ஆண்டு இணைத்துக் கொள்ளப்பட்டது.இந்தநிலையில் தற்போது அது ஐக்கிய நாடுகளுடன் இணைந்து செயற்படுவதன்மூலம் பல்வேறு நன்மைகளை பெறக்கூடியதாக உள்ளது என்று பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் அமைதிப்படைகளில் இலங்கையின் வீரர்களும் பணியாற்றுகின்றனர்.இலங்கையில் அரசியல் மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் இந்த உறவில் புதிய மாற்றங்கள் ஏற்பட்டன என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


இந்தச் சம்பவம் கிளிநொச்சி உதயநகர் பகுதியில் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் கிளிநொச்சி உதய நகர் கிழக்கைச் சேர்ந்த இராமசாமி பழனியாண்டி வயது 76 என்ற முதியவரே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பில் தெரிய வருவது,
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த புகையிரதத்தில் முதியவர் கிளிநொச்சி ஆனந்தபுரம் அம்மன் கோயிலுக்கு அருகாமையில் வீதியை கடக்க முற்பட்ட வேளையே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலும் புகையிரத பாதுகாப்பு கடவை பொருத்தப்படாத பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்றும் சம்பவ இடத்திலேயே குறித்த முதியவர் பரிதாபகரமாக உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது



தர்பூசணியில் விட்டமின் ஏ, பி6, சி மற்றும் லைகோபீன் (lycopene) சத்து (இது ஆஸ்துமா, ஹைபர் டென்ஷன், இதய படபடபடப்பு போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும்) என நிறைய சத்துகள் உள்ளன.
எல்லாவற்றையும்விட, இதில் 92 சதவிகிதம் நீர்ச்சத்து இருப்பதால் வெயில் காலங்களில் ஏற்படும் சன் ஸ்ட்ரோக் போன்றவற்றிலிருந்து காக்கும்.
தர்பூசணியில் இருக்கும் தையாமின், ரிபோஃப்ளோவின் போன்ற மருத்துவச் சத்துகள் வெயில் காலத்தில் ஏற்படும் அக்கி, வாய்ப் புண், குடல்புண், மூலம், அம்மை போன்றவற்றிலிருந்து காக்கும்.

தர்பூசணி சாப்பிடுவதால் ஒபிசிட்டி, இதய நோய், சர்க்கரை வியாதி போன்றவற்றின் தீவிரம் குறையும்.
சரும வறட்சி, மலச்சிக்கல், தசை வீக்கம் போன்றவற்றுக்கு தர்பூசணி கைகண்ட மருந்தாக உதவும்.
தொடர்ந்து தர்பூசணி சாப்பிடுபவர்களுக்கு வயோதிகம் தள்ளிப்போகும்.

எண்ணெய் வழியும் சருமம், கரும்புள்ளிகள், சரும வறட்சி, வயோதிக தோற்றம் போன்றவற்றைப் போக்க, தர்பூசணியின் சதைப்பகுதியை விதையுடன் அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்துக்கொண்டு, தினமும் ஒரு டீஸ்பூன் எடுத்து, அரை ஸ்பூன் பால் பவுடர், கால் ஸ்பூன் தேன் கலந்து முகம், கழுத்து, கை, போன்ற வெயில் படும் இடங்களில் தடவி, பத்து நிமிடங்கள் ஊறவைத்துக் கழுவினால்... முகம் பொலிவடையும்.
அக்கி வந்தால், நாட்டுமருந்துக் கடையில் கிடைக்கும் காவி ஒரு ஸ்பூன், ஆவாரம்பூ பொடி ஒரு ஸ்பூன் மற்றும் தர்பூசணி ஒரு ஸ்பூன் கலந்து அக்கியின் மேல் பூசலாம். இதை தொடர்ந்து செய்துவந்தால்... அக்கி இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
காதி கிராஃப்ட்டில் கிடைக்கும் குளிர்தாமரை தைலம் 2 ஸ்பூனுடன் தர்பூசணி 2 ஸ்பூன் கலந்து தலையில் தடவி, 2 - 3 மணி நேரத்துக்குப் பிறகு குளித்தால் உடல் சூடு, கண் எரிச்சல் எல்லாம் மாயமாகும்.


இந்தியாவுடன் விரிவான பொருளாதார கூட்டு தொடர்பான ஒப்பந்தத்தில் (சீபா) கையெழுத்திடப் போவதில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் பிரதமர் ஆற்றும் விஷேட உரையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

பொறுப்பு மிக்க தொழிற்சங்கமான அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பொய்யான மற்றும் ஆதாரமற்ற கருத்துக்களை கூறி, தமது உறுப்பினர்களையும் மக்களையும் ஏமாற்றுவதைக் கண்டிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் பிரிதொரு பெயரில் இந்தியாவுடன் சீபா ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளதாகவும், இதன் மூலம் வேலையற்ற இந்திய இளைஞர்களுக்கு இலங்கையில் பணிபுரிய வாய்ப்புகள் கிட்டவுள்ளதாகவும், இது இலங்கையிலுள்ளவர்களின் வேலை வாய்ப்பு சந்தர்ப்பங்களை பாதிக்கும் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டிருந்தது என ரணில் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை கடந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தை மாற்ற பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை களமிறங்கிய போது, பல்வேறு தொழிற் சங்கங்கள், தமது தொழில் வாய்ப்புக்கள் மட்டுமன்றி உயிரையும் பணையம் வைத்து எம்முடன் கைகோர்த்தனர் என கூறிய அவர், இதன்போது பல வைத்தியர்களும் எம்முடன் இருந்தனர் எனவும் தெரிவித்தார்.


எனினும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உயர் ஆசனங்களில் உள்ள சிலர் ஜனவரி 8ம் திகதி புரட்சியுடன் இணைந்திருக்கவில்லை எனவும், அவர்கள் ராஜபக்ஷ ஆட்சியை பாதுகாக்கவே இணைந்திருந்தாகவும், இதனை முழு நாடே அறிந்திருந்ததாகவும் ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு இருக்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உயர் பதவியில் இருப்பவர்கள் பொய் கூறி தமது உறுப்பினர்களையும், நாட்டையும் ஏமாற்ற முயற்சிப்பது, அவர்கள் இன்னும் ராஜபக்ஷ ஆட்சியின் அடிமைகளாக இருப்பதாலேயே என தௌிவாவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் சீபா ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை எதிர்க்கவில்லை எனவும், தொழிலுக்காக இந்தியர்களை அனுமதிக்கும் பகுதியை நீக்கக் கோரவில்லை எனவும் தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இதுஇவ்வாறு இருக்க சீபா ஒப்பந்தம் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை கூறி நாட்டை நெருக்கடிக்குள் தள்ள அவர்கள் முற்படுவதாகவும் சீபா ஒப்பந்தத்திற்கு பதிலாக பொருளாதார மற்றும் தொழிநுட்ப ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தீர்மானித்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.


‘‘தமிழகத்துல வருஷத்துக்கு 2 லட்சம் பொறியாளர்கள் உருவாகி வர்றாங்க. மற்ற துறை பட்டதாரிகளும் லட்சக்கணக்குல வர்றாங்க. 90 சதவிகித மாணவர்களோட மனநிலை - படிப்பு முடிஞ்சதும் ஏதாவது ஒரு கம்பெனியில வேலை... மாதா மாதம் சம்பளம் - அவ்வளவுதான். உலகத்துல இளைஞர் வளம் நிறைஞ்ச நாடுகள்ல முன்னிலையில இருக்கிறது இந்தியாதான். ஆனா, இங்கே பயன்படுத்துற 70 சதவிகிதப் பொருட்கள் வெளிநாடுகள்ல கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த 30 வருஷமா பெரிய கண்டுபிடிப்புகள் ஏதும் இங்கே நிகழல... பெருகி வர்ற மக்கள்தொகைக்கு ஏற்ப தேவைகள் பெருகிக்கிட்டிருக்கு. உற்பத்தித் துறையில ஏகப்பட்ட பங்களிப்பு தேவைப்படுது. நாடு அந்த பங்களிப்பைத்தான் மாணவர்களிட்ட எதிர்பார்க்குது. அதுக்குத் தகுந்த வகையில மாணவர்களை மேம்படுத்துற வேலையை ‘டை சென்னை’ அமைப்பு மூலமா நாங்க செய்றோம்...’’ - புன்னகை மாறாமல் பேசுகிறார் அகிலா ராஜேஷ்வர்... பெரிய பின்புலங்கள் இன்றி தட்டுத்தடுமாறி தடையை கடந்து சாதித்து இன்று முன்மாதிரிகளாக வளர்ந்திருக்கும் தொழிலதிபர்கள் இணைந்து நடத்தும்TiE Chennai (chennai.tie.org) அமைப்பின் எக்சிகியூட்டிவ் டைரக்டர்!

‘டை சென்னை’ அமைப்பு மாணவர்களையும் படிப்பு முடித்த இளைஞர்களையும் சுய தொழில் முனைவோராக மாற்றுவதற்கான பல்வேறு பணிகளை முன்னெடுக்கிறது. மாணவர் மத்தியில் தொழிலதிபர்களைக் கொண்டு அனுபவப் பகிர்வுகளை நடத்துவது, சிறந்த தொழில் திட்டங்கள் வைத்திருக்கும் மாணவர்களை முதலீட்டாளரிடம் அறிமுகம் செய்வது, திட்டங்களை விரிவுபடுத்தி வழிகாட்டுவது, இளம் தொழில்முனைவோரை உற்சாகப்படுத்துவது, ‘ஏஞ்சல் ஃபண்ட்’ முதலீட்டாளர்களை ஒருங்கிணைப்பது என பல்வேறு பணிகளில் ஈடுபடுகிறது.



TiE (The Indus Entrepreneurship)  என்ற உலகளாவிய அமைப்பு 1992ல் அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் தொடங்கப்பட்டது. இன்று உச்சத்தில் இருக்கும் தொழிலதிபர்களும், இளம் தொழிலதிபர்களும், தாங்கள் ஆரம்ப காலங்களில் பட்ட சிரமங்களை அடுத்த தலைமுறையினர் படக்கூடாது என்ற நோக்கத்தில் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்காக இந்த அமைப்பை தொடங்கினர். இப்போது உலகெங்கும் 18 நாடுகளில் 61 பிரிவுகளில் இந்த அமைப்பு செயல்படுகிறது. இந்தியாவில் 16 கிளைகள் செயல்படுகின்றன. அதன் ஒரு அங்கமான ‘டை சென்னை’ 2014ல் தொடங்கப்பட்டது.

‘‘புதிய தொழில்முனைவோருக்கும், தொழில் முனைவோராக விரும்புபவர்களுக்கும், வெற்றிகரமான தொழிலதிபர்களுக்கும் இடையில் தொடர்பை உருவாக்குவது, பயிற்சி அளிப்பது, திட்டங்களை முறைப்படுத்தி முதலீட்டாளர்களோடு இணைப்பை உருவாக்குவது போன்ற பணிகளை டை சென்னை செய்கிறது. 800 உறுப்பினர்கள்... 165 மூத்த உறுப்பினர்கள் பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுகிறார்கள். மாதம் 10 நாட்கள் ஏதேனும் ஒரு நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்துகிறோம். தொழில் தொடங்க முடிவு செய்திருப்பவர்கள், தொழில் தொடங்க திட்டம் வைத்திருப்பவர்கள், தொழில் தொடங்கி தொடக்க நிலையில் இருப்பவர்களுக்கு பல்வேறு வகையில் உதவிகள் செய்கிறோம்.



முன்பெல்லாம் ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்றால் முதலீட்டுக்கு வங்கியில் கடன் கேட்டு அலைய வேண்டும். அல்லது கூடுதல் வட்டிக்கு தனி நபர்களிடம் கடன் வாங்க வேண்டும். இதில் ஏராளமான நடைமுறைச் சிக்கல்கள் உண்டு. அதனால் பலரிடம் நல்ல திட்டங்கள் இருந்தாலும் அது வெறும் சிந்தனையுடனே முடிந்து போய்விடும். இன்று நிலை மாறிவிட்டது. பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு இன்று முன்னணியில் இருக்கும் தொழிலதிபர்கள் தங்களுக்குப் பின்னால் வரும் தலைமுறை அப்படியான இடர்பாடுகளில் சிக்கக்கூடாது என்ற நல்ல நோக்கத்தில் பல திட்டங்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அப்படியான ஒரு திட்டம்தான் ஏஞ்சல் ஃபண்ட். நல்ல திட்டமும் செயலூக்கமும் இருக்கும் இளைஞர்கள் முதலீட்டுக்காக அலைய வேண்டியதில்லை. அவர்களின் தொழிலில் முதலீடு செய்ய ஏஞ்சல் ஃபண்ட் இருக்கிறது. தவிர மத்திய, மாநில அரசுகள் இதற்கென ஏராளமான நிதியை ஒதுக்கி வைத்துக்கொண்டு இளைஞர்களுக்காக காத்திருக்கின்றன. அந்த நிதியை குறைவான இளைஞர்களே  பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

இந்த விஷயத்தில் விழிப்புணர்வூட்டவும், ஏஞ்சல் ஃபண்ட் முதலீடு பற்றி விளக்கவும் 25 நாள் பயிற்சி முகாம்களை நடத்துகிறோம். ஓராண்டுக்கு ஆயிரம் பேர் இலக்கு. அவர்களின் ஐடியாக்களைப் பெற்று ஆய்வு செய்து அதை நடைமுறைக்கு சாத்தியமாக மாற்றி, செயல்திட்டமாக்கி புராஜெக்ட் ரிப்போர்ட்டாக ரெடி பண்ண உதவுகிறோம். முதலீட்டாளர்களிடம் அப்பாயின்மென்ட் வாங்கி அவர்கள் முன் அமர வைக்கிறோம். அவர்களை ஈர்த்து முதலீட்டைப் பெற வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் திறனைப் பொறுத்தது. கல்லூரி மாணவர்களிடம் ஏகப்பட்ட சிந்தனைகள் புதைந்து கிடக்கின்றன. பலர் அற்புதமான தொழில் திட்டங்களை வைத்திருக்கிறார்கள். அதை எப்படி விரிவாக்குவது, செயல்படுத்துவது என்று தெரியாமல் தங்களுக்காகவே அதை முடக்கிக்கொண்டு ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்து விடுகிறார்கள். அந்த திட்டம் அப்படியே தொலைந்து விடுகிறது. புராஜெக்ட் என்ற பெயரில் பொறியியல் கல்லூரிகளில் உருவாக்கப்படும் பல கருவிகள் அறைகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்கின்றன.

அவற்றை மேம்படுத்தி பொதுப்பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு தடையாக இருப்பது பணம். அதற்காகத்தான் ஏஞ்சல் ஃபண்ட் உருவாக்கப்பட்டிருக்கிறது. மாணவர்களை படிக்கும் காலத்திலேயே உற்சாகப்படுத்தி எதிர்காலத்தை வளமாக்கும் பணியை இப்போது ‘டை சென்னை’ கையில் எடுத்திருக்கிறது. மாணவர்களிடம் நெருங்கிப் பழகி அவர்களின் உளவியலையும், திறனையும் அறிந்தவர்கள் பேராசிரியர்கள்தான். முதற்கட்டமாக அவர்களுக்கு ஒரு பயிற்சி வகுப்பை தொடங்கியிருக்கிறோம். மாணவர்களை உற்சாகப்
படுத்துவது, அவர்களின் திறனை மேம்படுத்துவது, அவர்களின் ஐடியாக்களை மேம்படுத்தி அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவது போன்ற பயிற்சிகளை தேர்ந்த நிபுணர்கள் மூலம் வழங்குகிறோம். மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, கல்லூரிகள் மட்டத்தில் மாணவர்களின் தொழில் சார்ந்த சிந்தனைகளை மேம்படுத்தும் வகையில் 45 கல்லூரிகளில் இன்குபேட்டர் என்ற ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அத்திட்டத்திலும் டை சென்னை பங்களிப்பு செய்கிறது.

மேக் இன் இந்தியா திட்டம் இந்தியாவின் பெருங்கனவாக விளைந்திருக்கிறது. இளம் தலைமுறை எங்காவது ஓரிடத்தில் வேலை செய்தால் போதும் என்ற மனநிலையில் இருந்து விடுபட்டு நாம் நூறு பேருக்கு வேலை தரவேண்டும் என்ற சிந்தனையோடு கல்வி நிறுவனத்தை விட்டு வெளியே வரவேண்டும். அந்த பக்குவத்தை மாணவர்களுக்கு உருவாக்குவதற்காகத்தான் முன்னோடிகளையும் முன்மாதிரிகளையும் அவர்கள் முன்னால் நிறுத்துகிறோம்...’’ என்கிறார் அகிலா.

காக்னிசன்ட் நிறுவனத்தின் தலைவர் லட்சுமி நாராயணன், மெடால் நிறுவனத்தின் நிறுவனர் ராஜி வெங்கட்ராமன், சுரேஷ் கல்பாத்தி, நாராயணன் உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களும் நிறுவனங்களின் நிறுவனர்களும் டை சென்னை அமைப்பின் பயிற்சி முகாம்களில் பங்கேற்று வழிகாட்டுகிறார்கள். இளம் தலைமுறைக்கு இருக்கும் இரண்டு பிரச்னைகள், அவநம்பிக்கை, தாழ்வு மனப்பான்மை. அவற்றைப் போக்கி, ஒரு வளமான வாழ்க்கையை அவர்களுக்கு அடையாளம் காட்டுகிறது இந்த அமைப்பு. நம்பிக்கைதானே
வளர்ச்சிக்கு விதை!




மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நிவாரண நிதியாக பாலிவூட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ரூ 1 கோடி வழங்கியுள்ளார்.

