இந்தியாவுடன் விரிவான பொருளாதார கூட்டு தொடர்பான ஒப்பந்தத்தில் (சீபா) கையெழுத்திடப் போவதில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் பிரதமர் ஆற்றும் விஷேட உரையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

பொறுப்பு மிக்க தொழிற்சங்கமான அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பொய்யான மற்றும் ஆதாரமற்ற கருத்துக்களை கூறி, தமது உறுப்பினர்களையும் மக்களையும் ஏமாற்றுவதைக் கண்டிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் பிரிதொரு பெயரில் இந்தியாவுடன் சீபா ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளதாகவும், இதன் மூலம் வேலையற்ற இந்திய இளைஞர்களுக்கு இலங்கையில் பணிபுரிய வாய்ப்புகள் கிட்டவுள்ளதாகவும், இது இலங்கையிலுள்ளவர்களின் வேலை வாய்ப்பு சந்தர்ப்பங்களை பாதிக்கும் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டிருந்தது என ரணில் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை கடந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தை மாற்ற பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை களமிறங்கிய போது, பல்வேறு தொழிற் சங்கங்கள், தமது தொழில் வாய்ப்புக்கள் மட்டுமன்றி உயிரையும் பணையம் வைத்து எம்முடன் கைகோர்த்தனர் என கூறிய அவர், இதன்போது பல வைத்தியர்களும் எம்முடன் இருந்தனர் எனவும் தெரிவித்தார்.


எனினும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உயர் ஆசனங்களில் உள்ள சிலர் ஜனவரி 8ம் திகதி புரட்சியுடன் இணைந்திருக்கவில்லை எனவும், அவர்கள் ராஜபக்ஷ ஆட்சியை பாதுகாக்கவே இணைந்திருந்தாகவும், இதனை முழு நாடே அறிந்திருந்ததாகவும் ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு இருக்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உயர் பதவியில் இருப்பவர்கள் பொய் கூறி தமது உறுப்பினர்களையும், நாட்டையும் ஏமாற்ற முயற்சிப்பது, அவர்கள் இன்னும் ராஜபக்ஷ ஆட்சியின் அடிமைகளாக இருப்பதாலேயே என தௌிவாவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் சீபா ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை எதிர்க்கவில்லை எனவும், தொழிலுக்காக இந்தியர்களை அனுமதிக்கும் பகுதியை நீக்கக் கோரவில்லை எனவும் தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இதுஇவ்வாறு இருக்க சீபா ஒப்பந்தம் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை கூறி நாட்டை நெருக்கடிக்குள் தள்ள அவர்கள் முற்படுவதாகவும் சீபா ஒப்பந்தத்திற்கு பதிலாக பொருளாதார மற்றும் தொழிநுட்ப ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தீர்மானித்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.


‘‘தமிழகத்துல வருஷத்துக்கு 2 லட்சம் பொறியாளர்கள் உருவாகி வர்றாங்க. மற்ற துறை பட்டதாரிகளும் லட்சக்கணக்குல வர்றாங்க. 90 சதவிகித மாணவர்களோட மனநிலை - படிப்பு முடிஞ்சதும் ஏதாவது ஒரு கம்பெனியில வேலை... மாதா மாதம் சம்பளம் - அவ்வளவுதான். உலகத்துல இளைஞர் வளம் நிறைஞ்ச நாடுகள்ல முன்னிலையில இருக்கிறது இந்தியாதான். ஆனா, இங்கே பயன்படுத்துற 70 சதவிகிதப் பொருட்கள் வெளிநாடுகள்ல கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த 30 வருஷமா பெரிய கண்டுபிடிப்புகள் ஏதும் இங்கே நிகழல... பெருகி வர்ற மக்கள்தொகைக்கு ஏற்ப தேவைகள் பெருகிக்கிட்டிருக்கு. உற்பத்தித் துறையில ஏகப்பட்ட பங்களிப்பு தேவைப்படுது. நாடு அந்த பங்களிப்பைத்தான் மாணவர்களிட்ட எதிர்பார்க்குது. அதுக்குத் தகுந்த வகையில மாணவர்களை மேம்படுத்துற வேலையை ‘டை சென்னை’ அமைப்பு மூலமா நாங்க செய்றோம்...’’ - புன்னகை மாறாமல் பேசுகிறார் அகிலா ராஜேஷ்வர்... பெரிய பின்புலங்கள் இன்றி தட்டுத்தடுமாறி தடையை கடந்து சாதித்து இன்று முன்மாதிரிகளாக வளர்ந்திருக்கும் தொழிலதிபர்கள் இணைந்து நடத்தும்TiE Chennai (chennai.tie.org) அமைப்பின் எக்சிகியூட்டிவ் டைரக்டர்!

‘டை சென்னை’ அமைப்பு மாணவர்களையும் படிப்பு முடித்த இளைஞர்களையும் சுய தொழில் முனைவோராக மாற்றுவதற்கான பல்வேறு பணிகளை முன்னெடுக்கிறது. மாணவர் மத்தியில் தொழிலதிபர்களைக் கொண்டு அனுபவப் பகிர்வுகளை நடத்துவது, சிறந்த தொழில் திட்டங்கள் வைத்திருக்கும் மாணவர்களை முதலீட்டாளரிடம் அறிமுகம் செய்வது, திட்டங்களை விரிவுபடுத்தி வழிகாட்டுவது, இளம் தொழில்முனைவோரை உற்சாகப்படுத்துவது, ‘ஏஞ்சல் ஃபண்ட்’ முதலீட்டாளர்களை ஒருங்கிணைப்பது என பல்வேறு பணிகளில் ஈடுபடுகிறது.



