• சிகரெட்டுகளில் 4000 க்கும் மேற்பட்ட நச்சுப்பொருட்களும், 200 வகையான விஷப்பொருட்களும், மற்றும் புற்றுநோயை உருவாக்கும் 60 ரசாயன பொருட்களும் அடங்கியுள்ளன. புகையிலை யாரையும் விட்டு வைப்பதில்லை. மற்றவர்கள் புகைக்கும் பொழுது வெளி வரும் புகைகூட நச்சு தன்மையுடையது. உயிருக்கு ஊறு விளைவிக்கும். அடுத்தவர் புகைக்கும் பீடி அல்லது சிகரெட்டில் இருந்து வெளி வரும் புகை தான் இரண்டாம் தர புகையிலை புகை எனப்படும் ஆகும். (Second- hand Smoke). இவ்வகை இரண்டாம் தர புகையிலை புகை என எல்லோருக்குமே பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. வயது வந்தோர், புகைப்பழக்கம் இல்லாதவர்கள், இளம் குழந்தைகள், மற்றும் பச்சிளம் குழந்தைகள், ஆகியோர் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். அதிக விளைவை ஏற்படுத்தக்கூடிய நோய்கள் : * நெடுநாள் சுவாசப்பாதை நோய்கள், ஆஸ்துமா, காசநோய் மற்றும் அடிக்கடி ஏற்படும் சுவாசப்பாதை நோய்கள். * இருதய இரத்தக் குழாய் நோய்கள். * நுரையீரல் புற்றுநோய் திடீர் சிசு மரணம் உண்டாக்கும் நோய்கள் (கட்டில் இறப்பு) பெண்களுக்கு ஏற்படக்கூடிய உடல் நலக்கோளாறுகள் : * குழந்தை பிறப்பு குறையும் பாதிப்புகள் * எடை குறைந்த குழந்தைகள் * குழந்தை பிறக்கும் கர்ப்பப்பை கழுத்துப் பகுதியில் புற்றுநோய்.



பாரீஸ் தாக்குதலை தொடர்ந்து விமான நிலையம், ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாரீஸ் ரயில் நிலையம் ஒன்றில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸ்காரர். படம்: ஏஎப்பி
ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை அழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மேற்கொள்ள வேண்டும் என்று பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 129 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து ஐ.எஸ். அமைப்பின் தலைமை யகமான சிரியாவின் ரக்கா நகரம் மீது பிரான்ஸ் போர்விமானங்கள் தீவிர தாக்குதல் நடத்தி வரு கின்றன.
இந்நிலையில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு மற்றும் அல்-காய்தா ஆதரவு அமைப்புகளை அழிப்பது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பிரான்ஸ் தரப்பில் நேற்றுமுன்தினம் வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:
பாரீஸ் தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பகிரங்கமாக பொறுப்பு ஏற்றுள்ளது. அந்த அமைப்பு உலக பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது. தற்போது ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக மேற் கொள்ளப்படும் ராணுவ நடவடிக் கைகளை இரட்டிப்பாக்க வேண்டும்.
பாதுகாப்பு கவுன்சிலில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடு களும் ஒருமனதாகச் செயல்பட்டு ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக போர் தொடுக்க வேண்டும். இதற்கு ஐ.நா. சபை அனுமதி அளிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அகதிகள் பிரச்சினை
பாரீஸ் தாக்குதல் குறித்து பிரான்ஸ் பிரதமர் மானுவேல் வால்ஸ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சிரியா, இராக் நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு லட்சக்கணக்கான அகதிகள் புகலிடம் தேடி வருகின்றனர். அவர்களுக்கு ஐரோப்பிய நாடுகளும் அடைக்கலம் அளித்து வருகின்றன.
இதை தீவிரவாதிகள் தங்க ளுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ஐரோப்பாவுக்குள் ஊடுருவியுள்ளனர். பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் பதுங்கி யுள்ள தீவிரவாதிகளை தேடி வருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனிடையே துருக்கி, கிரீஸ் தீவுகளில் கரையேறும் அகதிகள் தற்போது தீவிர சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பால்கன் நாடுகள் அகதிகள் நுழைய முடி யாத வகையில் தங்கள் எல்லை களை மூடி உள்ளன. இதர ஐரோப்பிய நாடுகளும் அகதிகள் விவகாரத்தில் கடுமையான நடை முறைகளைப் பின்பற்றுகின்றன.
ஆனால் அமெரிக்க கூட்டுப் படைகள், ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல்கள் சிரியாவில் அதிகரித் திருப்பதால் ஆயிரக்கணக்கான அகதிகள் ஐரோப்பிய நாடுகளை நோக்கி தொடர்ந்து படையெடுத்து வருகின்றனர்.


சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாடு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19 .03. 2016 இல். பாலமுனையில்
================================================
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அடுத்த தேசிய மாநாடு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2016. 03. 19 ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு உட்பட்ட பாலமுனையில் கௌரவ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவுப் ஹகீம் அவர்களின் தலைமையில் நாட்டின் ஜனதிபதி , பிரதமர் ,அமைச்சர்கள் , பல கட்சி தலைவர்கள் , வெளிநாட்டு தலைவர்கள் , இராஜதந்திரிகள் மற்றும் நாடுபூராகவுள்ள இலட்சகணக்கான முஸ்லிம் காங்கிரசின் போராளிகளின் பங்குபற்றலுடன் மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது


அண்டார்ட்டிக்காவின் மேற்பரப்பில் விண்ணில் ஓசோன் படிவத்தில் ஏற்படும் ஓட்டையின் அளவு இது வரை ஏற்பட்டதிலேயே மிகப்பெரிய அளவாக வளர்ந்திருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பூமியின் தென் அரைக்கோளத்தில் வசிக்கும் மக்கள் இதன் காரணமாக வரும் சில வாரங்களில் அதி ஊதா நிற கதிரியக்க அளவுகளால் பாதிக்கப்படுவதற்கு எதிராக கவனமாக இருக்குமாறு உலக தட்பவெப்பநிலை நிறுவனம் எச்சரித்துள்ளது.
பூமியின் மேல் வளிமண்டலத்தில் ஏற்பட்ட குறிப்பான குளிர் நிலைமைகளால் இந்த ஓட்டை வளர்ந்திருக்கிறது என்று அது கூறியது.
ஆனால் நீண்ட கால நோக்கில் பார்த்தால், இந்த நூற்றாண்டின் மத்தியில் இந்த ஓசோன் படிவம் சரிசெய்யப்பட்டுவிடக்கூடிய நிலையிலேதான் இன்னும் இருக்கிறது என்று அது கூறியது.
இந்த ஓட்டைகள் 1980களில் க்ளோரோஃப்ளோரோகார்பன்கள் அதிகமாக தொழில் நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்டதால் உருவாயின.
இவைகளின் பயன்பாடு 1987ல் ஏற்படுத்தப்பட்ட முக்கியமான சர்வதேச ஒப்பந்தத்தின் விளைவாக நிறுத்தப்பட்டது.