இந்த நிதியை தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ளார்.

ஷாருக்கான், அமீர்கான் போன்ற நடிகர்களை நாட்டை விட்டே விரட்ட வேண்டும் என்று சொன்ன இராம.கோபாலன் இதுவரை எந்த நிதியும் அறிவிக்காமல் இருப்பது அவர்களின் இந்துத்துவா கள்ள வேடங்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறது




அடுத்த  இப்போ பெய்த மழையைவிட பலமடங்கு மழைக்கு வாய்ப்பு என தேசிய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. ஜப்பானிய வான்வெளி ஆய்வு முகவர் ஒருவரும் நாசாவும் வெளீயிட்டுள்ள அறிக்கையின்படி சென்னையில் பெய்வது மழை அல்ல  EL Nino சூழற்சிப்  புயல் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 250 Cm வரைக்கும் பெய்த இந்த சுழற்சிப் புயல் மீண்டும் சென்னையை தாக்கும் வாய்ப்புக்கள் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னையே முழுகி போக வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுவதனால் சென்னை கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கி உடனே நகரும்படி பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் நாசா வானிலை மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் இதுவரை அடித்த சுழற்சிப் புயலால் பெய்த மழையினால் தென் இந்தியாவின் அதாவது தமிழ்நாட்டு கடற்கரையோரங்கள் குறிப்பாக சென்னை நகரம் கடுமையாக  பாதிக்கப்பட்டதுடன், 260 க்கும் மேற்பட்டோர் இக்கடும் மழை வெள்ள அனர்த்தத்தினால் உயிரிழந்ததாகவும் மேலும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
மேலும் தென் இந்தியாவை தாக்கிய இச் சுழற்சிப் புயல் இலங்கையையும் தாக்கும் எனவும் நாசா மேலும் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில்  இலங்கையில் பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் அவசர அவசரமாக திறந்து விடப்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் சாலைகளும் வீதிகளும் நீரில் மூழ்கி காணப்படுகின்றன.
மட்டக்களப்பு-பொலநறுவை நெடுஞ்சாலையில் மன்னம்பிட்டிய மற்றும் கல்லல ஆகிய இடங்களிலும், மன்னார்-புத்தளம் சாலையில் எழுவான்குளத்திலும் இப்படியான நிலை காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவிக்கின்றது.

புத்தளம், மன்னார் மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் பாதுப்புகள் மற்றும் இடம்பெயர்வு தொடர்பான அறிக்கை பதிவாகியுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மையம் வெளியிட்டுள்ளது.்
வானிலை அவதான நிலையம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி மழையுடன் கூடிய கால நிலை இலங்கையிலும் நீடிக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

நிஜ வாழ்வில் 2 கிலோ எடையைக் குறைக்கவே படாத பாடுபடுகிறோம். கொஞ்சம் எடை போடலாம் என்றால் அதுவும் அத்தனை சீக்கிரம் நடப்பதில்லை. ஆனால், அடுத்த படத்துக்காக 10 கிலோ எடை கூடினார் கமல், 18 கிலோ எடை குறைந்தார் நமீதா என்று சினிமா நட்சத்திரங்கள் பற்றி அவ்வப்போது சாதாரணமாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.


`ரெட்’ படத்தில் வெயிட் போட்டிருந்த அஜித், ‘பரமசிவன்’ படத்தில் பாதியாக வந்து நின்று தெறிக்க வைத்தார். சமீபத்திய சிக்ஸ்பேக் சீஸனில் சூர்யா முதல் பரத், அதர்வா வரை பலரும் கலந்து கொண்டு இந்திய அளவில் டிரெண்டானார்கள். எல்லோரையும் விட, படத்துக்குப் படம் கூடுவிட்டுக் கூடு பாயும் விக்ரம் செய்வதெல்லாம் அநியாயம்… அக்கிரமம்!‘சேது’வில் இளைத்துக் காட்டியவர், ‘தில்’ படத்தில் கட்டுமஸ்தானார். 

‘ஐ’ படத்தில் அதிர வைத்தார். 14 கிலோ எடை குறைத்தார், ஒரு பாடல் காட்சிக்காக 110 கிலோ வரை எடை கூடினார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. இந்த வெயிட் மேஜிக் வரிசையில் லேட்டஸ்ட்டாக சேர்ந்திருக்கிறார் அனுஷ்கா. ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் குண்டுப் பெண்ணாக நடிப்பதற்காக எடை கூடிய அனுஷ்கா, இப்போது மீண்டும் பழைய எடைக்கு வருவதற்கான முயற்சியில் இருக்கிறார் என்கிறார்கள். சினிமா நட்சத்திரங்களுக்கு மட்டும் எப்படி இந்த வெயிட் மேஜிக் சாத்தியமாகிறது?

கமல்ஹாசன் உள்பட பல சினிமா நட்சத்திரங்களின் ஆஸ்தான ஃபிட்னஸ் டிரெயினரான ஜெயக்குமாரிடம் கேட்டோம்...‘‘ஒருவருக்கு சராசரியாக 2 ஆயிரத்து 400 கலோரி சக்தி உள்ள உணவுகள் தேவை. இது ஒருவருடைய வேலை, எடை, வயது போன்றவற்றின் அடிப்படையில் மாறுபடும். இந்த தேவையான கலோரி அளவை மட்டுமே சரியாக எடுத்துக்கொண்டால் அதே எடையைத் தக்கவைத்துக் கொள்ளலாம், கலோரி கள் தேவைக்கும் அதிகமானால் எடையும் அதிகமாகும். போதுமான கலோரிகள் எடுத்துக் கொள்ளாத பட்சத்தில் எடை குறையும். புரத உணவுகளை எடுத்துக்கொண்டு, உடற்பயிற்சிகள் செய்தால் தசைகள் வலிமையடையும். உடற்பயிற்சி இல்லாவிட்டால் கொழுப்பாக எடை கூடும். இதுதான் அடிப்படை.

அனுஷ்காவை பொறுத்த வரை, தனது உடல்வாகின் தேவைக்கும் அதிகமாக மூன்று வேளை உணவு, இடையிடையே நொறுக்குத்தீனிகள், உடற்பயிற்சிகள் செய்யாமல்தான் இப்படி எடை கூடியிருக்கிறார். பொதுவாக, பெண்களுக்கு இயல்பாகவே ஒரு பருவத்தில் எடை கூடும். சிம்ரன், மீனா போன்றவர்களுக்கு டிரெயினராக இருந்திருக்கிறேன்.

திருமணமாகும் வரை உடலை டிரிம்மாக பராமரித்தவர்கள், ஒரு கட்டத்தில் பரவாயில்லை என்று விட்டுவிட்டார்கள். திருமணம், குழந்தை பிறப்பு போன்ற காரணங்களால் எடை கூடும் பெண்கள் அதன்பிறகு எடையைக் குறைக்க முடிவதில்லை. இந்த நிலையில், அனுஷ்கா தானாகவே முன்வந்து ஒரு படத்துக்காக எடை கூடியிருப்பது துணிச்சலான முயற்சி. ஆனால், அவர் சாதாரணமாக இதை செய்திருக்க மாட்டார். முறைப்படி ஒரு மருத்துவரையோ, ஃபிட்னஸ் டிரெயினரையோ ஆலோசித்துத்தான் இந்த முயற்சியில் ஈடுபட்டிருப்பார்.

அவர் யோகா டீச்சர் என்பதால் அவருக்கு இந்த விவரங்கள் நன்றாகவே தெரிந்திருக்கும். எடையைக் கூட்ட உணவு மட்டுமே போதும். எடையைக் குறைக்கவோ உணவுமுறையிலும் மாற்றம் செய்ய வேண்டும், கடினமான உடற்பயிற்சிகளும் செய்ய வேண்டி இருக்கும் என்பதும் அவருக்குத் தெரிந்திருக்கும்.பல சினிமா நட்சத்திரங்களும் இதுபோல் புரொபஷனலாகத்தான் எடையைக் குறைத்துக் கூட்டுகிறார்கள்.

அவர்களைப் போல நாமும் எடையைக் கூட்ட வேண்டும், குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தகுதி வாய்ந்த ஃபிட்னஸ் டிரெயினரின் மூலமே முயற்சிகளைச் செய்ய வேண்டும். குறிப்பாக, உடலில் பிரச்னை எதுவும் இருந்தால் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எடை சம்பந்தப்பட்ட முயற்சிகளைச் செய்யவே கூடாது’’ என்கிறார். எடையைப் பராமரிப்பதில் நாம் செய்கிற தவறுகள் என்னென்ன?

‘‘சிலர் நள்ளிரவில் தூங்கச் செல்கிறார்கள். காலை 10 மணிக்கு மேல் எழுகிறார்கள். இதுபோல தாமதமாகத் தூங்கும்போது ஹார்மோன் மாற்றங்கள் தலைகீழாக நடக்கும். தூக்கமின்மையால் கார்டிசோல் ஹார்மோன் அதிகமாக சுரந்து இடுப்பில் சதை போடும். எளிதில் கவலைப்படுகிறவர்களுக்கு, உணர்ச்சிவசப்படுகிறவர்களுக்கு, டென்ஷன் காரணமாக இந்த கார்டிசோல் ஹார்மோன் அதிகம் சுரக்கும். ஒருவர் சரியாக சாப்பிட்டு, உடற்பயிற்சி செய்தாலும் நேரம் கடந்து சாப்பிட்டு, இரவு சரியாக தூங்காமல் தவறான லைஃப் ஸ்டைலில் இருந்தால் எடை போடும்.

மூளையில் இருந்து சுரக்கும் Growth hormone ஒருவர் இளமையாக இருக்கவும், தசைகளின் வளர்ச்சிக்கும், கொழுப்பைக் கரைக்கவும் பயன்படுகிறது. இந்த ஹார்மோன் உடற்பயிற்சி செய்யும்போதும், இரவில் தூங்கும்போதும்தான் அதிகம் சுரக்கும். அதனால்தான் இரவு தூக்கத்தை Beauty sleep என்கிறார்கள். சீக்கிரமாகத் தூங்கி அதிகாலையில் எழுகிறவர்களுக்குத்தான் Growth hormone மூலமாகப் பலன்கள் கிடைக்கும். அதனால் இரவு உறக்கம் என்பது எடை பராமரிப்பில் மிகவும் அவசியம்.

இன்னொன்று இயற்கைக்கு எதிரான எந்த செயலையும் செய்யக் கூடாது. ‘மருதநாயகம்’ ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை கமல் சாருக்கு டிரெயினராக இருக்கிறேன். ஒவ்வொரு படத்துக்குத் தகுந்தாற்போலவும் உடலை மாற்றுவார். ஆனால், அது முறைப்படிதான் நடக்கும்.

‘ஆளவந்தான்’ படத்தின் நந்து கேரக்டருக்காக 12 கிலோ எடை கூடினார். அதே படத்தில் விஜய் என்கிற இன்னொரு கேரக்டருக்காக எடையைக் குறைத்து ஃபிட்டாக இருக்க வேண்டும் என்ற ரிஸ்க் இருந்தது. அதற்காக இயற்கைக்கு எதிரான எந்த முயற்சிகளையும் நாங்கள் செய்யவில்லை. பாடி பில்டர்கள் செய்யக் கூடிய கடினமான எடைப் பயிற்சிகளை செய்தார். சிக்கன், மீன் போன்ற புரதம் நிறைந்த உணவுகளை நிறைய எடுத்துக் கொண்டார். புரோட்டீன் பவுடரை அமெரிக்காவில் இருந்து வரவழைத்தோம். விஜய் கேரக்டர் எடுக்கும்போது அதற்குத் தகுந்தாற்போல உணவை மாற்றி, எடை பயிற்சிகளைக் குறைத்தோம்.

 இயற்கையான உணவுமுறை, உடற்பயிற்சியின் மூலமே எடையைக் கூட்டி, குறைக்க வேண்டும். இயற்கைக்கு எதிரான வழிகள், செயற்கையான சிகிச்சைகள் உடனடியாகப் பலன் தந்தாலும் எதிர்காலத்தில் பெரிய பக்கவிளைவுகளைத் தரும்’’ என்று  எச்சரிக்கிறார்.

நடிகர்கள் எப்படி தயாராகிறார்கள் என்று ஆன்டி ஏஜிங் மற்றும் லைஃப் ஸ்டைல் மேனேஜ்மென்ட் நிபுணரான கௌசல்யா நாதன் விளக்குகிறார்.
‘‘பல  படங்களில் நடிகர், நடிகைகளுடன் பணிபுரிந்திருக்கிறேன். படம்  தொடங்குவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே நடிகர்களைத் தயார் செய்ய ஆரம்பித்துவிடுவோம். உடல்ரீதியாக ரத்தப் பரிசோதனை, ஹார்மோன் பரிசோதனை, வைட்டமின், மினரல் பரிசோதனை செய்துவிடுவோம்.

அதன்பிறகு, அவர்களின் உடல்நிலைக்கு ஏற்றவாறு என்னென்ன உணவுகள் சாப்பிட  வேண்டும், என்னென்ன உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் என்று  தீர்மானிப்போம். எடையைக் குறைக்க வேண்டும் என்றால் மாதத்துக்கு 2  கிலோ எடையைக் குறைக்க வைப்போம். 3 மாதங்களில் 6 கிலோ எடை குறைந்தவுடன்  அடுத்தகட்டமாக மீண்டும் ஒரு டயட்டை வடிவமைப்போம், உடற்பயிற்சிகளைத் தீர்மானிப்போம். அதன்பிறகு, மாதம் ஒரு கிலோ குறைந்தால்  போதும்.

உணவில்  காய்கறிகள் சூப் சேர்ப்போம், புரதச்சத்துகளைக் கொஞ்சம் பேலன்ஸ் பண்ணுவோம்.  உடலின் நிலையைப் பொறுத்து சர்க்கரை சேர்த்தோ சேர்க்காமலோ ஜூஸ் சாப்பிட  வைப்போம். இதுபோல பல கட்ட முயற்சிகள் நீங்கள் திரையில் பார்ப்பதற்குப்  பின்னால் இருக்கிறது’’ என்பவர், திருமணத்துக்குப் பின் நடிகைகள் ஏன்  குண்டாகிவிடுகிறார்கள் என்பதையும் விளக்குகிறார்.

‘‘பெண்களுக்கு  இயல்பாகவே திருமணம், குழந்தை பிறப்புக்குப் பின் எடை கூடிவிடும். இதற்கு  கர்ப்ப காலத்தில் எடை கூடுவது முக்கிய காரணமாக இருக்கிறது. கர்ப்ப  காலத்தில் 12 கிலோ வரை எடை கூடலாம். இந்த எடையைக் கண்காணிக்க வேண்டும்.  குழந்தை பிறந்த நான்காவது மாதத்திலிருந்து தங்களுடைய எடையைக் குறைக்க  முயற்சிக்க வேண்டும்.

குழந்தைக்கு ஒரு வயது ஆகும்போது, அம்மா பழைய எடைக்கு  வந்திருக்க வேண்டும். இந்த கட்டத்தில் அலட்சியமாக இருந்தால் அதன்பிறகு  எடையைக் குறைப்பது சிரமமாகிவிடும். பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்  பிரச்னை இருந்தாலும் எடையைக் குறைப்பது சிக்கலாகும். மெனோபாஸ் நிலை, ஹார்மோன் கோளாறுகளால் அதிகம் சாப்பிட வேண்டும் என்கிற மனநிலை ஏற்படுவது போன்ற பல காரணங்கள் இருக்கிறது. அதனால், அந்தந்த காலகட்டங்களில் எடையைக் கண்காணித்துக் கொண்டே இருப்பது அவசியம்’’ என்கிறார் டாக்டர் கெளசல்யா.

மூளையில் இருந்து சுரக்கும் Growth hormone ஒருவர் இளமையாக இருக்கவும், தசைகளின் வளர்ச்சிக்கும், கொழுப்பைக் கரைக்கவும் பயன்படுகிறது. இந்த ஹார்மோன் உடற்பயிற்சி செய்யும்போதும், இரவில் தூங்கும்போதும்தான் அதிகம் சுரக்கும். அதனால் இரவு உறக்கம் என்பது எடை பராமரிப்பில் மிகவும்
அவசியம்...

எடை கூடுவதற்கும் குறைவதற்கும் என்ன காரணம் என்று நாளமில்லா சுரப்பிகள் சிறப்பு மருத்துவரான ராம்குமாரிடம் கேட்டோம்.
‘‘தேவைக்கும் அதிகமாக சாப்பிடுவது, நொறுக்குத் தீனிகள், நேரம் தவறி சாப்பிடுவது, உடற்பயிற்சியே இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் எடை கூடும். இந்த காரணங்களை நாமே தவிர்த்துவிட முடியும்.

மருத்துவரீதியாக குறை தைராய்டு, தூக்கமின்மை, அதிகமாக சுரக்கும் இன்சுலின், ஸ்டீராய்டு ஹார்மோன், மூளையில் இருக்கும் பிட்யூட்டரியில் ஏற்படும் சமன்குலைவு, மருந்துகள் எடுத்துக்கொள்வது, பாலிசிஸ்டிக் ஓவரிஸ் சிண்ட்ரோம், மாதவிலக்கு சிக்கல் போன்ற காரணங்களால் எடை கூடும். கட்டுப்பாடற்ற நீரிழிவு, அதீத தைராய்டு, மன அழுத்தம், உணவைப் பார்த்தாலே அலர்ஜியாகும் அனோரெக்ஸியா நெர்வோஸா போன்ற மன நோய்களால் எடை குறையலாம். இதுபோன்ற உடல்ரீதியான பிரச்னைகள் இருப்பவர்கள் என்னதான் உணவைக் குறைத்தாலும், என்னதான் உடற்பயிற்சிகளைச் செய்தாலும் எந்த பயனும் கிடைக்காது. அடிப்படைப் பிரச்னையைச் சரி செய்தால்தான் பலன் கிடைக்கும்’’ என்கிறார் டாக்டர் ராம்குமார்.

நடிகர், நடிகைகள் திடீரென்று எடை குறைந்து, எடை அதிகமாவதால் எதிர்காலத்தில் அவர்களுக்கு பாதிப்பு எதுவும் வருமா?‘‘உடல் ஒரு குறிப்பிட்ட எடையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும். திடீரென்று எடை குறையும்போது அதன் வேலைகள் குறையும். மீண்டும் எடை கூடும்போது அதிக வேலைப்பளு ஏற்படும். இதனால் உடல் குழப்பமாகும். குறிப்பாக, நடிகர்கள் அடிக்கடி இதுபோல் எடையைக் குறைத்து, எடையை ஏற்றுவதால் உடலின் உள் உறுப்புகள் பெரிதும் பாதிக்கப்படும்.

அதிலும் எடையைக் குறைக்க முயற்சிக்கும்போது முதலில் நீர்ச்சத்து குறையும்.  வெளியேறும் புரதம் சிறுநீரகத்தைப் பாதிக்கும். உடலின்  தசைகள் உடையும், மன உளைச்சல், தூக்கமின்மை போன்றவை அதிகமாகும். உடலின்  மெட்டபாலிசம் மாறும். நடிகர்களுக்கு இதன் பாதிப்பு இளவயதில்  தெரியாவிட்டாலும், வயதாகும்போதும் உடலின் செயல்திறன் குறையும்போதும்  தெரிய  ஆரம்பிக்கும். ஏற்கெனவே, உறுப்புகள் பாதிக்கப்பட்டிருந்தால் அது  தீவிரமாகும்.
சிறுநீரகப் பாதிப்பைத் தொடர்ந்து இதயத்தின் செயல்திறன், கல்லீரல், கணையம், வயிறு போன்ற உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகளின் தொடர்ச்சியாக மூளையே கடைசியில் பாதிக்கப்படலாம்.

ஒரு டாக்டர் என்ற முறையில், விக்ரம் போல எடையைக் கூட்டிக் குறைப்பதெல்லாம் மிகப்பெரிய ரிஸ்க் என்றுதான் சொல்வேன். இது பெரிய தவறு. சாதாரணமாக 6 கிலோ, 7 கிலோ வரை எடை கூடி குறைவதுகூட பாதிப்பில்லை. ஆனால், 60 கிலோவிலிருந்து 80 கிலோவாக அதிகரிப்பது, உடல் எடையில் 20 சதவிகிதத்துக்கும் மேல் குறைப்பது என்று நம் இஷ்டத்துக்கு உடலை மாற்றினால் உடல் எந்த அளவுக்கு அடிபடும் என்பதை யோசித்துப் பார்த்தாலே தெரியும்.

ஜங்க் ஃபுட் உணவுகளைத் தவிர்த்து, சரிவிகிதமாக உணவுகளை எடுத்துக் கொண்டு, போதுமான உடற்பயிற்சிகள் செய்தாலே போதும். குறைந்தபட்சம் அரை மணி நேர நடைப்பயிற்சியே போதும். இதைத் தவிர்த்து வேறு எந்த குறுக்கு வழியிலும் எடை முயற்சிகளைச் செய்யக் கூடாது!’’

எடையைக் குறைக்க முயற்சிக்கும்போது முதலில் நீர்ச்சத்து குறையும். வெளியேறும் புரதம் சிறுநீரகத்தைப் பாதிக்கும். உடலின்  தசைகள் உடையும், மன உளைச்சல், தூக்கமின்மை போன்றவை அதிகமாகும். சிறுநீரகங் களைத் தொடர்ந்து இதயத்தின் செயல்திறன், கல்லீரல், கணையம், வயிறு போன்ற உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகளின் தொடர்ச்சியாக மூளையே கடைசியில் பாதிக்கப்படலாம்
கண்ணே... மணியே...

கோபத்திலும் தூக்கமின்மையாலும் தூசு விழுந்தாலும் கண்கள் சிவப்பது இயற்கை. இப்படி எந்தக் காரணமே இல்லாமல் சிலருக்கு அடிக்கடி கண்கள் சிவந்து போவதுண்டு. ``கண் சிவக்க வைரஸ் தொற்று, அதிக சூரிய ஒளி என வேறு காரணங்களும் உண்டு’’ என்கிற கண் மருத்துவர் திரிவேணி, அது பற்றி விளக்குகிறார்.

``அடிக்கடி கண் சிவப்பதற்கு  அலர்ஜி, தூசு, நாய், பூனை முதலான வளர்ப்பு பிராணிகளின் ரோமம், பூக்களில் உள்ள மகரந்தத் தூள், ரசாயனம் போன்றவை முக்கிய காரணங்கள்.  இவை கண்களை சிவக்கச் செய்வதுடன்,  கண்களில் அரிப்பையும் உண்டாக்கும். அரிப்பு அதிகரிக்கும்போது, கண்களில் நீர் வடிய ஆரம்பிக்கும்.

கண்நோய் (Conjunctivitis) காரணமாகவும் கண்கள் அடிக்கடி சிவக்கலாம்.  வைரஸ் தொற்று காரணமாக, கண்கள் சிவந்து போகும். அதோடு, இரண்டு கண்களிலும் வலி, உறுத்தல் ஏற்பட்டு, நீர் வர ஆரம்பிக்கும். இந்த நீர் மற்றவர் கண்களில் படும்போது, கண் நோய் பரவும். கருவிழி அல்லது இமைகளில் தூசு மற்றும் பிசிறு (Foreign Body) ஒட்டிக்கொள்வதால் கண்கள் சிவப்படையும். அந்த நேரங்களில்  கண்கள் இமைக்கும்போது உறுத்தல் இருக்கும்.

கண்ணில் ஏதேனும் தூசு விழுந்தால், கண்களை கசக்கக்கூடாது. அப்படி செய்தால், பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு அதிகம். இவர்கள், உடனடியாக குளிர்ந்த நீரால் கண்களை நன்கு கழுவ வேண்டும். பின்னர், கண் மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். கண்களைக் கசக்கினாலோ, பெரிய அளவில் பிசிறு அல்லது பூச்சி விழுவதால்,  கண்ணின் வெண்ணிறப் பகுதியில் காயம் ஏற்பட்டு,  ரத்தம் கட்டலாம்.

இதற்கு சுய மருத்துவம் செய்வதை நிறுத்தி, உடனடியாக மருத்துவரை அணுகி  பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். டாக்டர்கள், கண்ணில் லென்ஸ், விழித்திரை ஆகியவற்றை பரிசோதனை செய்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவார். பாதிப்புக்குச்  சிகிச்சை எடுத்தால், ஆரம்ப நிலையிலேயே அதனை  தடுக்க முடியும்.

அதிக நேரம் சூரிய ஒளியில் இருந்தால் விழிவெண்படலத்தில் சதை வளர்ந்து கருவிழிக்குப் பரவுவதும் அடிக்கடி கண் சிவந்து போவதற்கு காரணமாகலாம்.  கருவிழியில் புண் (Corneal Ulcer) ஏற்படுவதும் கண்கள் சிவக்க காரணமாக உள்ளது.   கண் அழுத்த நோயால் (Glaucoma) கண்கள் அடிக்கடி சிவக்கும். இந்த நோய் Open Angle, Closed Angle என இரு வகைப்படும். Open Angleல் கண் நோய்க்கான எந்த  அறிகுறியும் இருக்காது. உடலில் ஏற்படுகிற கட்டி, வீக்கம், உடல் தாங்குதிறன் நோய் (Auto Immune Disease) போன்றவற்றாலும் வயதானவர்களுக்கு அடிக்கடி கண் சிவக்கும்.

உதாரணத்துக்கு, மூட்டுவலியால் (Rheumatoid Arthritis) அவதிப்படும் வயோதிகர்களுக்கு அடிக்கடி கண்கள் சிவக்கும். இதனால், கருவிழியில் புண் ஏற்படலாம். பார்வை மங்கும். கண்களில் வலி இருக்கும். அப்போது கண் மருத்துவரிடம் சென்று முழு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கண் சிவந்து போவதற்கான சிகிச்சையை ஆரம்பிக்கும்போதே வேறு நோய்களுக்கான அறிகுறிகள் உள்ளதா என்பதை அறிய ரத்த பரிசோதனை செய்ய வேண்டும்.