TiE (The Indus Entrepreneurship)  என்ற உலகளாவிய அமைப்பு 1992ல் அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் தொடங்கப்பட்டது. இன்று உச்சத்தில் இருக்கும் தொழிலதிபர்களும், இளம் தொழிலதிபர்களும், தாங்கள் ஆரம்ப காலங்களில் பட்ட சிரமங்களை அடுத்த தலைமுறையினர் படக்கூடாது என்ற நோக்கத்தில் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்காக இந்த அமைப்பை தொடங்கினர். இப்போது உலகெங்கும் 18 நாடுகளில் 61 பிரிவுகளில் இந்த அமைப்பு செயல்படுகிறது. இந்தியாவில் 16 கிளைகள் செயல்படுகின்றன. அதன் ஒரு அங்கமான ‘டை சென்னை’ 2014ல் தொடங்கப்பட்டது.

‘‘புதிய தொழில்முனைவோருக்கும், தொழில் முனைவோராக விரும்புபவர்களுக்கும், வெற்றிகரமான தொழிலதிபர்களுக்கும் இடையில் தொடர்பை உருவாக்குவது, பயிற்சி அளிப்பது, திட்டங்களை முறைப்படுத்தி முதலீட்டாளர்களோடு இணைப்பை உருவாக்குவது போன்ற பணிகளை டை சென்னை செய்கிறது. 800 உறுப்பினர்கள்... 165 மூத்த உறுப்பினர்கள் பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுகிறார்கள். மாதம் 10 நாட்கள் ஏதேனும் ஒரு நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்துகிறோம். தொழில் தொடங்க முடிவு செய்திருப்பவர்கள், தொழில் தொடங்க திட்டம் வைத்திருப்பவர்கள், தொழில் தொடங்கி தொடக்க நிலையில் இருப்பவர்களுக்கு பல்வேறு வகையில் உதவிகள் செய்கிறோம்.



முன்பெல்லாம் ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்றால் முதலீட்டுக்கு வங்கியில் கடன் கேட்டு அலைய வேண்டும். அல்லது கூடுதல் வட்டிக்கு தனி நபர்களிடம் கடன் வாங்க வேண்டும். இதில் ஏராளமான நடைமுறைச் சிக்கல்கள் உண்டு. அதனால் பலரிடம் நல்ல திட்டங்கள் இருந்தாலும் அது வெறும் சிந்தனையுடனே முடிந்து போய்விடும். இன்று நிலை மாறிவிட்டது. பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு இன்று முன்னணியில் இருக்கும் தொழிலதிபர்கள் தங்களுக்குப் பின்னால் வரும் தலைமுறை அப்படியான இடர்பாடுகளில் சிக்கக்கூடாது என்ற நல்ல நோக்கத்தில் பல திட்டங்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அப்படியான ஒரு திட்டம்தான் ஏஞ்சல் ஃபண்ட். நல்ல திட்டமும் செயலூக்கமும் இருக்கும் இளைஞர்கள் முதலீட்டுக்காக அலைய வேண்டியதில்லை. அவர்களின் தொழிலில் முதலீடு செய்ய ஏஞ்சல் ஃபண்ட் இருக்கிறது. தவிர மத்திய, மாநில அரசுகள் இதற்கென ஏராளமான நிதியை ஒதுக்கி வைத்துக்கொண்டு இளைஞர்களுக்காக காத்திருக்கின்றன. அந்த நிதியை குறைவான இளைஞர்களே  பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

இந்த விஷயத்தில் விழிப்புணர்வூட்டவும், ஏஞ்சல் ஃபண்ட் முதலீடு பற்றி விளக்கவும் 25 நாள் பயிற்சி முகாம்களை நடத்துகிறோம். ஓராண்டுக்கு ஆயிரம் பேர் இலக்கு. அவர்களின் ஐடியாக்களைப் பெற்று ஆய்வு செய்து அதை நடைமுறைக்கு சாத்தியமாக மாற்றி, செயல்திட்டமாக்கி புராஜெக்ட் ரிப்போர்ட்டாக ரெடி பண்ண உதவுகிறோம். முதலீட்டாளர்களிடம் அப்பாயின்மென்ட் வாங்கி அவர்கள் முன் அமர வைக்கிறோம். அவர்களை ஈர்த்து முதலீட்டைப் பெற வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் திறனைப் பொறுத்தது. கல்லூரி மாணவர்களிடம் ஏகப்பட்ட சிந்தனைகள் புதைந்து கிடக்கின்றன. பலர் அற்புதமான தொழில் திட்டங்களை வைத்திருக்கிறார்கள். அதை எப்படி விரிவாக்குவது, செயல்படுத்துவது என்று தெரியாமல் தங்களுக்காகவே அதை முடக்கிக்கொண்டு ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்து விடுகிறார்கள். அந்த திட்டம் அப்படியே தொலைந்து விடுகிறது. புராஜெக்ட் என்ற பெயரில் பொறியியல் கல்லூரிகளில் உருவாக்கப்படும் பல கருவிகள் அறைகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்கின்றன.

அவற்றை மேம்படுத்தி பொதுப்பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு தடையாக இருப்பது பணம். அதற்காகத்தான் ஏஞ்சல் ஃபண்ட் உருவாக்கப்பட்டிருக்கிறது. மாணவர்களை படிக்கும் காலத்திலேயே உற்சாகப்படுத்தி எதிர்காலத்தை வளமாக்கும் பணியை இப்போது ‘டை சென்னை’ கையில் எடுத்திருக்கிறது. மாணவர்களிடம் நெருங்கிப் பழகி அவர்களின் உளவியலையும், திறனையும் அறிந்தவர்கள் பேராசிரியர்கள்தான். முதற்கட்டமாக அவர்களுக்கு ஒரு பயிற்சி வகுப்பை தொடங்கியிருக்கிறோம். மாணவர்களை உற்சாகப்
படுத்துவது, அவர்களின் திறனை மேம்படுத்துவது, அவர்களின் ஐடியாக்களை மேம்படுத்தி அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவது போன்ற பயிற்சிகளை தேர்ந்த நிபுணர்கள் மூலம் வழங்குகிறோம். மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, கல்லூரிகள் மட்டத்தில் மாணவர்களின் தொழில் சார்ந்த சிந்தனைகளை மேம்படுத்தும் வகையில் 45 கல்லூரிகளில் இன்குபேட்டர் என்ற ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அத்திட்டத்திலும் டை சென்னை பங்களிப்பு செய்கிறது.

மேக் இன் இந்தியா திட்டம் இந்தியாவின் பெருங்கனவாக விளைந்திருக்கிறது. இளம் தலைமுறை எங்காவது ஓரிடத்தில் வேலை செய்தால் போதும் என்ற மனநிலையில் இருந்து விடுபட்டு நாம் நூறு பேருக்கு வேலை தரவேண்டும் என்ற சிந்தனையோடு கல்வி நிறுவனத்தை விட்டு வெளியே வரவேண்டும். அந்த பக்குவத்தை மாணவர்களுக்கு உருவாக்குவதற்காகத்தான் முன்னோடிகளையும் முன்மாதிரிகளையும் அவர்கள் முன்னால் நிறுத்துகிறோம்...’’ என்கிறார் அகிலா.

காக்னிசன்ட் நிறுவனத்தின் தலைவர் லட்சுமி நாராயணன், மெடால் நிறுவனத்தின் நிறுவனர் ராஜி வெங்கட்ராமன், சுரேஷ் கல்பாத்தி, நாராயணன் உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களும் நிறுவனங்களின் நிறுவனர்களும் டை சென்னை அமைப்பின் பயிற்சி முகாம்களில் பங்கேற்று வழிகாட்டுகிறார்கள். இளம் தலைமுறைக்கு இருக்கும் இரண்டு பிரச்னைகள், அவநம்பிக்கை, தாழ்வு மனப்பான்மை. அவற்றைப் போக்கி, ஒரு வளமான வாழ்க்கையை அவர்களுக்கு அடையாளம் காட்டுகிறது இந்த அமைப்பு. நம்பிக்கைதானே
வளர்ச்சிக்கு விதை!




மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நிவாரண நிதியாக பாலிவூட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ரூ 1 கோடி வழங்கியுள்ளார்.

இந்த நிதியை தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ளார்.

ஷாருக்கான், அமீர்கான் போன்ற நடிகர்களை நாட்டை விட்டே விரட்ட வேண்டும் என்று சொன்ன இராம.கோபாலன் இதுவரை எந்த நிதியும் அறிவிக்காமல் இருப்பது அவர்களின் இந்துத்துவா கள்ள வேடங்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறது




அடுத்த  இப்போ பெய்த மழையைவிட பலமடங்கு மழைக்கு வாய்ப்பு என தேசிய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. ஜப்பானிய வான்வெளி ஆய்வு முகவர் ஒருவரும் நாசாவும் வெளீயிட்டுள்ள அறிக்கையின்படி சென்னையில் பெய்வது மழை அல்ல  EL Nino சூழற்சிப்  புயல் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 250 Cm வரைக்கும் பெய்த இந்த சுழற்சிப் புயல் மீண்டும் சென்னையை தாக்கும் வாய்ப்புக்கள் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னையே முழுகி போக வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுவதனால் சென்னை கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கி உடனே நகரும்படி பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் நாசா வானிலை மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் இதுவரை அடித்த சுழற்சிப் புயலால் பெய்த மழையினால் தென் இந்தியாவின் அதாவது தமிழ்நாட்டு கடற்கரையோரங்கள் குறிப்பாக சென்னை நகரம் கடுமையாக  பாதிக்கப்பட்டதுடன், 260 க்கும் மேற்பட்டோர் இக்கடும் மழை வெள்ள அனர்த்தத்தினால் உயிரிழந்ததாகவும் மேலும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
மேலும் தென் இந்தியாவை தாக்கிய இச் சுழற்சிப் புயல் இலங்கையையும் தாக்கும் எனவும் நாசா மேலும் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில்  இலங்கையில் பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் அவசர அவசரமாக திறந்து விடப்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் சாலைகளும் வீதிகளும் நீரில் மூழ்கி காணப்படுகின்றன.
மட்டக்களப்பு-பொலநறுவை நெடுஞ்சாலையில் மன்னம்பிட்டிய மற்றும் கல்லல ஆகிய இடங்களிலும், மன்னார்-புத்தளம் சாலையில் எழுவான்குளத்திலும் இப்படியான நிலை காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவிக்கின்றது.

