ஜிம்பாப்வேயில் பேரழிவுகால நிலை பிரகடனம்: உணவின்றி 25 இலட்சம் பேர் பரிதவிப்பு

ஜிம்பாப்வேயில் பேரழிவுகால நிலை பிரகடனம்: உணவின்றி 25 இலட்சம் பேர் பரிதவிப்பு
ஜிம்பாப்வேயில் வறட்சியினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பெரும் பிரதேசங்களில் பேரழிவுகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வேயில் பேரழிவுகால நிலையை அறிவிக்குமாறும், அவ்வாறு அறிவித்தால்தான் சர்வதேச கொடையாளி நாடுகள் உணவு உதவிக்காக நிதி வழங்க முன்வருவார்கள் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்திருந்தது.
இதனால், ஜிம்பாப்வேயில் பேரழிவுகால நிலையை அந்நாட்டு அதிபர் ரொபர்ட் முகாபே பிரகடனப்படுத்தியுள்ளார்.
வறட்சி காரணமாக ஜிம்பாப்வேயில் விவசாயம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் சுமார் 25 இலட்சம் மக்கள் உணவுத் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது.
மேய்ச்சல் தரைகள் இல்லாமல் ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
அங்குள்ள மக்கள் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan