அண்மையில் இஸ்லாத்தை தழுவிய அமெரிக்காவின் பிரபல்யமான கால்பந்தாட்டவீரர் இமானுவல் அட்பயோர் (Emmanuel Adebayor )என்பவர் இஸ்லாத்தை தழுவியதற்கான 13 காரணங்களை கூறுகிறார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
1.இயேசுநாதர் (ஈஸா அலை) ஏகஇறை கொள்கையையே நிலைநிறுத்தினார். (Deut 6:4, Mark 12:29)
திரு குர் ஆனில் சொல்லப்பட்டுள்ள இதனையே முஸ்லிம்களும் பின்பற்றுகின்றனர் (திருகுர்ஆன் 4:171)
2. பன்றியின் இறைச்சியை இயேசுநாதர் (ஈஸா அலை) சாப்பிடவில்லை.(Leviticus 11:7)
இதேபோன்று முஸ்லிம்களுக்கும் பன்றியின் இறைச்சி தடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் உண்பதுமில்லை. (திருகுர்ஆன் 6:145)
3. இயேசுநாதர் (ஈஸாநபி) "அஸ்ஸலாமு அலைக்கும்" உங்கள்மீது சாந்தி உண்டாவதாக என்று முகமன் கூறினார். (John 20:21)
இதையே முஸ்லிம்களும் தங்களுடைய வாழ்க்கையில் ஒருவரை ஒருவர் சந்திக்கும்பொழுது பின்பற்றுகின்றனர்.
4. ஒரு விடயத்தை செய்யநினைக்கும்பொழுது, "இறைவன் நாடினால்" என்று இயேசுநாதர் கூறினார்
இதையே முஸ்லிம்களும் குரானில் கூறப்பட்டுள்ளவாறு பின்பற்றுகின்றனர். (திருகுர்ஆன்18:23- 24)
5. இறைவனை வணங்குவதற்கு முன்னர் இயேசுநாதர் (ஈஸாநபி) முகத்தையும், கைகளையும், கால்களையும் கழுவினார்.
முஸ்லிம்களும் தொழுகைக்கு முன்னர் இவ்வாறே வுழூ செய்கின்றனர்.
6. பைபிளில் கூறப்பட்ட முன்னைய நபிமார்களை போன்று இயேசுநாதர் (ஈஸாநபி) நெற்றியை தரையில் வைத்து இறைவனை வணங்கினார்.
(Matthew 26:39)
முஸ்லிம்களும் தங்களது இறைவணக்கத்தை இவ்வாறே செய்கிறார்கள்.
( திருகுர்ஆன் 3: 43)
7. இயேசுநாதர் (ஈஸா நபி) தாடி வைத்திருந்ததுடன், நீண்ட அங்கியும் அணிந்திருந்தார்.
முஸ்லிம்களை பொறுத்தவரை இது முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சுன்னத்தாகும்.
8. இயேசுநாதர் (ஈஸாநபி) நபிமார்கள் அனைவர் மீதும் நம்பிக்கை வைத்திருந்ததுடன், அவர்களது சட்டங்களையும் பின்பற்றினார்கள். (Matthew 5:17)
இதுபோன்றே முஸ்லிம்களும் முஹம்மது நபி (ஸல்) அவர்களுடன் சேர்த்து, அனைத்து நபிமார்களையும் கண்ணியப்படுத்துகிறார்கள். (அல்குர்ஆன் 3:84, 2:285)
9. இயேசுநாதருடைய (ஈஸா நபி) கண்ணியத்திற்குரிய பரிசுத்தமான தாயாரான மரியம் (அலை) தங்களது தலைமுடியை மூடியும், உடம்பின் பகுதிகள் வெளித்தெரியாமலும் கண்ணியமாக ஆடை அணிந்திருந்தார்கள். (1 Timothy 2:9, Genesis 24: 64-65, Corinthians 11:6)
இவ்வாறே முஸ்லிம்பெண்களும் ஹிஜாப் என்னும் கண்ணியமான உடையணிந்து, அன்னிய ஆடவர்களின் பார்வையிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்கின்றனர். (திருகுர்ஆன் 33:59)
10. இயேசுநாதரும் (ஈஸாநபி) பைபிளில் கூறப்பட்ட முன்னைய நபிமார்களை போன்று 40 நாட்கள் நோன்பிருந்தார்கள். (Exodus 34:28, Daniel 10:2-6 , 1 Kings 19.8, Matthew 4:1)
முஸ்லிம்களுக்கும் ரம்ளான் மாதத்தில் நோன்பிருத்தல் கட்டாயமாகும். அதனுடன் சேர்த்து அடுத்துவரும் மாதத்தில் விருப்ப நோன்பிருக்கிறார்கள். (திருகுர்ஆன் 2:183)
11.இயேசுநாதர் (ஈஸா நபி) வீட்டினுள் பிரவேசிக்கும்பொழுது, “இங்கு அமைதி உருவாகட்டுமென்றும்“, வீட்டில் இருப்பவர்களைபார்த்து, “உங்கள்மீது சாந்தி உண்டாகட்டுமென்றும்கூறுவார்கள். (Luke 10:5)
இதேபோன்றே முஸ்லிம்களும் வீட்டினுள் நுழையும்பொழுது "அஸ்ஸலாமுஅலைக்கும்" உங்கள்மீது சாந்தி நிலவட்டுமாக என்று கூறுமாறு திருகுர்ஆன் பணிக்கிறது. (திருகுர்ஆன் 24:61)
12. இயேசுநாதர் (ஈஸா நபி) விருத்தசேதனம் செய்திருந்தார். அவர்களுக்கு விருத்தசேதனம் செய்யும்பொழுது அவர்கள் 8 நாள் குழந்தை .(Luke 2:21) தோராவில் குறிப்பிட்டது போன்று, நபி ஆபிரஹாம் (அலை) அவர்களுக்கு எப்பொழுதுமே கட்டுப்படவேண்டிய உடன்படிக்கையென்று (விருத்தசேதனம் செய்தல்) இறைவன் கட்டளையிட்டிருந்தான். (Genesis 17,13)
திருகுர்ஆனில் 16:123 அத்தியாயத்தில் முஸ்லிம்கள் இப்ராஹிம் (அலை) அவர்களின் மார்க்கத்தை (வழிமுறையை) பின்பற்றவேண்டுமென கேட்கப்பட்டுள்ளார்கள் என முஹம்மது நபி (ஸல்) கூறினார்கள்; இப்ராஹிம் நபி அவர்களுக்கு விருத்தசேதனம் செய்யப்பட்டபொழுது, அவர்களுக்கு எட்டு வயது. (சஹீஹ் புஹாரி, முஸ்லிம், அஹ்மட்)
13. இயேசுநாதர் (ஈஸாநபி) அராமிக் மொழி பேசினார்கள். இறைவனை "எலாஹ்" (Elah) என்று அழைத்தார்கள். அது "அல்லாஹ்" என்று அரபியில் உச்சரிப்பதற்கு சமனாகும். அராமிக் பைபிளின் மொழியாகவும், மிகத்தொன்மையானதுமாகும். அம்மொழியில் ஹீப்ரு, அரபு, எதியோப்பியா, பபிலோனியா, ஆகிய பாஷைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகும். எனவே அராமிக் மொழியில் "எலாஹ்" என்பது அரபியில் "அல்லாஹ்" என்பதற்கு சமனான இறைவனை குறிப்பதாகும். ஏனெனில் "எலாஹ்"என்ற சொல், அரபியில் உள்ள "அல்லாஹ்" என்ற வார்த்தையிலிருந்து உதித்ததாகும்.
எனவே இயேசுநாதரை (ஈஸா நபி) உண்மையான முறையில் பின்பற்றுபவர்கள், கீறிஸ்தவர்களா??? முஸ்லிம்களா??? "ஆகவே நான் இப்பொழுது உண்மையான இயேசுநாதரை (ஈஸாநபி) பின்பற்றுவதன்மூலம், இறுதிநபியாகிய முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய மார்க்கத்தை பூரணமாக பின்பற்றுகின்றேன்". இவ்வாறு இமானுவல் அட்பயோர் கூறினார்.




யூத விஞ்ஞானி ராபர்ட் கில்ஹாம் இஸ்லாத்தை ஏற்றார்
கருவியல் ஆராய்ச்சியாளரான ராபர்ட் கில்ஹாம் ஒரு யூதர்.