புத்தளம், மன்னார் மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் பாதுப்புகள் மற்றும் இடம்பெயர்வு தொடர்பான அறிக்கை பதிவாகியுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மையம் வெளியிட்டுள்ளது.்
வானிலை அவதான நிலையம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி மழையுடன் கூடிய கால நிலை இலங்கையிலும் நீடிக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

நிஜ வாழ்வில் 2 கிலோ எடையைக் குறைக்கவே படாத பாடுபடுகிறோம். கொஞ்சம் எடை போடலாம் என்றால் அதுவும் அத்தனை சீக்கிரம் நடப்பதில்லை. ஆனால், அடுத்த படத்துக்காக 10 கிலோ எடை கூடினார் கமல், 18 கிலோ எடை குறைந்தார் நமீதா என்று சினிமா நட்சத்திரங்கள் பற்றி அவ்வப்போது சாதாரணமாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.


`ரெட்’ படத்தில் வெயிட் போட்டிருந்த அஜித், ‘பரமசிவன்’ படத்தில் பாதியாக வந்து நின்று தெறிக்க வைத்தார். சமீபத்திய சிக்ஸ்பேக் சீஸனில் சூர்யா முதல் பரத், அதர்வா வரை பலரும் கலந்து கொண்டு இந்திய அளவில் டிரெண்டானார்கள். எல்லோரையும் விட, படத்துக்குப் படம் கூடுவிட்டுக் கூடு பாயும் விக்ரம் செய்வதெல்லாம் அநியாயம்… அக்கிரமம்!‘சேது’வில் இளைத்துக் காட்டியவர், ‘தில்’ படத்தில் கட்டுமஸ்தானார். 

‘ஐ’ படத்தில் அதிர வைத்தார். 14 கிலோ எடை குறைத்தார், ஒரு பாடல் காட்சிக்காக 110 கிலோ வரை எடை கூடினார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. இந்த வெயிட் மேஜிக் வரிசையில் லேட்டஸ்ட்டாக சேர்ந்திருக்கிறார் அனுஷ்கா. ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் குண்டுப் பெண்ணாக நடிப்பதற்காக எடை கூடிய அனுஷ்கா, இப்போது மீண்டும் பழைய எடைக்கு வருவதற்கான முயற்சியில் இருக்கிறார் என்கிறார்கள். சினிமா நட்சத்திரங்களுக்கு மட்டும் எப்படி இந்த வெயிட் மேஜிக் சாத்தியமாகிறது?

கமல்ஹாசன் உள்பட பல சினிமா நட்சத்திரங்களின் ஆஸ்தான ஃபிட்னஸ் டிரெயினரான ஜெயக்குமாரிடம் கேட்டோம்...‘‘ஒருவருக்கு சராசரியாக 2 ஆயிரத்து 400 கலோரி சக்தி உள்ள உணவுகள் தேவை. இது ஒருவருடைய வேலை, எடை, வயது போன்றவற்றின் அடிப்படையில் மாறுபடும். இந்த தேவையான கலோரி அளவை மட்டுமே சரியாக எடுத்துக்கொண்டால் அதே எடையைத் தக்கவைத்துக் கொள்ளலாம், கலோரி கள் தேவைக்கும் அதிகமானால் எடையும் அதிகமாகும். போதுமான கலோரிகள் எடுத்துக் கொள்ளாத பட்சத்தில் எடை குறையும். புரத உணவுகளை எடுத்துக்கொண்டு, உடற்பயிற்சிகள் செய்தால் தசைகள் வலிமையடையும். உடற்பயிற்சி இல்லாவிட்டால் கொழுப்பாக எடை கூடும். இதுதான் அடிப்படை.

அனுஷ்காவை பொறுத்த வரை, தனது உடல்வாகின் தேவைக்கும் அதிகமாக மூன்று வேளை உணவு, இடையிடையே நொறுக்குத்தீனிகள், உடற்பயிற்சிகள் செய்யாமல்தான் இப்படி எடை கூடியிருக்கிறார். பொதுவாக, பெண்களுக்கு இயல்பாகவே ஒரு பருவத்தில் எடை கூடும். சிம்ரன், மீனா போன்றவர்களுக்கு டிரெயினராக இருந்திருக்கிறேன்.

திருமணமாகும் வரை உடலை டிரிம்மாக பராமரித்தவர்கள், ஒரு கட்டத்தில் பரவாயில்லை என்று விட்டுவிட்டார்கள். திருமணம், குழந்தை பிறப்பு போன்ற காரணங்களால் எடை கூடும் பெண்கள் அதன்பிறகு எடையைக் குறைக்க முடிவதில்லை. இந்த நிலையில், அனுஷ்கா தானாகவே முன்வந்து ஒரு படத்துக்காக எடை கூடியிருப்பது துணிச்சலான முயற்சி. ஆனால், அவர் சாதாரணமாக இதை செய்திருக்க மாட்டார். முறைப்படி ஒரு மருத்துவரையோ, ஃபிட்னஸ் டிரெயினரையோ ஆலோசித்துத்தான் இந்த முயற்சியில் ஈடுபட்டிருப்பார்.

