எம்பிலிபிட்டிய சம்பவம்;10 மில்லியன் நட்ட ஈடு கோரும் மனைவி!

 
 
 
எம்பிலிபிட்டியவில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த இளைஞனின் மனைவி, பத்து மில்லியன் ரூபா நட்டஈடு கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

உயர்நீதிமன்றில் அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அத்துடன் தமது கணவனின் உயிரிழப்பிற்கு காரணமானவர்களை காலம் தாழ்த்தாது உடன் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் கடந்த ஜனவரி மாதம் 4ஆம் திகதி பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 29 வயதான இளம் குடும்பஸ்தர் பலியானார். குறித்த இளைஞனை பொலிஸார் மாடியிலிருந்து தள்ளிவிட்ட காரணத்தாலேயே அவர் உயிரிழந்ததாக அவரது மனைவி மற்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் கைதுசெய்யுமாறு கடந்த வாரம் எம்பிலிபிட்டிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. எனினும், இதுவரை எந்தவொரு பொலிஸ் அதிகாரியும் கைதுசெய்யப்படாத நிலையில், கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan