Posted by
onlinesrilankan
|
Friday, February 5, 2016 |
12:13:00 PM
குடும்பத்தையே கைது செய்தாலும் பின்வாங்கப் போவதில்லை – மஹிந்த ராஜபக்ஸ அறிக்கை
68 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
இராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பினால் 2009 ஆம் ஆண்டின் மே மாதத்தில் பிரிவினைவாத, பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க முடிந்ததாக முன்னாள் ஜனாதிபதி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சுதந்திரம் வெற்றி கொள்ளப்பட்டதை அடுத்து அதனை எப்போதும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனவும் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
தமது மகன் உள்ளிட்ட சிலர் சிறையிலிடப்பட்டுள்ள நிலையில், தமது குடும்பத்தையே கைது செய்தாலும் நாட்டின் பூரண சுதந்திரத்தை மீள ஸ்தாபிக்கும் திட்டத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
fazlycherryeducation.blogspot.com