பி.ப. 06.25 வரவு செலவுத் திட்ட சமர்ப்பிப்பு நிறைவு
பி.ப. 06.21 ஆங்கில தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் திரைப்படங்களுக்கான வரி நீக்கம்.
பி.ப. 06.10 வரிவிலக்குகளை மறுசீரமைக்கத் திட்டம்
பி.ப. 06.08 1 லிட்டர் மண்ணெண்ணெய் விலை 10 ரூபாவால் குறைக்கப்படும். 1 கிலோ பருப்பின் அதிகபட்ச சில்லறை விலை 169 ரூபா.
பி.ப. 06.06 12.5Kg சமையல் எரிவாயு விலை 150 ரூபாவால் குறைப்பு
பி.ப. 06.04   425 கிராம் ரின் மீனின் விலை 125 ரூபாவால் குறைக்கப்படும்.​
பி.ப. 06.03 உருளைக் கிழங்கு, பெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி 25 ரூபாவால் குறைக்கப்படும்.
பி.ப. 06.01 குழந்தைகளுக்கான பால்மாவின் விலை 100 ரூபாவால் குறைக்கப்படும்.
பி.ப.05.59 தெரிவு செய்யப்பட்ட 11 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்படும்.
பி.ப. 05.56 பேலியகொடை முதல் புறக்கோட்டை வரை புதிய நெடுஞ்சாலை.
பி.ப. 05.52 ரயில் பாதைகளை நவீனமயப்படுத்த 1500 மில்லியன் ஒதுக்கீடு
பி.ப. 05.51 2016 ஜனவரி முதலாம் திகதி முதல் அரச வேலைகளில் இணைவோருக்கு புதிய ஓய்வூதியத் திட்டம்.
பி.ப. 05.44  மத்தளை விமான நிலையம், விமானப் பொருட்கள் கேந்திர நிலையமாக மாற்றப்படும்.
பி.ப. 05.41 திகன, பதுளை மற்றும் புத்தளத்தில் உள்நாட்டு விமான நிலையங்கள்  அமைக்கப்படும்.
பி.ப. 05.33 சட்ட ஒழுங்கைப் பாதுகாக்க நாட்டிலுள்ள பொலிஸ் நிலையங்களை 428 இலிருந்து 600 ஆக அதிகரிக்க நடவடிக்கை.
பி.ப. 05.30  நல்லூர், மாத்தறை, கண்டி ஆகிய இடங்களில்  புற்றுநோய் வைத்தியசாலைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பி.ப.05.24 இலவசக் கல்வியில் மாற்றமில்லை.
பி.ப. 05.23  அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் இலவச WiFi வசதி.
பி.ப. 05.22 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணனியைப் பெற்றுக்கொள்ள மூன்று வருட வட்டியற்ற கடன்.
பி.ப. 05.21 கிளிநொச்சியில் விஞ்ஞானப் பீடமும் வவுனியாவில் விவசாயப் பீடமும் அமைக்கப்படும்.
பி.ப. 05.19 மகாபொல பல்கலைக்கழகம் மாலபேயில் அமைக்கப்படும்.
பி.ப. 05.17  2018ற்குள் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் விடுதி வசதி.
பி.ப. 05.15 கல்வித்துறைக்கு மொத்தமாக 90 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு. இது மொத்த உள்நாட்டு உற்பத்தி வீதத்தில் 5.41%.
பி.ப. 05.13 கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தின் பின்னர் கட்டாய தொழிற்பயிற்சி.
பி.ப. 05.12  அச்சிடப்பட்ட புத்தகங்கள் மற்றும் சஞ்சிகைகளுக்கு வரிச்சலுகை
பி.ப. 05.11 அனைத்துப் பாடசாலைகளுக்கும் 2016 முடிவிற்குள் மின்சார மற்றும் மலசலக்கூட வசதி. இதற்கென 4000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படும்.
பி.ப. 05.10 புதிதாக இணையும் ஆசிரியர்களுக்கு முதல் 5 வருடங்களுக்குள் 2 வருட கட்டாயப் பயிற்சி.
பி.ப. 05.09 தனியார் துறை ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள அதிகரிப்பிற்கு பரிந்துரை (கடந்த வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் அதிகரிக்கப்படாத ஊழியர்களுக்கு)
பி.ப. 05.07 சுயாதீன பணிப்பாளர் சபையின் கீழ் முறிகள் தொடர்பிலான நிறுவனம் ஆரம்பிக்கப்படும்.
பி.ப. 05.06  அனைத்து ஊழியர்களுக்கும் 5 வேலை நாட்கள் கட்டாயமாக்கப்படும்.
பி.ப. 05.04 அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் 250 ரூபா ஆரம்ப வைப்புடன் சேமிப்புக் கணக்கு ஆரம்பிக்கப்படும்.
பி.ப. 04.56 புதிய வாகன பெறுமதி மதிப்பீட்டுக்கட்டணம் : முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் – 1500 ரூபா, ஏனைய வாகனங்களுக்கு 15000.
பி.ப. 04.52 அனைத்து ஊழியர்களுக்கும் சம்பள வங்கிக் கணக்கு தொழில் வழங்குனர்களால் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
பி.ப. 04.50 உள்நாட்டு வங்கிகள் வௌிநாடுகளில் கிளைகளை ஆரம்பிக்கும் போது நிவாரணம் வழங்கப்படும்.
பி.ப. 04.49  2016 ஜூன் முதலாம் திகதி முதல் அனைத்து வங்கிகளும் மொத்த கடன் வழங்கும் தொகையில்  10% கடனுதவியை சிறு தொழில் ஆரம்பிப்பவர்களுக்கும் 5% கடன் உதவியை இளைஞர் மற்றும் பெண்களுக்கும் வழங்க வேண்டும்.
பி.ப.04.47 திவிநெகும நிதியம் தேசிய சேமிப்பு வங்கியுடன் இணைக்கப்படும்.
பி.ப. 04.44 கொழும்பு சர்வதேச நிதி கேந்திர நிலையத்தை டீ.ஆர். விஜேவர்தன மாவத்தையில் ஸ்தாபிக்கத் திட்டம்.
பி.ப. 04.42  நாட்டிலுள்ள அனைத்து ஹோட்டல்களும் அபிவிருத்தி சபையின் கீழ் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும்.
பி.ப. 04.37 இலத்திரனியல் உபகரணங்கள், ஆடை உற்பத்திகள் மற்றும் பாதணிகள் உள்ளிட்ட 15 பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும். இதன் மூலம் சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு பொருட்கொள்வனவிற்குச் செல்லும் ஆசிய நாட்டவர்களை இலங்கைக்கு ஈர்க்க முடியும்.
பி.ப. 04.35 கட்டடத்துறையில் பயிற்சி பெறும் ஊழியர்களுக்கு மாதாந்தம் 10,000 ரூபா கொடுப்பனவு.
பி.ப. 04.32 நிர்மாணத்துறையில் எந்தவொரு வௌிநாட்டு நிறுவனத்திற்கும் உள்நாட்டு நிறுவனத்துடன் இணைந்து செயற்பட முடியும்.
பி.ப. 04.28 ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் 1000 வீடுகளை அமைக்க மொத்தமாக 4500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படும்.
பி.ப. 04.26 சேரிப்புற மக்களுக்கு 5 வருடங்களுக்குள் 1 இலட்சம் வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படும். கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் இவை நிர்மாணிக்கப்படும்.
பி.ப. 04.22  சொகுசு வரி முற்றாக நீக்கப்படும்.
பி.ப. 04.20 வௌிநாட்டில் பணம் வைப்பீடு செய்துள்ள இலங்கை ஏற்றுமதியாளர்கள் அப்பணத்தை நாட்டில் வைப்பீடு செய்ய வேண்டும்.