இவர் இஸ்லாத்தைத் தழுவிய விதம். இவரது மனமாற்றத்திற்கு வழி செய்தது திருக்குர்ஆனின் ஒரு வசனம்.
‘மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்)வரை (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும்” (2:228) என்கிறது அத்திருவசனம்.
மணவிலக்கு செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதம் காத்திருந்த பின்பே -அதாவது மூன்று மாதவிடாய் பருவங்களில் ‘இத்தா’ இருந்த பின்பே மறுமணம் செய்ய வேண்டும்
‘‘விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்)வரை (மறுமணம் செய்யாமல்) தங்கள் விஷயத்தில் காத்திருக்க வேண்டும்’’ (2:228) என்கிறது ஒரு வசனம்.
இந்த வசனத்தைப் படித்தபோதுதான் ராபர்ட் மனம் மாறினார்.
ராபர்ட் நீண்ட காலமாக ஓர் ஆய்வை மேற்-கொண்டிருந்தார். கைவிரல் ரேகைப் பதிவு (Finger Printing) ஒரு மனிதனை அடையாளம் காட்டுவதைப் போன்றே, டி.என்.ஏ. ரேகைப் பதிவு தம்பதியரை அடையாளம் காட்டிவிடும்.
‘ஒரு பெண்ணில் பதிவாகியுள்ள ஆணின் டி.என்.ஏ. ரேகைப் பதிவு மூன்று மாதங்களுக்குப் பிறகே அழியும்” என்பது ராபர்ட்டின் ஆராய்ச்சி முடிவு.
அதையே குர்ஆனின் இவ்வசனம் கூறுகிறது என்பதைக் கண்ட யூத விஞ்ஞானி ஆடிப்போனார்; குர்ஆனை ஏற்றார்.
இது தொடர்பாக, எகிப்தைச் சேர்ந்த டாக்டர் அப்துல் பாசித் முஹம்மது சையித் கூறுகிறார்:
அறிவியல் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டே ராபர்ட் கில்ஹாம் இஸ்லாத்தில் இணைந்துள்ளார். தம்பதியர் உடலுறவு கொண்டால், ஆண் தனது பாலின ரேகையைப் பெண்ணிடம் விட்டுச்செல்கிறான்.
அந்த ரேகை மூன்று மாதங்களுக்குப் பிறகே முற்றாக அழியும் என்று ராபர்ட் கண்டுபிடித்தார்.அதற்கேற்ப, அமெரிக்காவில் ஆப்பிரிக்க முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஒரு பகுதியில் கள ஆய்வில் இறங்கினார் அவர் அப்பகுதியில் வாழும் முஸ்லிம் பெண்களிடம் அவர்களின் கணவர்களது ரேகை மட்டுமே பதிவாகியிருந்தது.
அதே நேரத்தில், அமெரிக்கப் பெண்கள் வாழும் ஒரு தெருவில் ஆய்வை மேற்கொண்டபோது, அப்பெண்களிடம் பல்வேறு ரேகைகள் காணப்பட்டன. மூன்று வெவ்வேறு ரேகைகள் அவர்களில் பதிவாகியிருந்தன.
ராபர்ட் கில்ஹாம் அதிரடியாக ஒரு காரியம் செய்தார். அவர் தம் மனைவியை மருத்துவப் பரிசோதனைக்கு ஈடுபடுத்தினார்.
அவளிடம் மூன்று ரேகைப் பதிவுகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அத்துடன் தம்முடைய மூன்று மகன்களில் ஒருவன் மட்டுமே தமக்குப் பிறந்தவன் என்பதையும் கண்டறிந்தார்.
இதிலிருந்து, மூன்று மாத ‘இத்தா’ ஏன் கடமையாக்கப்பட்டது என்பதற்கான காரண விளக்கமும் கிடைக்கிறது.
முந்தைய கணவனின் டி.என்.ஏ. ரேகைப் பதிவு முற்றாக அழிய மூன்று மாதங்கள் பிடிக்கும்.
அதன்பின் அவள் மறுமணம் செய்துகொண்டால், டி.என்.ஏ. பரிசோதனையில் குழப்பம் இராது. இல்லையேல், மறுமணம் செய்தபின் பிறக்கும் குழந்தையின் டி.என்.ஏ.வும் முந்தைய கணவனின் டி.என்.ஏ.வும் ஒத்துப்போக இடமுண்டு.
குழந்தை யாருடையது என்ற குழப்பம் வெடிக்கும்....
இந்த உண்மையை குர்ஆன் கூறியுள்ளதை ஒப்புகொண்டார் இஸ்லாத்தை ஏற்றார் .

by newyork



அமெரிக்காவில் தனியாருக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மீது மோதி, வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 9 பேரும் பலியாயினர்.
அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் உள்ள டேய்ட்டன் பகுதியில் இருந்து ஆர்கன் புளுட்டோன் சர்வதேச விமான நிலையம் நோக்கி தனியாருக்கு சொந்தமான ஹாக்கர் H25 ரக ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டுச் சென்றது. இதில் இரு விமானிகள், ஏழு பயணிகள் என மொத்தம் ஒன்பது பேர் இருந்ததாக தெரிகிறது.
குறைவான உயரத்தில் பறந்தபோது, புறப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 2 மைல் தூரத்தில் மின்ஒயர் மீது மோதி, நிலைகுலைந்த ஹெலிகாப்டர் அருகாமையில் இருந்த ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மீது மோதி, வெடித்துச் சிதறியது.
அந்த ஹெலிகாப்டரில் இருந்த ஒன்பது பேரும் இந்த விபத்தில் பலியானதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன








பிறந்த குழந்தை வீறிட்டு அழ வேண்டும். அப்படி அழுமேயானால் அதன் நுரையீரல் ஆரோக்கியமாக உள்ளது என அறியலாம். பிறந்தவுடன் குழந்தை அழவே இல்லை என்றாலும் உடனே நாம் செய்ய வேண்டியது இந்த வர்மபுள்ளியை ஒரு நிமிடம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருங்கள். குழந்தைகள் அழ ஆரம்பிக்கும். இப்புள்ளி குழந்தையின் கை கட்டை விரல் நக ஓரம் இருக்கும். இது நுரையீரலின் 11-ஆவது புள்ளியுடன் சம்பந்தப்பட்டது.
 குழந்தைக்கு சேனை வைப்பார்கள். அது தேனாக இருக்க வேண்டும். சீனிப் பாலாக இருக்கக் கூடாது. ஏன் இதற்கு சேனை என்று பெயர் வந்தது தெரியுமா?

  கருவிலுள்ள குழந்தையே கதை கேட்டதாகச் சொல்லப்படும்போது வெளியே வந்த அந்தப் புது உயிருக்குத் தம்மைச் சுற்றிலும் எத்தனை உறவுகள் உள்ளது என அறியும்போதே அதன் மனதில் நம்பிக்கையும் உருவாகுமே. பின் ஆரோக்கியம் என்பது தொடரும் அல்லவா? அந்த நம்பிக்கையை வளர்ப்பதன் பெயர்தான் சேனை.
 பின் தாயின் பாலை அறிய வைக்கலாம். எவ்வளவுதான் நாகரிக காலத்தில் நாம் வாழ்ந்தாலும் 16-ஆவது நாளிலிருந்து 48 நாள் வரையிலும் தினமும் ஏதாவது ஒரு மூலிகையை அரை டம்ளர் வெந்நீரில் வேகவைத்து அந்தத் தண்ணீரானது ஒரு சங்கு அளவு வற்றிவிட வேண்டும். (மூலிகை என்பது நம் வீட்டைச் சுற்றியே உள்ளது) இந்தப் பழக்கம் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டவும், உடலில் கழிவுகள் தங்காமலும் பாதுகாக்கும்.
 குழந்தையைக் குளிப்பாட்ட கோதுமை மாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பெண் குழந்தையாக இருந்தால் தரமான மஞ்சள் கிழங்கு, பச்சை பயறு, கஸ்தூரி மஞ்சள், மரிக்கொழுந்து, செண்பகப்பூ, ஆவாரம் பூ, காய், நாட்டு ரோஜா இதழ் இவற்றின் கலவை நல்லது.
 தாய்ப்பால்  ியாக இரண்டுடத்ுக்க கொடுப்பதால் குழந்தைக்கும் தாய்க்குமே நல்லது. தாய்ப்பால் அதிகமாகச் சுரக்க தினமும் 10 கடலைப்பருப்பு, பால் கொழுக்கட்டை, கருப்பட்டி போன்றவற்றை உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும். 6 மாதக் குழந்தைக்கு தோல் உளுந்து, பச்சைப்பயறு, பொரிகடலை, சிவப்பு நிற அவல் இவற்றை நன்கு வறுத்த பின்பு மாவாக்கி அதையும் சலித்துவிட்டு அந்த மாவைக் கருப்பட்டி சேர்த்து காய்ச்சிய கஞ்சியாக அடிக்கடி கொடுக்கலாம். அளவு மிகவும் முக்கியம். கீரை வேக வைத்த தண்ணீர் (அரைக்கீரை) பருப்பு வேக வைத்த தண்ணீர், சீரகம், கறிவேப்பிலை, மல்லி, புதினா ஆகியவற்றின் வேக வைத்த தண்ணீர் குழந்தைக்கு நல்லது.  2 வயது அப்புரம் எளிதில் ஜீரணமாகும் உணவைத் தேர்வு செய்யுங்கள்.
 அதேபோல் குழந்தைக்கு உணவைத் திணிப்பதைத் தவிருங்கள். கிண்ணத்தில் உணவு மிச்சமாகக் கூடாது என எண்ணும் நீங்கள் உங்கள் குழந்தையின் வயிறு என்னவாகும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.அதை நீங்கள் அன்பு, பாசம் என்று நினைப்பீர்களேயானால் அது உங்களின் அறியாமையே ஆகும். வருங்கால நிரந்தர நோயாளியை உருவாக்கிக் கொண்டுள்ளீர்கள் என்பதையும் உணருங்கள். யாரைக் கேட்டாலும் குழந்தை சாப்பிடவே மாட்டேங்குது என்பது பெற்றோர்களின் புலம்பல். அதன் வயிறுக்குத் தேவையானபோது அது உணவைத் தேடும்.
 அதேபோலதான் படிப்பும். நீங்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டும் என்று வற்புறுத்துவதை விட்டுவிட்டு எப்படிப் படித்தால் அவர்களுக்குப் புரியும் என்ற வழியை மட்டுமே காண்பியுங்கள். கற்றுக் கொள்ளும் முயற்சியை குழந்தைகள் பார்த்துக் கொள்வார்கள். எல்லா விஷயத்திலேயும் உங்களின் தலையீடு அதிகமானால் குழந்தையின் முயற்சி தடையாகும். எல்லாம் அம்மா பார்த்துக் கொள்வாள் என்ற எண்ணம் உருவாகும்.
 உணவை உண்ணவில்லை என்பதற்காக உணவுக்கிடையே அடிக்கிறீர்களே, அது மிகவும் மடைமையான செயல். இடையில் காய்கறி சூப், வாரம் ஒரு நாள் இஞ்சிச் சாறும் தேனும். 6 மாதத்திற்கு ஒருமுறை வயிற்றைச் சுத்தம் செய்வது தொடருமேயானால் வரும் காலமாவது நோயில்லாத தமிழ்நாடாக மாறும். அதில் உங்களின் பங்களிப்பு இருக்கட்டுமே.
 இப்போது கருப்பையை வெட்டி எடுப்பது மிகவும் சாதாரணமான விஷயமாகிவிட்டது. கேட்டால் வயிற்றில் கட்டி அல்லது அதிகமான தீட்டு வெளியேற்றம் என்று பல காரணம். நான் ஒன்று கேட்கலாமா? வயிற்றில் கட்டி இருந்தால் வெட்டி எடுத்துவிடலாம். கண்ணில் கட்டி வந்தால் என்ன செய்யலாம்? வெட்டி எடுத்துவிடலாமா? இதுவரையிலும் கருப்பை செய்து கொண்டிருந்த வேலையை இனி யார் செய்வது?
 மாற்று முறை மருத்துவத்தில் எவ்வளவோ இருக்கிறது. கற்றுக் கொள்ளுங்கள்.



| Copyright © 2013 Online Srilankan