எதிர்வரும் உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் மற்றும் ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணித் தலைவராக லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடர் இந்த முறை இருபதுக்கு20 ஓவர் போட்டிகளாக நடத்தப்படவுள்ளன.
இந்தத் தொடர்களில் இலங்கை அணியின் உபதலைவராக அஞ்சலொ மெத்யூஸ் செயற்படுவார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் நடைபெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லசித் மலிங்க மற்றும் அஞ்சலோ மெத்யூஸ் ஆகியோரின் உடல் நிலை தற்போதைக்கு சிறப்பாக இல்லாததால் இந்தியாவுக்கு எதிரான இருபதுக்கு20 தொடரில் தினேஷ் சந்திமால் இலங்கை அணியை வழிநடத்துவார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவரான திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.








No comments:
fazlycherryeducation.blogspot.com