பி.ப. 04.18 ஏற்றுமதி அபிவிருத்தியை மேம்படுத்த அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும்.
பி.ப. 04.16 எந்தவொரு வங்கியின் ஊடாகவும் இலங்கையில் நிதி முதலீடு செய்வதற்கு வௌிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
பி.ப. 04.15  புதிய முதலீட்டு சட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
பி.ப. 04.11  வர்த்தக நடவடிக்கையை ஆரம்பிக்கும்போது 10 மில்லியன் ரூபா முதலீடு அல்லது 500 புதிய தொழில்வாய்ப்புகளை வழங்கும் வௌிநாட்டு முதலீட்டாளர்களுக்கு 50% வரிச்சலுகை வழங்கப்படும்.
பி.ப. 04.09 வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 15 நாட்களில் அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
பி.ப. 04.04 ஜனவரி முதலாம் திகதி முதல் இலத்திரனயில் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படும். இதனூடாகவே அனைத்து கொடுக்கல் வாங்கல்களும் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கென 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படும். அரச நிறுவனங்கள் அனைத்தும் இலத்திரனியல் மயப்படுத்தப்படும்.
பி.ப. 04.03 தங்கம் இறக்குமதிக்கு வரியின்றி 50 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும்.
பி.ப. 04.02 யானைகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களைக் கட்டுப்படுத்த 4000 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.
பி.ப. 04.01 ஏப்ரல் மற்றும் ஒக்டோபரில் இரத்தினக்கல் ஏலம் நடைபெறும்
பி.ப. 04.00 போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சிறுவர் பாதுகாப்பிற்கு 2000 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.
பி.ப. 03. 59  வவுனியாவில் உருவாக்கப்படும் புதிய பொருளாதார வலையத்திற்கு 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும் .
பி.ப. 03.56 கிராமிய அபிவிருத்திக்காக ஒரு கிராம சேவையாளர் பிரிவிற்கு 1500 மில்லியன் ரூபா வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
பி.ப. 03.54  ரப்பர், தேயிலை உற்பத்தியை மேம்படுத்த இரண்டு வருட வரி நிவாரணம் வழங்கப்படும்.
பி.ப. 03.53 தேயிலை ஏற்றுமதியின் போது Ceylon Tea என பெயரிடப்படுவது கட்டாயமாக்கப்படும்.
பி.ப.03.52 தெங்கு உற்பத்தி மேம்பாட்டிற்காக 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படும்.
பி.ப.03.51 தேயிலை உற்பத்தித்துறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆராய விசேட குழு அமைக்கப்படும்.
பி.ப.03.46 கல்முனை, காரைநகர், சிலாபம் உள்ளிட்ட மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்ய 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படும்
பி.ப. 03.44 மீனவர்களுக்கு 1 மில்லியன் ரூபா பெறுமதியான காப்புறுதித் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
பி.ப.03.42 400கிராம் பால்மாவின் விலை 325 ரூபாவிலிருந்து 295 ரூபாவாகக் குறைக்கப்படும்.
பி.ப.03.42 அரசினால் பயன்படுத்தப்படாத தரிசு நிலங்கள் குறைந்த குத்தகைக்கு பழ வகை, மரக்கறி செய்கையாளர்களுக்கு வழங்கப்படும்.
பி.ப.03.41 பழ வகை, மரக்கறி செய்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் இயந்திர கொள்வனவிற்கு வரிவிலக்கு செய்யப்படும்.
பி.ப. 03.36 கீரி சம்பா 50 ரூபா, சம்பா 41 ரூபா, நாடு 38 ரூபா எனும் நிர்ணய விலை அடிப்படையில் அரிசி அரசினால் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும்.
பி.ப. 03.35 விவசாயிகளுக்கு உயர் தரத்திலான களஞ்சியசாலைகளை அமைத்துக் கொடுக்கப்படும்.
பி.ப.03.34 தரிசு நிலங்களை விதை உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
பி.ப.03.31 தொழில்நுட்பப் பூங்கா யாழ்ப்பாணம், வன்னி, புத்தளம் மற்றும் மொனராகலையில் அமைக்கப்படும்.
பி.ப. 03.28 சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நடவடிக்கைகளுக்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படும்.
பி.ப.03.26 சிறு மற்றும் நடுத்தர முயற்சியாண்மையை நெறிப்படுத்தும் அமைப்பு ஏற்படுத்தப்படும்
பி.ப.03.19 சூழல் பாதிப்பு நேராத வகையிலான எரிபொருள் பாவனை அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
பி.ப. 03.15 வாகன நெரிசலைக் குறைக்கும் பொருட்டு பொது போக்குவரத்துத்துறை மேம்பாட்டில் கவனம் செலுத்தப்படும்.
பி.ப. 03.10 செயற்திறன் மிக்க ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்
பி.ப.03.07 நாட்டின் கடன் தொகையானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 72% ஆக உள்ளது.
பி.ப. 03.03 2016 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம்  Zero Budget Concept அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
 பி.ப. 02.57 வரிவிதிப்புத் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும்
பி.ப.02.47 வௌிநாட்டில் முதலீடு செய்யப்பட்டுள்ள பணத்தை நாட்டிற்கு மீளக்கொணர சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.
பி.ப. 02.45 நாட்டின் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக முன்னைய அரசாங்கத்தால் அதிகளவு வட்டி வீதத்திற்கு கடன்கள் பெறப்பட்டிருந்தன.
பி.ப.02.38 முன்னைய அரசாங்கத்தில் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியைச் சந்தித்தது –  நிதியமைச்சர்
பி.ப. 02.25  விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் – நிதியமைச்சர்
பி.ப 02.18  எதிர்கால தலைமுனையினருக்கு சிறந்த பொருளாதாரத்தை பெற்றுக்கொடுப்பதே எமது இலக்கு – நிதியமைச்சர்
பி.ப 02.06 ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் இலங்கையின் வரலாற்றில் முக்கியமான விடயம் – நிதியமைச்சர்
பி.ப 02.04  நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க 69 ஆவது வரவுசெலவுத்திட்ட உரையினை ஆரம்பித்தார்.
பி.ப 02.03  ரவி கருணாநாயக்கவின் வருகை தற்போது இடம்பெறுகின்றது.