அவர் யோகா டீச்சர் என்பதால் அவருக்கு இந்த விவரங்கள் நன்றாகவே தெரிந்திருக்கும். எடையைக் கூட்ட உணவு மட்டுமே போதும். எடையைக் குறைக்கவோ உணவுமுறையிலும் மாற்றம் செய்ய வேண்டும், கடினமான உடற்பயிற்சிகளும் செய்ய வேண்டி இருக்கும் என்பதும் அவருக்குத் தெரிந்திருக்கும்.பல சினிமா நட்சத்திரங்களும் இதுபோல் புரொபஷனலாகத்தான் எடையைக் குறைத்துக் கூட்டுகிறார்கள்.

அவர்களைப் போல நாமும் எடையைக் கூட்ட வேண்டும், குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தகுதி வாய்ந்த ஃபிட்னஸ் டிரெயினரின் மூலமே முயற்சிகளைச் செய்ய வேண்டும். குறிப்பாக, உடலில் பிரச்னை எதுவும் இருந்தால் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எடை சம்பந்தப்பட்ட முயற்சிகளைச் செய்யவே கூடாது’’ என்கிறார். எடையைப் பராமரிப்பதில் நாம் செய்கிற தவறுகள் என்னென்ன?

‘‘சிலர் நள்ளிரவில் தூங்கச் செல்கிறார்கள். காலை 10 மணிக்கு மேல் எழுகிறார்கள். இதுபோல தாமதமாகத் தூங்கும்போது ஹார்மோன் மாற்றங்கள் தலைகீழாக நடக்கும். தூக்கமின்மையால் கார்டிசோல் ஹார்மோன் அதிகமாக சுரந்து இடுப்பில் சதை போடும். எளிதில் கவலைப்படுகிறவர்களுக்கு, உணர்ச்சிவசப்படுகிறவர்களுக்கு, டென்ஷன் காரணமாக இந்த கார்டிசோல் ஹார்மோன் அதிகம் சுரக்கும். ஒருவர் சரியாக சாப்பிட்டு, உடற்பயிற்சி செய்தாலும் நேரம் கடந்து சாப்பிட்டு, இரவு சரியாக தூங்காமல் தவறான லைஃப் ஸ்டைலில் இருந்தால் எடை போடும்.

மூளையில் இருந்து சுரக்கும் Growth hormone ஒருவர் இளமையாக இருக்கவும், தசைகளின் வளர்ச்சிக்கும், கொழுப்பைக் கரைக்கவும் பயன்படுகிறது. இந்த ஹார்மோன் உடற்பயிற்சி செய்யும்போதும், இரவில் தூங்கும்போதும்தான் அதிகம் சுரக்கும். அதனால்தான் இரவு தூக்கத்தை Beauty sleep என்கிறார்கள். சீக்கிரமாகத் தூங்கி அதிகாலையில் எழுகிறவர்களுக்குத்தான் Growth hormone மூலமாகப் பலன்கள் கிடைக்கும். அதனால் இரவு உறக்கம் என்பது எடை பராமரிப்பில் மிகவும் அவசியம்.

இன்னொன்று இயற்கைக்கு எதிரான எந்த செயலையும் செய்யக் கூடாது. ‘மருதநாயகம்’ ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை கமல் சாருக்கு டிரெயினராக இருக்கிறேன். ஒவ்வொரு படத்துக்குத் தகுந்தாற்போலவும் உடலை மாற்றுவார். ஆனால், அது முறைப்படிதான் நடக்கும்.

‘ஆளவந்தான்’ படத்தின் நந்து கேரக்டருக்காக 12 கிலோ எடை கூடினார். அதே படத்தில் விஜய் என்கிற இன்னொரு கேரக்டருக்காக எடையைக் குறைத்து ஃபிட்டாக இருக்க வேண்டும் என்ற ரிஸ்க் இருந்தது. அதற்காக இயற்கைக்கு எதிரான எந்த முயற்சிகளையும் நாங்கள் செய்யவில்லை. பாடி பில்டர்கள் செய்யக் கூடிய கடினமான எடைப் பயிற்சிகளை செய்தார். சிக்கன், மீன் போன்ற புரதம் நிறைந்த உணவுகளை நிறைய எடுத்துக் கொண்டார். புரோட்டீன் பவுடரை அமெரிக்காவில் இருந்து வரவழைத்தோம். விஜய் கேரக்டர் எடுக்கும்போது அதற்குத் தகுந்தாற்போல உணவை மாற்றி, எடை பயிற்சிகளைக் குறைத்தோம்.

 இயற்கையான உணவுமுறை, உடற்பயிற்சியின் மூலமே எடையைக் கூட்டி, குறைக்க வேண்டும். இயற்கைக்கு எதிரான வழிகள், செயற்கையான சிகிச்சைகள் உடனடியாகப் பலன் தந்தாலும் எதிர்காலத்தில் பெரிய பக்கவிளைவுகளைத் தரும்’’ என்று  எச்சரிக்கிறார்.