நம்முடைய கண்கள் ஒரு நிமிடத்தில் 14 முதல் 18 வரை  இமைக்கும். கம்ப்யூட்டர் முன் அமர்ந்து அதிக நேரம் வேலை செய்பவர்கள் கண்களை இமைக்காமல்  வேலை செய்வார்கள். அதனால், இவர்களுடைய கண்கள் விரைவில் உலர்ந்து போகும். இதன் காரணமாகவும் கண்கள் சிவக்கும். கருவிழிக்கு ரத்த ஓட்டம் கிடையாது. உடலில் ஆக்சிஜன் குறைந்தால்  மணல் விழுந்த மாதிரி கண்கள் உறுத்த ஆரம்பிப்பதாலும், கண்கள் சிவக்கலாம். எந்தக் காரணமாக இருந்தாலும், சுய மருத்துவம் வேண்டாம்.’’

மூட்டு வலியால் அவதிப்படும் வயோதிகர்களுக்கு அடிக்கடி கண்கள் சிவக்கும்.  இதனால், கருவிழியில் புண் ஏற்படலாம். பார்வை மங்கும். கண்களில் வலி இருக்கும். அப்போது கண் மருத்துவரிடம் சென்று முழு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்...

-







#‎தமிழக‬ மக்களின் வாக்குப் பிச்சைக்காக ‪#‎இனவாதத்தை‬ விதைத்து ‪#‎அரசியல்‬ பிளைப்பு நடத்தும் ‪#‎ஆசாமிகளே‬...
யார் இந்த ‪#‎சங்கக்கார‬..??
இவன் ஒரு ‪#‎தமிழனா‬...??
இவன் ஒரு ‪#‎நடிகனா‬....??
இவன் ஒரு ‪#‎அரசியல்வாதியா‬..??
இவன் ஒரு ‪#‎இந்தியனா‬..??
இவன் தமிழக மக்களிடத்தில் ஏதும் ‪#‎தேவையுடையவனா‬..??
இவன் யாருமில்லை..
மதங்களைக் கடந்து மனிதநேயத்தை நேசிக்கத் தெரிந்த ஓர் சாதாரண ‪#‎மனிதன்‬...
‪#‎சிங்கள‬ ஆட்சியின் கீழே ஓர் சிங்களவனாய் இருந்து கொண்டே ‪#‎தமிழ்‬ மக்களுக்காக குரல் கொடுத்ததோர் தந்தைக்குப் பிறந்த ‪#‎தங்க‬ ‪#‎மகன்‬ இவன்.
ஆயிரம் அரசியல் அழுத்தங்கள் வந்தபோதும் கூட, அநீதிக்குத் தலை வணங்காத ‪#‎தர்மத்‬ ‪#‎தாயின்‬ புதல்வன் இவன்.
விளையாட்டிலும் சரி, நிஜ வாழ்க்கையிலும் சரி ‪#‎கரை‬ ‪#‎படியாத‬ கரங்கழுக்கு சொந்தக்காரன் இவன்..
அபாரமான சாதனைகள் செய்தும் கூட அமைதின் இலக்கணமாய்த் திகழும் ‪#‎அற்புத‬ ‪#‎மனம்‬ படைத்தவன் இவன்..
தன் ‪#‎பிறந்த‬ நாளை திருவிழாவைப் போல் கொண்டாடிக் கழிக்கின்ற சக வீரர்களுக்கு மத்தியில் தானும் இரத்த தானம் செய்து, தன் ரசிகனையும் இரத்த தானம் செய்யச் சொன்ன ‪#‎உத்தமன்‬ இவன்..
‪#‎இலங்கை‬ வீரர்கள் ‪#‎சென்னை‬ மன்னை மிதித்தால் கல்லால் அடிப்போம் என்று சொன்ன பரந்த மனம் படைத்த மக்களின் முன்னால்,
இன்னார் செய்தாரை ஒருத்தல், அவர் நான நன்னயம் செய்துவிடல் என்ற வல்லுவன் வாக்கிற்கு ஏற்ப வாழ்ந்து காட்டியவன் இவன்..

பாடசாலை மாணவர் தொடக்கம், பாமர மக்கள் வரை ஆயிரம் ‪#‎உதவிகள்‬ செய்தும் தன்னை அடையாளம் காட்ட நினைக்காதவன் இவன்..
நான் சிங்கழவன்,
நான் தமிழன்,
நான் முஸ்லிம்,
நான் கிரிஸ்தவன்,
நான் மலாயன், என்று சொல்வதை விட நான் ஓர் இலங்கையன் என்று சொல்வதில் எப்போதுமே பெருமைப்படுகின்ற தேசப் பற்றாளன் இவன்..

அனைத்துக்கும் மேலே ‪#‎தாயகத்தை‬ நேசிக்கின்ற ஒவ்வெரு இலங்கையரின் இதயங்களில் வாழும் எங்கள் அன்பான ‪#‎அண்ணன்‬ இவன்..
நாங்கள் ‪#‎குமார்‬ #சங்கக்கார என்ற கிரிக்கட் வீரனின் ரசிகர்கள் மட்டுமல்ல..
குமார் சங்கக்கார என்ற நல்ல மனிதனின் ரசிகர்கள்....
News Media - புதிய தலைமுறை, தந்திTV, Kokki Kumaru
உண்மையை உலகம் அறிய முடிந்த அளவு ★Share★ செய்யுங்கள்.....


அஸ்ஸலாமு அலைக்கும்
ஏதஸ் மின்னந் தாரா மிலேச்ச
ஆச்சார்யண ஸமின் வித மஹாமத்
இதிக்கியாத சிஷ்ய சாகா ஸமன்வித
நிருஷ் சேவ ஹமாதே மருஸ் தல
நிவாஸினம்
பவிஷ்ய புராணம், பாகம் 3, சுலோகம் 3,
சூத்திரம் 5-8

தமிழில் : ஒரு அன்னிய நாட்டில் ஓர்
ஆன்மீக சீர்த்திருத்தவாதி,
தமது சிஹ்யர்களுடன் வருவார். அவர்
பெயர் மஹாமத். அவர்
பாலைவனத்தைச் சார்ந்தவராக
இருப்பார்
லிங்கச்சேதி சிகா ஹுன
சுமக்சுறு தாரி ஸாதூஷக
உச்சாலாபி ஸாவ பஹீ
பவிஷ்யதி ஜனோமம முஸலை நைஸ் மஸ்கார
பவிஷ்ய புராணம், பாகம் 3, சுலோகம்
25, சூத்திரம் 3
தமிழில் : அவர்கள் லிங்கச்சேதம் (சுன்னத்)
செய்வார்கள். தலையில்
குடுமி இருக்காது.
தாடி வைத்திருப்பார்கள்.
சப்தமிட்டு அழைப்பார்கள் (பாங்கு).
முஸ்லிம் என்று அறியப்படுவார்கள்.
அனஸ வந்தா ஸக் பதிர்
மாமஹே மேகாவா சேதிஷ்
ஷடோ அஸுரோ பகோண நிறை விஷேனோ அக்னேத
சாப்பி ஸஹஸ்னரர் வைச்சுவாரை திறையும்
ருனா ஹீசிகேத
ரிக்வேத மந்திரம் 5, ஞ்க்தம் 28
தமிழில் : உண்மையாளரும், அறிவாளியும்,
பலசாலியுமான
மாமஹே எனக்கு அருள் புரிவார். அவர்
முழிமையானவர். முழு உலகிற்கும்
அருட்கொடையானவர்.
பத்தாயிரம் பேர்களுடன் புகழ்
பெற்றவர்.
அல்லோ ஜியேஸ்டம் பரமம் பூர்ணம்
பிரஷ்மாண்டம் அல்லாம்
அல்லோ அல்லாம் ஆதல்லா பூக மேகம்
அல்லா பூகணி வாதகம்
அல்லா பஞ்ஞென
ஹுதா ஹிறுத்தவா அல்லா சூரிய
சந்திர ஸர்வ திவ்வியாம இந்திராய
பூர்வம் மாயா பரமந்த
ரிஷா அல்லா பித்ததிவ்விய அந்தரிஷம்
விசுவரூபம் இல்லாம் கபர இல்லாம்
இல்லல்தீ இல்லல்லா ஓம்
அல்லா இல்லல்லா அனாகிஸ்
வரூபா அத்தர் வணா சியாமா ஹும்
ஹிரிம் ஜனான பகன ஸித்தான
ஜலசாரன் அதிர்டம் குருகுரு புடஸபரஸட
ஸமஹாரனீ ஹூம் ஹிரீம் அல்லா ரசூல
மஹமத சுபரஸ்
அல்லா அல்லா இல்லல்லலேதி
இல்லல்லா
அல்லோப நிஷத் (அதர்வன வேதம்) 1:10
தமிழில் : அல்லா முழுமையானவர்,
எல்லா பிரபஞ்சமுமவனுடையது. சிவனின்
ஸ்தானத்தை அல்ங்கரிக்கும் மஹாமத்
அல்லாவுடைய தூதராய் இருக்கின்றார்.
அல்லா எல்லாஎல்லா பூமியையும்
இயக்குகின்ற இறைவன். பூமியின்
பரிபாலனும் அவனே! இறவன்
ஒருவனேயன்றி வேறு இல்லை. அரூபியான
இறைவனின் ஓங்கார நாதத்தைப்
பாருங்கள். ஓம் ஹரீம் மந்திரங்கள்
அடங்கிய அதர்வண வேதத்தை இறக்கிய
இறைவனே மக்களையும், பசுக்களையும் ஏனைய
எல்லாவற்றையும் படைத்தான்.
அரூபியான அந்த
ஆண்டவனையே துதி செய்யுங்கள்.
ஓம் ஹிர்ரீம் மந்திரம் மூலம் அசுர
வர்க்கத்தை அழிக்கும் மஹாமத்
அல்லவுடைய தூதர் ஏக இறைவனைத் தவிர
வேறு த்ய்வமில்லை.
உன் தேவனாகிய
கர்த்தர் உன் சனத்தினின்றும், உன்
சகோதரர்களிடத்தினின்றும் என்னைப் போல் ஓர்
தீர்க்கதரிசியை உனக்காக
ஏற்படுத்துவார். அவருக்குச்
செவி கொடுப்பாயாக .
உபாகமம் 18, அதிகாரம், வசனம் 15
உன்னைப்போல் ஒரு தீர்க்கதரிசியை நாம்
அவர்களுக்காக அவர்களுடைய
சகோதரர்களின் நடுவிலிருந்து எழுப்பம்
பண்ணி நம் வார்த்தைகளை அவருடைய
வாயில் வைத்தருள்வோம். நாம்
அவருக்கு கற்பிப்பதை அவர்களுக்குச்
சொல்லுவார்.
நமது பெயரால் அவர்
சொல்லும் வார்த்தைகளுக்குச்
செவி கொடாதவன்
எவனோ அவனை நாம் தண்டிப்போம். உபாகம் 18, அதிகாரம்18, வசனம் 19

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ.
அன்பான சகோதரர்கள் ..
அதாவது ஈஸா (அலை.) அவர்களுடன் நெருங்கி இருந்த பர்னபாஸ் என்பவர் எழுதிய சுவிசேம் கிடைத்து அதனை மிகப் பெரிய கிருஸ்தவ மதகுருமார்கள் சாமானிய கிருஸ்தவர்களுக்கு தெரியாமல் மறைத்து வைத்து இருந்தனர் ஆனால் அது உலகத்திர்க்கு தெரிய வந்துள்ளது இதனால் இனிமேல் அல்லாஹ்வின் நாட்டப்படி அதிகமான கிருஸ்தவர்கள் இனி இஸ்லாத்தை தங்கள் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொள்வார்கள்
அங்காரா: இஸ்லாத்தின் இறுதி தூதரான முஹம்மது நபியை குறித்து இயேசு (ஈஸா நபி) முன்னறிவிப்புச் செய்யும் 15 நூற்றாண்டுகள் பழமையான பைபிள் துருக்கியில் கிபி 2000 மாவது ஆண்டில் கண்டெடுக்கப்பட்டது.
பர்ணபாஸின் சுவிசேஷம் என்று அழைக்கப்படும் இந்தநூல் 12 ஆண்டுகளாக துருக்கியில் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. பைபிளில் கூறப்படும் பர்ணபாஸ் இயேசுவின் முக்கியசீடராவார். இந்த
நூலை பார்ப்பதற்கு 16-வது போப்பெனடிக்ட் விருப்பம் தெரிவித்திருந்தார். இறுதி தூதர் முஹம்மது நபியின்
வருகையை குறித்தும், இயேசுவின் இஸ்லாம் குறித்த பார்வையை விளக்கும் இந்த நூலின் உள்ளடக்கம்,
தற்போது நடைமுறையில் இருக்கும் பைபிளில் காணப்படும் கருத்துக்களுடன் முரண்படுவதால், கிறிஸ்தவ தலைமை இந்நூலை மூடி மறைத்துள்ளது என்று துருக்கியின் கலாச்சார-சுற்றுலாத்துறை அமைச்சர் உர்த்துக்
ரூல்குனாய் செய்தியாளர்களிடம் கூறினார்.
யேசு ஆரம்ப காலக்கட்டத்தில் கூறிய கட்டளைகளும், முன்னறிவிப்புகளும் விலங்கின் தோலில் எழுதப்பட்டுள்ள இந்நூலில் அடங்கியுள்ளன. இதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததுதான் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் குறித்த முன்னறிவிப்பாகும். யேசு பேசிய மொழியான அராமிக்கில் எழுதப்பட்டுள்ள இந்த நூல் 14 ஆண்டுகளுக்கு முன்பு ( Year 2000) கள்ளக்
கடத்தல்காரர்களை கைது செய்யும் நடவடிக்கையின் போது துருக்கி போலீஸ் கண்டுபிடித்தது. இந்த புத்தகத்தின் மதிப்பு 28 மில்லியன் டாலராகும். இந்த நூலின் ஒரு பக்கத்திற்கான நகலுக்கு 1.7 மில்லியன் டாலர்
மதிப்பாகும். இந்த நூல் இயேசு சிலுவையில் அறையப்படவில்லை என்பதையும் அவர்க்கு பதிலாக ஜூடாஸ் இஸ்காரியோட் என்பவரே சிலுவையில் அறையப்பட்டார் என்பதையும் கூறுகிறது.மேலும் யேசு (இறைத்தூதர்
ஈஸா (அலை) அவர்கள் இறுதி தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை குறித்து தனது சீடர்களிடம்
முன்னறிவிப்பு செய்துள்ளார். இறுதி தூதர் வரும் வேளையில் அவரை நம்பி ஏற்றுக்கொள்ள வேண்டும்
என்று யேசு கூறியுள்ளார். இவ்வுண்மைகளை கண்டறிந்த போப் பதினாராம் பெனடிக்ட் தன்னுடைய போபாண்டவர் பதவியை 2013 ம் ஆண்டு இராஜினாமா செய்தார். ஆனால் இந்த செய்திகள் அனைத்தையும் வழக்கம்போல் மூடி மறைத்துவிட்டர்கள். அனைவரிடமும் இதை அதிகம் அதிகம் (Share)
பகிருங்கள்.
 
 
 
சிலருக்கு சில சூழ்நிலைகளில் சூடு அதிகமாகி குறையவே குறையாது; அவர்களுக்கு உடனே ஏற்படும் விளைவு தான் அஜீரணம். அதுபோல, இந்த வகை பெண்களுக்கு வருவது தான் முகப்பரு. எதனால் சூடு வரும் தெரியுமா?

* தடுப்பூசி போட்டால் உடலில் சூடு அதிகரிக்கும். அதுபோல, ஸ்டிராய்டு ஊசி போட்டாலும் சூடு அதிகரிக்கும். அதைத்தான் காய்ச்சல் என்று சொல்லி மருந்து தரப்படுகிறது.

* மது குடிப்பவர்களுக்கு, அடிக்கடி சிகரெட் பிடிப்பவர்களுக்கு உடலில் சூடு அதிகமாக இருக்கும்.

* மாதவிடாய் மற்றும் மகப்பேறு சமயங்களில் சில பெண்களுக்கு இந்த பிரச்சனை இருக்கும்.

* தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கும் சூடு, உடலில் அதிகமாக இருக்கும்.

* நீண்ட தூர பயணங்களுக்கு பின், உடல் சூடு காணும்.

உடல் சூட்டை எப்படி சமாளிப்பது?

உடலில் உள்ள சீரற்ற தன்மையை சரி செய்ய ஒரே வழி உணவும், பழக்க வழக்கங்களும் தான். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் இருந்தால் பிரசச்னை ஏற்படும். அதுபோல, உணவுகளில் மாற்றம் இருந்தாலும் இதே தொல்லை தான். அதனால், இந்த இரண்டிலும் கவனம் தேவை. உடலில் சூடு தணிய வேண்டுமானால், உணவில் மாற்றம் ஏற்பட வேண்டும். இப்போது “ஜங்க் புட்’ என்று சொல்லப்படும் கொழுப்பு உணவுகளால் கூட உடலில் மாற்றம் ஏற்படுகிறது.

அதனால் தான் இதை சாப்பிடுவோருக்கு ஏதாவது ஒரு கட்டத்தில் பிரச்சனை ஏற்படுகிறது. என்ன உணவு சாப்பிட்டாலும், சத்தான, உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான பச்சைக் காய்கறி, சத்து உணவுகளையும் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு எட்டிப்பார்க்கக்கூட செய்யாது. இதை வளர் இளம் பெண்கள் மனதில் கொள்ள வேண்டும். வழக்கமான உணவுகளில் பச்சைக் காய்கறிகள், பழங்கள் என்று சேர்த்துக் கொள்வதுடன், இந்த உணவுகள் சேர்ப்பது மிக முக்கியம்.

* தர்பூசணி மட்டுமல்ல, கிர்ணி உட்பட பல வகை நீர்ச்சத்து உள்ள பழங்களில் பொட்டாசியம் சத்து உள்ளது. துண்டாக்கியோ, ஜூசாகவோ சாப்பிடலாம்.