  • வரவு செலவுத்திட்டம் 2016, வரவு-செலவு, வரவு-செலவுத்திட்டம்
தேவை அதிக கவனம்



‘இதுவரையிலும் சமைக்கிற உணவுப் பொருட்களில்தான் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டியிருந்தது. இப்போது பாத்திரங்களில் கூடவா?’ என்று நீங்கள் கேட்கலாம். வேதியியலின் கூற்றுப்படி எந்த ஒரு பொருளையும் வெப்பப்படுத்தும்போது அதன் தன்மை மாறி விடும். அப்படியாக அலுமினியப் பாத்திரங்கள் வெப்பத்தாலும், அமிலப்பொருட்களுடன் வினைபுரிவதாலும் தீய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். விலை மலிவாகக் கிடைப்பதன் காரணமாக ஏழை மக்கள் பெரும்பாலானோர் அலுமினியப் பாத்திரத்தில்தான் சமைக்கிறார்கள். எனவே, இது குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்துவது அத்தியாவசியமாகிறது.

அலுமினியத்தின் வேதியியல் தன்மை மற்றும் வினைபுரிதல் பற்றி விளக்குகிறார் வேதியியல் பேராசிரியர் சிவசாமி... ‘‘அலுமினியம் என்பது ஒரு தனிமம். உலகில் அதிகம் கிடைக்கக் கூடிய தனிமங்களில் அலுமினியம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. அலுமினியம் பல விதங்களில் நமக்கு நன்மை தரும் உலோகம். இதன் அடர்த்தியும் எடையும் மிகவும் குறைவு. ஆனாலும், மிகவும் வலிமையானதாக இருக்கும்.

அலுமினியத்துடன் மெக்னீசியம்,  இண்டியம் போன்ற உலோகங்களை சேர்க்கும்போது மெக்னாலியம், இண்டாலியம், ட்யூராலுமின் போன்ற உலோகக் கலவைகள் கிடைக்கின்றன. குக்கரில் அழுத்தத்தைத் தாங்குவதற்காக மெக்னாலியம் பயன்படுத்தப்படுகிறது. விமானத்தின் மேற்கூரைகள் ட்யூராலுமின் உலோகக் கலவையால்தான் கட்டப்படுகின்றன. Non corrosion எனும் துருப்பிடிக்காத தன்மை அலுமினியத்துக்கு உண்டு.

எளிதாக வளைக்கலாம், நெளிக்கலாம் என்பதால் பாத்திரங்கள் செய்வதற்கும் எளிதாக இருக்கும். குறைவான நேரத்திலேயே அலுமினியப் பாத்திரங்களை உற்பத்தி செய்து விட முடியும். வெப்பம் மற்றும் மின்சாரத்தைக் கடத்துகிற தன்மையுடையது என்பதால் மின் துறையில் அலுமினியக் கம்பிகளின் பங்கு தவிர்க்க முடியாததாக இருக்கிறது. மருந்து அட்டைகள் தொடங்கி கூல்ட்ரிங்ஸ் டின், சிப்ஸ் பாக்கெட் என பல வடிவங்களில் அலுமினியத்தை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இத்தனை விஷயங்களிலும் நமக்கு நண்பனாக இருக்கும் அலுமினியம் சமையலில் மட்டும் எதிரியாகி விடுகிறது.

அமிலம் மற்றும் காரத்தன்மையுள்ள உணவுப் பொருட்களுடன் அலுமினியம் வேதிவினை புரியக்கூடியது. உப்புடன் அலுமினியம் வினைபுரியும்போது அலுமினியம் காம்பவுண்ட் உருவாகிறது. அது போல அலுமினியத்துடன் எலுமிச்சைச் சாறு வினைபுரிந்தால், அது அலுமினியம் சிட்ரேட், தயிருடன் வினையாற்றினால் அது அலுமினியம் லாக்டேட், புளியுடன் வேதிவினை புரிந்தால் அது அலுமினியம் டார்டரேட், தக்காளியுடன் வினை புரிந்தால் அது அலுமினியம் பாஸ்ரேட் என எதனுடன் வினைபுரிகிறதோ அதற்கேற்ற தன்மைகளில் அலுமினியம் உப்பாக மாறி உணவினுள் கலந்து விடுகிறது.

இந்த வேதிவினையின் காரணமாகத்தான் அலுமினியப் பாத்திரங்களின் அடியில் aluminum pitting என்று சொல்லக்கூடிய கருப்புப் புள்ளிகள் ஏற்படுகிறது. இந்த வேதிவினை மாற்றம் சாதாரண தட்பவெப்பநிலையில் இருக்கும்போது கொஞ்சமாகவும், அதுவே வெப்பப்படுத்தினால் வேதிமாற்றம் விரைவிலும் நடக்கும். உதாரணத்துக்கு அமிலத்தன்மை - காரத்தன்மை இல்லாத நன்னீரை அலுமினியப்பாத்திரத்தில் ஊற்றி நன்கு கொதிக்க வையுங்கள்.

பிறகு அந்த நீரை கண்ணாடித் தட்டில் ஊற்றி ஆறவையுங்கள். ஒரு நாள் கழித்துப் பார்த்தால் தண்ணீரில் அலுமினியம் ஹைட்ராக்சைடு உப்பு வீழ்படிவாக இருக்கும். சாதாரண தண்ணீருடனே இப்படியாக வினைபுரியும்போது அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் புளி, தக்காளி, உப்பு, எலுமிச்சை ஆகியவற்றுடன் வினைபுரியும்போது எவ்வளவு உப்பு நம்மிடம் தேங்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

உடலில் உட்புகும் அலுமினியத்தை நமது சிறுநீரகத்தால் சுத்திகரிக்க முடியாது. இதனால் அது உடலை விட்டு வெளியேறாமல் உடலின் பல பகுதிகளில் தங்கி விடும். 40 ஆண்டுகள் அலுமினியப் பாத்திரத்தில் சமைத்த உணவுகளை உட்கொண்டால் 5 மில்லிகிராம் அளவு அலுமினியம் நமது உடலில் தங்கியிருக்கும். இதுவே உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய அளவுதான். அதனால் அலுமினியத்தை மெல்லக் கொல்லும் விஷம் என்று சொல்லலாம்.

டெஃப்லான் கோட்டிங் போடப்பட்ட அலுமினியப் பாத்திரத்தைத்தான் நாம் ‘நான் ஸ்டிக்’ என்று பயன்படுத்தி வருகிறோம். அதனை கீறல் விழாதபடி பயன்படுத்துமாறு எச்சரிக்கிறார்கள். ஏனென்றால், கீறல் விழும்போது அலுமினியம் வெளியே வந்து விடும் என்பதால்தான். டெஃப்லான் கோட்டிங்கால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்ட பின் டெஃப்லான் கோட்டிங் பொருட்களைப் பயன்படுத்தி புற்றுநோய்க்கு ஆளானவர்கள் அந்நிறுவனங்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்" என்கிறார் சிவசாமி.

அலுமினியத்தை உட்கொள்ளும்போது ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதற்கு மாற்று குறித்தும் விளக்குகிறார் சித்தவர்ம மருத்துவர் பு.ம.சரவணன்...‘‘உடலில் தங்கும் அலுமினியம் சிறுநீரகம், எலும்பு மற்றும் நரம்பு மண்டலங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மூளை செல்களின் வளர்ச்சியை பாதிப்பதால் மறதிநோய், எண்ணச் சிதைவு நோய் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது. அலுமினியம் என்பது சமைப்பதற்கான உலோகப்பொருள் அல்ல. சங்க காலத்திலிருந்தே இரும்பு மற்றும் மண் பாத்திரங்களைத்தான் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.

மண் பாத்திரத்தில் சமைக்கும் போது சமைக்கின்ற பொருளின் இயற்கைத் தன்மை மாறாமல் அப்படியே இருக்கும். அதன் சத்துகளும் பெரும் அளவில் அழியாது. சீக்கிரத்தில் உணவுப் பொருள் கெட்டுப்போகாது என்பதால் மண் பாத்திரங்கள்தான் ஆகச்சிறந்தது என்று சொல்லலாம்.  இரும்புப் பாத்திரத்தில் சமைக்கும்போது இரும்புச் சத்து இல்லாதவர்களுக்கு இரும்புச் சத்து கிடைக்கும். தென்னாப்பிரிக்க நாடுகளில் பெரும்பாலானோருக்கு இரும்புச் சத்து குறைவாக இருந்தது. சமைக்கும் பாத்திரத்தில் இரும்புத் துண்டைப் போட்டு சமைக்கும்படி அறிஞர்கள் வலியுறுத்தினர்.

இந்த அறிவுரையை ஆரம்பத்தில் யாரும் ஏற்கவில்லை. தென்னாப்பிரிக்க மக்களின் நம்பிக்கை சார்ந்த சின்னமாக மீன் சின்னம் இருக்கிறது. இரும்பில் மீன் சின்னம் செய்து அதனை சமையல் பாத்திரத்தில் போட்டு சமைத்தால் அதிர்ஷ்டம் வரும் என்கிற கருத்தைப் பரப்பினர். சில மாதங்களிலேயே இம்முறையில் சமைத்ததை சாப்பிட்டவர்களுக்கு இரும்புச் சத்து கூடியதை அந்நாட்டு மருத்துவர்கள் கண்டறிந்தனர். இருந்தாலும் ஒரு கட்டத்துக்கும் மேல் இரும்புச் சத்து உடம்பில் சேர்ந்தால் அது உபரியாகி சிட்ரோசிஸ்என்னும் நோய் ஏற்படலாம்.

செம்புப் பாத்திரத்தில் மருத்துவ குணம் இருப்பது இது வரையிலும் ஆதாரப் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. களிம்பு உற்பத்தியாகும் என்பதால் அடிக்கடி செம்பை சுத்தப்படுத்திய பின்னரே பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் உடல் ரீதியான உபாதைகள் ஏற்படும். எல்லாவற்றையும் விட எளிமையான வழி என்றால் அது எவர்சில்வர்தான்.  இரும்பு+ தகரம்+ நிக்கல் + மேங்கனீஸ்+ கார்பன் என பல உலோகங்களின் கூட்டுக் கலவைதான் ‘எவர்சில்வர்’.