நடிகர்கள் எப்படி தயாராகிறார்கள் என்று ஆன்டி ஏஜிங் மற்றும் லைஃப் ஸ்டைல் மேனேஜ்மென்ட் நிபுணரான கௌசல்யா நாதன் விளக்குகிறார்.
‘‘பல  படங்களில் நடிகர், நடிகைகளுடன் பணிபுரிந்திருக்கிறேன். படம்  தொடங்குவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே நடிகர்களைத் தயார் செய்ய ஆரம்பித்துவிடுவோம். உடல்ரீதியாக ரத்தப் பரிசோதனை, ஹார்மோன் பரிசோதனை, வைட்டமின், மினரல் பரிசோதனை செய்துவிடுவோம்.

அதன்பிறகு, அவர்களின் உடல்நிலைக்கு ஏற்றவாறு என்னென்ன உணவுகள் சாப்பிட  வேண்டும், என்னென்ன உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் என்று  தீர்மானிப்போம். எடையைக் குறைக்க வேண்டும் என்றால் மாதத்துக்கு 2  கிலோ எடையைக் குறைக்க வைப்போம். 3 மாதங்களில் 6 கிலோ எடை குறைந்தவுடன்  அடுத்தகட்டமாக மீண்டும் ஒரு டயட்டை வடிவமைப்போம், உடற்பயிற்சிகளைத் தீர்மானிப்போம். அதன்பிறகு, மாதம் ஒரு கிலோ குறைந்தால்  போதும்.

உணவில்  காய்கறிகள் சூப் சேர்ப்போம், புரதச்சத்துகளைக் கொஞ்சம் பேலன்ஸ் பண்ணுவோம்.  உடலின் நிலையைப் பொறுத்து சர்க்கரை சேர்த்தோ சேர்க்காமலோ ஜூஸ் சாப்பிட  வைப்போம். இதுபோல பல கட்ட முயற்சிகள் நீங்கள் திரையில் பார்ப்பதற்குப்  பின்னால் இருக்கிறது’’ என்பவர், திருமணத்துக்குப் பின் நடிகைகள் ஏன்  குண்டாகிவிடுகிறார்கள் என்பதையும் விளக்குகிறார்.

‘‘பெண்களுக்கு  இயல்பாகவே திருமணம், குழந்தை பிறப்புக்குப் பின் எடை கூடிவிடும். இதற்கு  கர்ப்ப காலத்தில் எடை கூடுவது முக்கிய காரணமாக இருக்கிறது. கர்ப்ப  காலத்தில் 12 கிலோ வரை எடை கூடலாம். இந்த எடையைக் கண்காணிக்க வேண்டும்.  குழந்தை பிறந்த நான்காவது மாதத்திலிருந்து தங்களுடைய எடையைக் குறைக்க  முயற்சிக்க வேண்டும்.

குழந்தைக்கு ஒரு வயது ஆகும்போது, அம்மா பழைய எடைக்கு  வந்திருக்க வேண்டும். இந்த கட்டத்தில் அலட்சியமாக இருந்தால் அதன்பிறகு  எடையைக் குறைப்பது சிரமமாகிவிடும். பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்  பிரச்னை இருந்தாலும் எடையைக் குறைப்பது சிக்கலாகும். மெனோபாஸ் நிலை, ஹார்மோன் கோளாறுகளால் அதிகம் சாப்பிட வேண்டும் என்கிற மனநிலை ஏற்படுவது போன்ற பல காரணங்கள் இருக்கிறது. அதனால், அந்தந்த காலகட்டங்களில் எடையைக் கண்காணித்துக் கொண்டே இருப்பது அவசியம்’’ என்கிறார் டாக்டர் கெளசல்யா.

மூளையில் இருந்து சுரக்கும் Growth hormone ஒருவர் இளமையாக இருக்கவும், தசைகளின் வளர்ச்சிக்கும், கொழுப்பைக் கரைக்கவும் பயன்படுகிறது. இந்த ஹார்மோன் உடற்பயிற்சி செய்யும்போதும், இரவில் தூங்கும்போதும்தான் அதிகம் சுரக்கும். அதனால் இரவு உறக்கம் என்பது எடை பராமரிப்பில் மிகவும்
அவசியம்...

எடை கூடுவதற்கும் குறைவதற்கும் என்ன காரணம் என்று நாளமில்லா சுரப்பிகள் சிறப்பு மருத்துவரான ராம்குமாரிடம் கேட்டோம்.
‘‘தேவைக்கும் அதிகமாக சாப்பிடுவது, நொறுக்குத் தீனிகள், நேரம் தவறி சாப்பிடுவது, உடற்பயிற்சியே இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் எடை கூடும். இந்த காரணங்களை நாமே தவிர்த்துவிட முடியும்.

மருத்துவரீதியாக குறை தைராய்டு, தூக்கமின்மை, அதிகமாக சுரக்கும் இன்சுலின், ஸ்டீராய்டு ஹார்மோன், மூளையில் இருக்கும் பிட்யூட்டரியில் ஏற்படும் சமன்குலைவு, மருந்துகள் எடுத்துக்கொள்வது, பாலிசிஸ்டிக் ஓவரிஸ் சிண்ட்ரோம், மாதவிலக்கு சிக்கல் போன்ற காரணங்களால் எடை கூடும். கட்டுப்பாடற்ற நீரிழிவு, அதீத தைராய்டு, மன அழுத்தம், உணவைப் பார்த்தாலே அலர்ஜியாகும் அனோரெக்ஸியா நெர்வோஸா போன்ற மன நோய்களால் எடை குறையலாம். இதுபோன்ற உடல்ரீதியான பிரச்னைகள் இருப்பவர்கள் என்னதான் உணவைக் குறைத்தாலும், என்னதான் உடற்பயிற்சிகளைச் செய்தாலும் எந்த பயனும் கிடைக்காது. அடிப்படைப் பிரச்னையைச் சரி செய்தால்தான் பலன் கிடைக்கும்’’ என்கிறார் டாக்டர் ராம்குமார்.

