தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு, எதிர்வரும் 23ஆம் திகதியன்று, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மாநகர அபிவிருத்தி அமைச்சுப் பதவியே பொன்சேகாவுக்கு கிடைக்கவிருப்பதாக அறியமுடிகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பியான எம்.கே.டி.எஸ் குணவர்தன மரணமடைந்ததையடுத்து ஏற்பட்ட எம்.பி பதவி வெற்றிடத்துக்கே, சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நேற்றிரவு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சாய்ந்தமருது கிளையில் இடம்பெற்ற கருத்தரங்கை குழப்பி, மர்க்கஸிக்கும் கல்லெறிந்து, மர்க்கஸையும் உடைக்க திட்டமிட்டு, மர்க்கஸில் பயானை கேட்டுக் கொண்டிருந்த எமது சகோதரர்களுக்கு கல்லெறிந்தும் தாக்கிய அனைவருக்கு எதிராகவும் குறிப்பாக சட்டத்தை அமுல் படுத்தாமல் பாரபட்சம் காட்டிய கல்முனை போலிஸ் அதிகாரிககளுக்கும் தக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
Related Pots
இன்ஷா அல்லாஹ் இன்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சாய்ந்தமருது கிளையில் இரத்ததான முகாம் நடைபெறும்.
அனைத்து சகோதர, சகோதரிகளும் தங்களது குருதிக்கொடைகளை அல்லாஹுவுக்காக வழங்கி அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்.
அல்குர்ஆன் 5:32
Related Pots
எதிர்வரும் வாரத்தில் தனது மூத்த மகன் நாமல் ராஜபக்ஷ, கைது செய்யப்படுவார் என்றும் அதற்கு அவரைத் தயாராக இருக்குமாறு, தான் கூறியதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஒருவர் கைது செய்யப்படுவதற்கு முன்னர், அவரைப் பற்றிய கேள்விகள் நாடாளுமன்றத்தில் அதிகமாக கேட்கப்படும் என்றும் கடந்த வாரங்களில் நாமல் ராஜபக்ஷ குறித்தான கேள்விகள் அதிகமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனாலேயே சிறைக்குச் செல்வதற்கு தயாராக இருக்குமாறு, தனது மகனுக்கு தான் கூறியதாக அவர் தெரிவித்தார்.