* பொதுவாகவே கீரை வகைகள் உடலுக்கு நல்லது. மக்னீசியம் சத்துள்ள பசலைக் கீரையை சமைத்து சாப்பிட்டால், உடல் சூடு தணிவதுடன், கண்களுக்கும், தோலுக்கும் நல்லது.

* கோடையில் மட்டுமல்ல, பொதுவான சமயங்களில் வெள்ளரியை துண்டாக்கி சாப்பிடலாம். சமைத்தும் சாப்பிடலாம். நார்ச்சத்து உள்ளது.

* சிலருக்கு தயிர், மோர் சாப்பிடும் பழக்கமே இல்லை. இப்போது தான் பழக்கத்தை ஆரம்பித்துள்ளனர். தயிர் சாப்பிடுவது மிக நல்லது. சூடு தணிந்து, இதத்தை தரும் தயிர், கண்டிப்பாக சாப்பாட்டில் சேருங்கள். இப்படி எத்தனையோ சத்தான உணவுகள் உள்ளன. என்ன தான் ஜாலிக்காக வெளியில் வாய்க்கு ருசி என்று நினைத்து சாப்பிட்டாலும், இந்த சத்தான உணவுகளை மறக்கவே கூடாது தானே.





கதிர்வீச்சு, வெப்பம், தூசு போன்ற சுற்றுச்சூழலில் இருந்து நம்மைக் காக்கவும் உதவுகிறது. மேலும், உடலின் தட்பவெப்ப நிலையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், தொடு உணர்ச்சியைத் தூண்டவும் செய்கிறது. இப்படி, உடலின் சகலத்துக்கும் பயன்படும் சருமத்தை சுற்றுச்சூழல், மரபணு, ஊட்டச்சத்து உள்ளிட்ட பல்வேறு வெளிப்புற, உட்புற விஷயங்கள் பாதிக்கின்றன.

சருமப் பராமரிப்புக்கான க்ரீம்களை வாங்கிப் பூசுவதும், சிகிச்சைகளை மேற்கொள்வதும் இன்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. பலரும், தரமற்ற க்ரீம்களைத் தடவுவது, மன அழுத்தம், ஊட்டச்சத்துக் குறைபாடு, சுற்றுச்சூழல் மாசு, புறஊதாக் கதிர்வீச்சு, மது அருந்துதல், புகைப் பழக்கம் போன்ற பல காரணங்களால், இளமையிலேயே முதுமைத் தோற்றத்தை அடைந்து விடுகின்றனர்.

இளமையைத் தக்கவைக்க வழி சொல்கிறார் மரபியல் ஆராய்ச்சியாளர் டாக்டர் சலீம் முகமது.

'சருமம் ஆரோக்கியமாக இருப்பதற்கும், பாதிப்படைவதற்கும் வெளிப்புறக் காரணிகள்தான் மிக முக்கியமானது என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையில், இவை வெறும் 20 சதவிகிதம் அளவுக்கே இருக்கிறது. உடலுக்குள் நடக்கும் மாற்றங்கள், நாம் எடுத்துக்கொள்ளும் உணவு, ஆரோக்கியம் இவைதான் 80 சதவிகிதம் தோல் நலத்துக்குக் காரணமாக இருக்கின்றன. நம்முடைய சருமத்தில் கொலாஜன் (Collagen) என்ற புரதம் உள்ளது.

இதுதான் சருமம் பொலிவுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க முக்கியக் காரணம். வயது ஏற ஏற, சருமம் குறைந்த அளவில் கொலாஜனை உற்பத்தி செய்கின்றன. அதேநேரத்தில், 'கொலாஜன் சிதைவு’ என்பது விரைவுபடுத்தப்படுகிறது. கொலாஜன் சிதைக்கப்படும்போது, சருமத்தில் சுருக்கம் ஏற்படுகிறது. இன்றைய வாழ்க்கை முறை மாற்றம் உள்ளிட்ட காரணிகள், கொலாஜன் சிதைவை விரைவுபடுத்துகின்றன. அதிக அளவில் கொலாஜன் சிதைவு என்பது, அதிக அளவில் சருமச் சுருக்கத்துக்கும், சருமம் பொலிவற்ற தன்மைக்கும் வழிவகுக்கிறது.

இந்த கொலாஜன் சிதைவுத் தன்மை, நச்சுக்களின் தாக்கம் போன்றவை மரபணுவில் மாற்றத்தை ஏற்படுத்தி, வயதாவதை விரைவுபடுத்துவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மரபணுவில் குறிப்பிட்ட 'கோட்’-ல் தாக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம், வயதாகும் செயல்பாடு விரைவுபடுத்தப்படுகிறது. ஆனால், இயற்கையில் கிடைக்கும் சில பொருட்களைக் கொண்டு இந்த நச்சுக்களில் இருந்து பாதுகாத்து, கொலாஜன் சிதைவைக் கட்டுப்படுத்தி, இளமையில் முதுமைத் தன்மையைக் கட்டுப்படுத்தலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

முதுமையைத் தவிர்க்க முடியாது. ஆனால், அந்தந்த வயதுக்குரிய வசீகரத்துடன் வாழ முடியும். நம்முடைய சருமத்தின் வயதாகும் செயல்பாட்டின் தன்மையை, டி.என்.ஏ பரிசோதனை மூலம் தெரிந்து கொண்டு மிகவும் பாதுகாப்புடன், இயற்கையான முறையில் முதுமையைத் தாமதப்படுத்தலாம்'' என்ற டாக்டர் சலீம் முகமது, அதற்கான சிகிச்சை முறைகளைச் சொன்னார்.

''ஒருவருடைய சருமத்தின் வயதாகும் தன்மை எப்படி உள்ளது என்பதை 'கம் அலைவ்’ என்ற மரபியல் ஆய்வுப் பரிசோதனை செய்யப்படும்.  முதலில் ஒருவருக்கு சருமம் எப்படி உள்ளது என்பதைக் கண்டறிந்து, அந்தச் சருமத்துக்கு ஏற்றது போன்ற ஃபேஷியல் பரிந்துரைக்கப்படும். அதேநேரத்தில், அவர்களின் உமிழ்நீரை டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பிவைப்போம். டி.என்.ஏ பரிசோதனையில், கொலாஜன் சிதைவு மற்றும் சருமத்தைப் பாதிக்கும் நச்சுக்கள் வயதாவதற்குக் காரணமான மரபணுவில், எந்த அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது கண்டறியப்படும்.

இதன் அடிப்படையில், நச்சுக்களில் இருந்து பாதுகாப்பது, கொலாஜன் சிதைவைத் தடுத்து இளமையில் முதுமை அடையாமல் இருப்பதற்கான சிகிச்சை திட்டமிடப்படும். அவர்களுக்கான பிரத்யேக ஊட்டச்சத்து திட்டமிடப்பட்டு, ஒருநாளைக்கு ஒரு எஸ்.எம்.எஸ் என்ற அளவில் 270 நாட்களுக்கு அனுப்பப்படும். இதனுடன், அவர்களுக்கு ஏற்ற ஃபேஷியல் க்ரீம் பரிந்துரைக்கப்படும். இதனைச் சரியாகப் பின்பற்றுவதன் மூலம் ஒருவர் அந்தந்த வயதுக்கான வசீகரத்துடன் வாழ முடியும்' என்றார்.






வாட்ஸ் அப் செய்திகள் , புகைப்படங்கள், வீடியோக்கள், மற்றும் வாய்ஸ் நோட்ஸ் என அனைத்து வகையான வாட்ஸ் அப் செய்திகளையும்  'கூகுள் ட்ரைவ்'வில் சேமித்து வைத்துக்கொள்ளும் புதிய வசதி அறிமுகமாகி இருக்கிறது.

கூகுள் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து இதனை அறிமுகம் செய்துள்ளது. இனிமேல் ஐபோன் பயனாளிகள் தங்களது 'ஐகளவுட்'டில் தங்களது வாட்ஸ்அப் மெசேஜ்களை சேமித்து வைத்துக்கொள்வதை போல ஆண்ராய்டு பயனாளிகள் இனி தங்களது வாட்ஸ்அப் மெசேஜ்கள் அனைத்தையும் 'கூகுள் ட்ரைவ்'வில் பரிமாற்றம் செய்து சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

கம்யூட்டரில் போனை 'கனக்ட்' செய்து வாட்ஸ்அப் ஃபோல்டரில் உள்ள மெசேஜ்களை பரிமாற்றம் செய்து சேமிக்க வேண்டிய நீளமான வேலை இனி ஆண்ராய்டு பயனாளிகளுக்கு இல்லை. இந்த வசதியானது சில கைபேசிகளுக்கு மாடல்களுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வழிமுறை :

இந்த வசதியை தொடங்க, வாட்ஸ் ஆப் setting -ல் chat and Calls பகுதியில் Chat Backup வசதியை தேர்வு செய்து வரும் பகுதியில் உங்கள் கூகிள் கணக்கை இணைப்பதன் மூலம் தொடங்கலாம்.

| Copyright © 2013 Online Srilankan