நடிகர், நடிகைகள் திடீரென்று எடை குறைந்து, எடை அதிகமாவதால் எதிர்காலத்தில் அவர்களுக்கு பாதிப்பு எதுவும் வருமா?‘‘உடல் ஒரு குறிப்பிட்ட எடையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும். திடீரென்று எடை குறையும்போது அதன் வேலைகள் குறையும். மீண்டும் எடை கூடும்போது அதிக வேலைப்பளு ஏற்படும். இதனால் உடல் குழப்பமாகும். குறிப்பாக, நடிகர்கள் அடிக்கடி இதுபோல் எடையைக் குறைத்து, எடையை ஏற்றுவதால் உடலின் உள் உறுப்புகள் பெரிதும் பாதிக்கப்படும்.

அதிலும் எடையைக் குறைக்க முயற்சிக்கும்போது முதலில் நீர்ச்சத்து குறையும்.  வெளியேறும் புரதம் சிறுநீரகத்தைப் பாதிக்கும். உடலின்  தசைகள் உடையும், மன உளைச்சல், தூக்கமின்மை போன்றவை அதிகமாகும். உடலின்  மெட்டபாலிசம் மாறும். நடிகர்களுக்கு இதன் பாதிப்பு இளவயதில்  தெரியாவிட்டாலும், வயதாகும்போதும் உடலின் செயல்திறன் குறையும்போதும்  தெரிய  ஆரம்பிக்கும். ஏற்கெனவே, உறுப்புகள் பாதிக்கப்பட்டிருந்தால் அது  தீவிரமாகும்.
சிறுநீரகப் பாதிப்பைத் தொடர்ந்து இதயத்தின் செயல்திறன், கல்லீரல், கணையம், வயிறு போன்ற உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகளின் தொடர்ச்சியாக மூளையே கடைசியில் பாதிக்கப்படலாம்.

ஒரு டாக்டர் என்ற முறையில், விக்ரம் போல எடையைக் கூட்டிக் குறைப்பதெல்லாம் மிகப்பெரிய ரிஸ்க் என்றுதான் சொல்வேன். இது பெரிய தவறு. சாதாரணமாக 6 கிலோ, 7 கிலோ வரை எடை கூடி குறைவதுகூட பாதிப்பில்லை. ஆனால், 60 கிலோவிலிருந்து 80 கிலோவாக அதிகரிப்பது, உடல் எடையில் 20 சதவிகிதத்துக்கும் மேல் குறைப்பது என்று நம் இஷ்டத்துக்கு உடலை மாற்றினால் உடல் எந்த அளவுக்கு அடிபடும் என்பதை யோசித்துப் பார்த்தாலே தெரியும்.

ஜங்க் ஃபுட் உணவுகளைத் தவிர்த்து, சரிவிகிதமாக உணவுகளை எடுத்துக் கொண்டு, போதுமான உடற்பயிற்சிகள் செய்தாலே போதும். குறைந்தபட்சம் அரை மணி நேர நடைப்பயிற்சியே போதும். இதைத் தவிர்த்து வேறு எந்த குறுக்கு வழியிலும் எடை முயற்சிகளைச் செய்யக் கூடாது!’’

எடையைக் குறைக்க முயற்சிக்கும்போது முதலில் நீர்ச்சத்து குறையும். வெளியேறும் புரதம் சிறுநீரகத்தைப் பாதிக்கும். உடலின்  தசைகள் உடையும், மன உளைச்சல், தூக்கமின்மை போன்றவை அதிகமாகும். சிறுநீரகங் களைத் தொடர்ந்து இதயத்தின் செயல்திறன், கல்லீரல், கணையம், வயிறு போன்ற உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகளின் தொடர்ச்சியாக மூளையே கடைசியில் பாதிக்கப்படலாம்
கண்ணே... மணியே...

கோபத்திலும் தூக்கமின்மையாலும் தூசு விழுந்தாலும் கண்கள் சிவப்பது இயற்கை. இப்படி எந்தக் காரணமே இல்லாமல் சிலருக்கு அடிக்கடி கண்கள் சிவந்து போவதுண்டு. ``கண் சிவக்க வைரஸ் தொற்று, அதிக சூரிய ஒளி என வேறு காரணங்களும் உண்டு’’ என்கிற கண் மருத்துவர் திரிவேணி, அது பற்றி விளக்குகிறார்.

``அடிக்கடி கண் சிவப்பதற்கு  அலர்ஜி, தூசு, நாய், பூனை முதலான வளர்ப்பு பிராணிகளின் ரோமம், பூக்களில் உள்ள மகரந்தத் தூள், ரசாயனம் போன்றவை முக்கிய காரணங்கள்.  இவை கண்களை சிவக்கச் செய்வதுடன்,  கண்களில் அரிப்பையும் உண்டாக்கும். அரிப்பு அதிகரிக்கும்போது, கண்களில் நீர் வடிய ஆரம்பிக்கும்.