இதை வெப்பப்படுத்தும்போது கூட தீங்கை ஏற்படுத்தும் வேதிமாற்றங்கள் நடைபெறாது.  விலை கூடுதலானாலும் யோசிக்காமல் தரமான எவர்சில்வராக பார்த்து வாங்க வேண்டும். குக்கரில் கூட எவர்சில்வரை பயன்படுத்துவது நல்லது.  ஸ்டெயின்லெஸ் பாத்திரங்களைப் பயன்படுத்தும்போது கீறல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அதனுள் இருக்கும் நிக்கல் உணவில் கலந்து விடும்’’ என்கிறார் பு.ம.சரவணன்.
உடலில் அலுமினியத்தின் அளவு அதிகரிக்கும் போது, மூளைக்கான ஊட்டச்சத்து மற்றும் ஆக்சிஜன் போதாமை உண்டாகி,  oxidative stress ஏற்பட்டு மூளை வீக்கம் அடையலாம். அலுமினியம் ஏற்படுத்தும் பாதிப்பால் dementia என்னும் மறதி நோய் ஏற்படுகிறது. ஆரம்பகாலங்களில் டயாலிசிஸ் மருந்துகளில் அலுமினியம் இருந்தது.

ஆனால், தற்போது அதற்கு மாற்றாக பல மருந்துகள் வந்து விட்டன. எப்படியாயினும் அலுமினியம் உடலில் உட்புகுவது பல தீய விளைவுகளுக்கு நம்மை ஆளாக்கிவிடும்’’ என்கிறார் நரம்பியல் நிபுணர் புவனேஸ்வரி. ஒவ்வொன்றிலும் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டாக வேண்டிய காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமது பண்டைய வாழ்க்கை முறையைத்தான் நமக்கான பாடமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அலுமினியம் தவிர்ப்போம்!


கண்ணாடியை சூரிய ஒளி மின் பலகையின் மேல் பொருத்துவது ஏன்? அந்தக் கண்ணாடி மேல் படியும் தூசியை என்ன செய்யலாம்? சோ.சண்முகசுந்தரம், மதுரை சூரிய ஒளி மின் பலகைகளில், 'போட்டோ வோல்டிக் செல்'கள் ஏராளமாக பதிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மீது படும் சூரிய ஒளிதான் மின்சாரமாக மாறுகிறது. இவை மீது மழைநீர் பட்டால், நாளடைவில் செயல்திறன் குறையக்கூடும். தவிர, பறவை எச்சம், இலைகள், மரக் குச்சிகள் என்று பலவும் சூரிய ஒளி பலகைகள் மீது விழும். இதைத் தடுக்கத்தான் கண்ணாடியை பதிக்கின்றனர். இந்த கண்ணாடி மீது காற்றிலுள்ள துாசி படியும். இதை அவ்வப்போது துடைக்காவிட்டால், சூரியனின் கதிர்கள் படும் அளவு குறையும்; இதனால் மின்சார உற்பத்தியும் குறையும். தினமும் சுத்தமாக துடைத்து வைத்த சூரிய மின் பலகைகள், 30 சதவீதம் வரை, கூடுதல் மின்சாரத்தை உற்பத்தி செய்யும். லாரி மின்கலன் பெட்டி மீது, 'தினமும் என்னை கவனி!' என்று எழுதியிருப்பர். அதேபோலத் தான் சூரிய ஒளி பலகைகளுக்கும் பராமரிப்பு அவசியம்.
இந்தக் காலத்துல யாரையும் நம்ப முடியலீங்க’ என்று சிலர் புலம்புவதைக் கேட்டிருப்போம். இப்போதெல்லாம் நோயைக் கூட அப்படி நம்ப முடிவதில்லை. நெஞ்சுவலி ஏற்பட்டால் அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கும் என்பது நமக்குத் தெரியும். சம்பந்தமில்லாமல் தாடையில் வலி ஏற்பட்டால், அதுவும் மாரடைப்பின் அறி குறிதான் என்கிறார்கள் ஆய்வாளர்கள். மாறுவேடத்தில் இப்படியும் அறிகுறிகள் காண்பிக்குமா? இதய சிகிச்சை மருத்துவரான கிருபாகரனிடம் கேட்டோம். ‘‘வழக்கமாக மாரடைப்பு ஏற்படுவதன் அடையாளமாக நெஞ்சுதான் வலிக்கும். இதற்கு Typical symptom என்று பெயர். எதிர்பாராத வகையில் ஏற்படும் தாடைவலி போன்ற அறிகுறிகள் ஏற்படுவதை Atypical symptom என்று சொல்லலாம். இது தாடைவலியாக மட்டுமல்ல... கழுத்து வலி, இடது தோளில் வலி, முதுகு வலி என்று சம்பந்தமில்லாத இடத்திலும் அறிகுறியைக் காண்பிக்கும். இந்த வலி இதயத்திலிருந்து தான் உருவாகும். ஆனால், இதயத்துடன் தொடர்பில்லாத இடத்தில் வலிப்பது போல் நமக்குத் தோன்றும். அதற்காக, தாடைவலி வந்தாலே மாரடைப்பாகத்தான் இருக்கும் என்று பயப்பட வேண்டியதில்லை. இதுபோன்ற Referred pain அறிகுறி, 10 இதய நோயாளிகளில் ஒருவருக்குத்தான் ஏற்படுகிறது. அதே நேரத்தில், தாடைவலியை பல் சம்பந்தப்பட்ட பிரச்னையாக இருக்கும் என்றோ, ஈறுவலியாக இருக்கலாம் என்றோ அலட்சியமாகவும் இருந்துவிடக் கூடாது. குறிப்பாக உணவை மெல்லும்போது அதிகமாகும் தாடை வலி, காலை நேரத்தில் ஏற்படும் வலி போன்றவற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. நம் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளும் வகையில் பொது மருத்துவரிடமோ இதய சிகிச்சை மருத்துவரிடமோ ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது. ஒரு இ.சி.ஜி. எடுத்துப் பார்த்தால் தாடை வலியின் நிஜக் காரணம் என்னவென்று தெரிந்துவிடும்!’’

                 எச்சரிக்கை அடுத்த மாதம் இலங்கை அழியுமா ?

 

 

 

 

 வானத்தில் இருந்து வேகமாக வந்து கொண்டிருக்கும் மர்மப் பொருள் ஒன்று, அடுத்தமாதம் 13ஆம் நாள் சிறிலங்கா அருகே பூமியைத் தாக்கும் என்று நாசா விண்வெளி நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வானில் சுற்றிக் கொண்டிருக்கும் அடையாளம் தெரியாத மர்மப் பொருள் ஒன்றே சிறிலங்கா அருகே கடலில் விழவுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இந்த மர்மப் பொருள், மூன்று தொடக்கம் 7 அடி வரை (சுமார் 2 மீற்றர்) நீளமுள்ளதாக இருக்கலாம் என்றும், இது ஏவுகணை ஒன்றின் பாகமாகவோ அல்லது, அல்லது சந்திரனுக்கு முன்னர் அனுப்பப்பட்ட விண்கலத்தின் பாகமாகவோ இருக்கலாம் என்று நாசாவின் நிபுணரான பில்கிரே தெரிவித்துள்ளார்.
சந்திரனுக்கு அப்பால் சுற்றிக் கொண்டிருக்கும் இந்த மர்மப்பொருளுக்கு, விஞ்ஞானிகள் WT1190F என்று பெயரிட்டுள்ளனர். சிறிலங்கா அருகே விழப்போகும் மர்மப் பொருள்-WT1190F இந்த மர்மப்பொருள், வரும் நவம்பர் 13ஆம் நாள் வெள்ளிக்கிழமை காலை 6.15 மணியளவில், சிறிலங்காவுக்கு அப்பால் தென்பகுதியில் சுமார் 40 மைல் தொலைவில் இந்தியப் பெருங்கடலில் விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது பூமியை வந்தடைய முன்னர் எரிந்து போகும் என்று நம்பப்படுகின்ற போதிலும், அந்தப் பகுதியில் மீன்பிடிக்க அனுமதிக்கப்படுவதை தாம் விரும்பவில்லை என்றும், நாசா நிபுணர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே இந்த மர்மப் பொருள் மிக வேகமாகவும், சூடாகவும் பூமியை நோக்கி வரும் என்றும், இது ஏவுகணை ஒன்றின் இயந்திரத்தின் பாகமாக இருக்கலாம் என்றும், மற்றொரு விண்வெளி நிபுணரான ஜொனாத்தன் மக் டோவல் தெரிவித்துள்ளார். அதேவேளை, விண்வெளியில், சுமார் 5 இலட்சம் பல்வேறு சிதைவுகள், சுற்றிக் கொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

 

 

 

 

 

 

பாலஸ்தீனை தனி நாடாக அங்கீகரித்தது தென் அமெரிக்க நாடுகள் : ரியாத் உச்சி மாநாட்டில் பிரகடனம்.....!! | online srilankan



மதுபான விற்பனையைத் தடை செய்யவும் மதுபான அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்யவும் நாட்டின் ஜனாதிபதி என்றவகையில் தான் முழுமையாக தயாராக இருந்தபோதும் இன்று ஒரு சமூக சக்தியாக மாறியிருக்கின்ற போதைப் பொருளை முழுமையாகத் தடைசெய்வது முடியுமா என்பது முழு உலகமும் எதிர்நோக்கியுள்ள மிகப்பெரும் சமூகப் பிரச்சினையாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
உலகில் உயர்ந்த அபிவிருத்திகளைக் கொண்டுள்ள நாடுகள் முதல் எல்லா நாடுகளும் எல்லா சமூகங்களும் இந்த போதைப்பொருள் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளன என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். போதைப்பொருள் பிரச்சினையை சமூகத்திலிருந்து முழுமையாக ஒழித்துக்கட்ட முடியாதபோதிலும் சமூகத்தை போதைப்பொருள்களில் இருந்து பாதுகாப்பதற்கு எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
நேற்று (நவம்பர், 16) கேகாலை ஜோசப் கல்லூரியில் நடைபெற்ற போதைப்பொருளில் இருந்து விடுதலை பெற்றநாடு மூன்றாவது கட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத்தெரிவித்தார்.
சட்டவிரோத போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளில் பதவிகள் மற்றும் நட்பின் அடிப்படையில் எவருக்கும் எந்தவொரு உதவியையும் பெற்றுக்கொடுக்கத் தான் தயாரில்லை எனக்குறிப்பிட்ட ஜனாதிபதி, குற்றவாளிகளுக்கு வழங்க முடியுமான உச்சபட்ச தண்டனைகளை வழங்குவது அரசாங்கத்தின் கொள்கையாகும் என்றும் குறிப்பிட்டார்.
பாடசாலைகள், விகாரைகள் மற்றும் நகருக்கு அண்மித்த இடங்களில் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவர அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
போதைப்பொருள்களை ஒழித்தல் தொடர்பில் அதிகபட்ச சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் செயற்பட்டபோதும் போதைப்பொருள் பாவனையைக் குறைப்பது சமூகப் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். மகாசங்கத்தினர்கள், சமயத்தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட எல்லோரும் இந்த விடயத்தில் ஒன்றுபட வேண்டும் என்றும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
அமைச்சுக்கள் திணைக்களங்கள் கூட்டுத்தாபனங்கள் உள்ளிட்ட சகல அரச நிறுவனங்களிலும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான பிரிவைத் தாபிப்பதற்கும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியதுடன், போதைப்பொருளில் இருந்து விலகியிருப்பது தொடர்பான செய்தியை சமூகத்தின் கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டத்திற்கு என்று இல்லாமல், மேலிருந்து கீழ் என்றவகையில் கொண்டுவருவதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக தாபிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியூடாக மாவட்ட மட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக தேவையான சுற்றுநிரூபங்களும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மாவட்ட செயலாளர் அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலாளர் அலுவலகங்களுக்கு இது தொடர்பில் கூடிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிகழ்ச்சித்திட்டத்தை செயல்திறனாக நடைமுறைப்படுத்துவதற்கு எல்லோரும் ஒன்றுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, கபீர் ஹசீம், சபரகமுவ மாகாண முதலமைச்சர் மஹீபால ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் பிரதேச பாடசாலைப் பிள்ளைகள் பெருமளவில் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நன்றி – ஜனாதிபதி செய்தி ஊடகம்


தற்போது பிரான்ஸில் நடந்துவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் தொடர்சியான பயங்கரவாதா தாக்குதல்கள் விரைவில் இலங்கையில் கொழும்பில் அல்லது கிழக்கு மாகாணத்தில் உள்ள பிரதேசங்களில் இடம்பெறலாம் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்தார்.
மதத்தீவிரவாத கற்கை நெறிகள் முஸ்லிம் மக்களுக்கு போதிக்கப்பட்டு அவர்களை தீவிரவாதிகளாக்குவவதன் பின் விளைவுகளை முஸ்லிம் சமமூகம் விரைவில் எதிர்கொள்ள நேரிடும் எனவும் குர்ஆனில் உள்ள இஸ்லாம் சார்ந்த அடிப்டை கோட்பாடுகள் தற்பேதைய நடைமுறைக்கு சாத்தியமற்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பிரான்ஸ் தாக்குதல் தொடர்பில் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரிடம் எமது ஊடகவியலாளர் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் இலக்கு தற்போது பிரான்ஸிற்கு அச்சுறுத்தலாகியுள்ளது. இந்நிலையில் விரைவில் இந்த அமைப்பின் இலக்கு இலங்கை பக்கம் திரும்பலாம் என்ற அபாயம் நிலவுகின்றது. தற்பேதைய அசாங்கத்தின் புதிய வீசா வழங்கும் திட்டமும் அவர்கள் நாட்டிற்குள் நுளைய சாதகமான காரணியாகயுள்ளன.
கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளிலும், குருணாகல் பரகாதெனிய பிரதேசம், மாவனெல்லை, மாளிகாவத்தை உள்ளிட்ட பல பிரதேசங்களிலும் மதரஸா  என்ற போர்வையில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புக்கள் மத தீவிரவாதத்தை பரப்பி வருகின்றன. இது எமது நாட்டிற்கு எதிர்காலத்திற்கு அச்சுறுத்தலாக அமையலாம்.
ஐ.எஸ். அமைப்பினை விடவும் கொடூரமான அமைப்புக்கள் உருவாகும் சாத்தியம் காணப்படுகிறது.
உலகில் இடம் பெறும் கடும் போக்கு வாதிகளின் தாக்குதல்களை நாம் விமர்சிக்கின்றபொழுது எமக்கு பலர் இனவாதியாக முத்திரை குத்துகின்றனர். இது தொடர்பில் சமூக பொருப்புடன் செயற்படும் முஸ்லிம் தலைவர்களும் மௌனம் காத்து வருகின்றனர்.
பொதுவாக எல்லா சமூகத்திலும் கடும்போக்குவாதம் பேசப்படுவது இயல்பு. ஆனால் பொருப்புணர்வு மிக்க மதத்தலைவர்கள் தொடர்ந்தும் மௌனம் காக்கும் பட்சத்தில் அவர்களின் அமைதிப் போக்கு எதிர்காலத்தில் முஸ்லிம் சமூத்திற்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலாக அமைந்துவிடக்கூடும்.
தற்காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் வாழும் இளைஞர்கள் பலர் ஐ.எஸ் இயக்கதின் பக்கம் ஈர்க்கப்டுகின்றனர். இவர்கள் தாம் தீவிரவாத அமைப்பில் சேர்ந்துள்ளோம் என தமது பெற்றோர்களுக்கும் அறிவிப்பதில்லை இவர்கள் அல்லாஹ் என்று இறைவனின் பெயரை கூறிவிட்டு எந்த தவறையும் துணிந்து செய்கின்றனர்.
மாற்றம் ஏற்பட வேண்டுமாயின் முஸ்லிம் சமூகத்தில் பொருப்புணர்வு உள்ளவர்களின் அமைதி களையவேண்டியது அவசியம். அதே போல் பிரான்ஸின் தலைநகர் பரிஸில் பிரான்சியர் அல்லாத வேறு இனத்தவர்களே வாழ்ந்தனர். அதனால் ஐ.எஸ். இன் தாக்குதலில் அதிகமாக அப்பாவி பொதுமக்கள் இறந்துள்ளனர். எனவே எதிர்காலத்திலும் இவ்வாறன தாக்குதல்கள் தொடரும் பட்சத்தில் ஐ.எஸ். இயக்கதினால் முஸ்லிம் சமூத்திற்கு, இவ்வாறான நிலைமைக்கு முகம்கொடுக்க நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்தார். (க|ச)








உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் அரபு நாடுகள் மற்றும் தென் அமெரிக்க நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்றது.
மாநாட்டில் சவூதி அரேபிய மன்னர் சல்மான் உள்ளிட்ட அனைத்து நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
தென் அமெரிக்க நாடுகளான அர்ஜெண்டினா, பிரேஸில் உருகுவே, பெரு, சிலி, ஈக்வடார், பொலிவியா, பராகுவே ஆகிய நடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
தென் அமெரிக்க நாடுகள் பாலஸ்தீனை தனி இஸ்லாமிய நாடாக அங்கீகரிப்பதாக மாநாட்டின் மூலம் உலக நாடுகளுக்கு பிரகடனம் செய்யப்பட்டது.
மேலும் பாலஸ்தீன் மீது இஸ்ரேல் அரங்கேற்றி வரும் அத்துமீறல்களுக்கு கடும் கண்டனங்களும் பதிவு செய்யப்பட்டது.
அரபு நாடுகளும், ஆசிய நாடுகளும் ஏற்கனவே பாலஸ்தீனுக்கு ஆதரவாக இருந்து வரும் நிலையில் தென் அமெரிக்க நாடுகளும் பாலஸ்தீனுக்கு ஆதரவாக பிரகடனம் செய்துள்ளது.
சவூதி அரேபிய மன்னர் சல்மான் அவர்கள் ஆட்சி பொறுப்பை ஏற்ற போது உலக முஸ்லிம்களை பாதுகாப்பது தமது கடமை என்றும் அதிலும் குறிப்பாக பாலஸ்தீன் மக்களை காப்பது முதலாவது என்றும் இதற்காக தாம் உறுதி பூண்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.
இறைவனின் அருளால் சல்மான் அவர்கள் பாலஸ்தீனுக்கு ஆதரவாக சர்வதேச சமூகத்தை ஒன்றிணைத்து வருகிறார். கடந்த மாதத்தில் ஐநா வாசலில் அனைத்து நாடுகளின் கொடிகளுடன் பாலஸ்தீன் கொடியும் ஏற்றப்பட்டது.

by ; muka nool muslim media
| Copyright © 2013 Online Srilankan