கண்நோய் (Conjunctivitis) காரணமாகவும் கண்கள் அடிக்கடி சிவக்கலாம்.  வைரஸ் தொற்று காரணமாக, கண்கள் சிவந்து போகும். அதோடு, இரண்டு கண்களிலும் வலி, உறுத்தல் ஏற்பட்டு, நீர் வர ஆரம்பிக்கும். இந்த நீர் மற்றவர் கண்களில் படும்போது, கண் நோய் பரவும். கருவிழி அல்லது இமைகளில் தூசு மற்றும் பிசிறு (Foreign Body) ஒட்டிக்கொள்வதால் கண்கள் சிவப்படையும். அந்த நேரங்களில்  கண்கள் இமைக்கும்போது உறுத்தல் இருக்கும்.

கண்ணில் ஏதேனும் தூசு விழுந்தால், கண்களை கசக்கக்கூடாது. அப்படி செய்தால், பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு அதிகம். இவர்கள், உடனடியாக குளிர்ந்த நீரால் கண்களை நன்கு கழுவ வேண்டும். பின்னர், கண் மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். கண்களைக் கசக்கினாலோ, பெரிய அளவில் பிசிறு அல்லது பூச்சி விழுவதால்,  கண்ணின் வெண்ணிறப் பகுதியில் காயம் ஏற்பட்டு,  ரத்தம் கட்டலாம்.

இதற்கு சுய மருத்துவம் செய்வதை நிறுத்தி, உடனடியாக மருத்துவரை அணுகி  பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். டாக்டர்கள், கண்ணில் லென்ஸ், விழித்திரை ஆகியவற்றை பரிசோதனை செய்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவார். பாதிப்புக்குச்  சிகிச்சை எடுத்தால், ஆரம்ப நிலையிலேயே அதனை  தடுக்க முடியும்.

அதிக நேரம் சூரிய ஒளியில் இருந்தால் விழிவெண்படலத்தில் சதை வளர்ந்து கருவிழிக்குப் பரவுவதும் அடிக்கடி கண் சிவந்து போவதற்கு காரணமாகலாம்.  கருவிழியில் புண் (Corneal Ulcer) ஏற்படுவதும் கண்கள் சிவக்க காரணமாக உள்ளது.   கண் அழுத்த நோயால் (Glaucoma) கண்கள் அடிக்கடி சிவக்கும். இந்த நோய் Open Angle, Closed Angle என இரு வகைப்படும். Open Angleல் கண் நோய்க்கான எந்த  அறிகுறியும் இருக்காது. உடலில் ஏற்படுகிற கட்டி, வீக்கம், உடல் தாங்குதிறன் நோய் (Auto Immune Disease) போன்றவற்றாலும் வயதானவர்களுக்கு அடிக்கடி கண் சிவக்கும்.

உதாரணத்துக்கு, மூட்டுவலியால் (Rheumatoid Arthritis) அவதிப்படும் வயோதிகர்களுக்கு அடிக்கடி கண்கள் சிவக்கும். இதனால், கருவிழியில் புண் ஏற்படலாம். பார்வை மங்கும். கண்களில் வலி இருக்கும். அப்போது கண் மருத்துவரிடம் சென்று முழு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கண் சிவந்து போவதற்கான சிகிச்சையை ஆரம்பிக்கும்போதே வேறு நோய்களுக்கான அறிகுறிகள் உள்ளதா என்பதை அறிய ரத்த பரிசோதனை செய்ய வேண்டும்.

நம்முடைய கண்கள் ஒரு நிமிடத்தில் 14 முதல் 18 வரை  இமைக்கும். கம்ப்யூட்டர் முன் அமர்ந்து அதிக நேரம் வேலை செய்பவர்கள் கண்களை இமைக்காமல்  வேலை செய்வார்கள். அதனால், இவர்களுடைய கண்கள் விரைவில் உலர்ந்து போகும். இதன் காரணமாகவும் கண்கள் சிவக்கும். கருவிழிக்கு ரத்த ஓட்டம் கிடையாது. உடலில் ஆக்சிஜன் குறைந்தால்  மணல் விழுந்த மாதிரி கண்கள் உறுத்த ஆரம்பிப்பதாலும், கண்கள் சிவக்கலாம். எந்தக் காரணமாக இருந்தாலும், சுய மருத்துவம் வேண்டாம்.’’

மூட்டு வலியால் அவதிப்படும் வயோதிகர்களுக்கு அடிக்கடி கண்கள் சிவக்கும்.  இதனால், கருவிழியில் புண் ஏற்படலாம். பார்வை மங்கும். கண்களில் வலி இருக்கும். அப்போது கண் மருத்துவரிடம் சென்று முழு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்...

-







#‎தமிழக‬ மக்களின் வாக்குப் பிச்சைக்காக ‪#‎இனவாதத்தை‬ விதைத்து ‪#‎அரசியல்‬ பிளைப்பு நடத்தும் ‪#‎ஆசாமிகளே‬...
யார் இந்த ‪#‎சங்கக்கார‬..??
இவன் ஒரு ‪#‎தமிழனா‬...??
இவன் ஒரு ‪#‎நடிகனா‬....??
இவன் ஒரு ‪#‎அரசியல்வாதியா‬..??
இவன் ஒரு ‪#‎இந்தியனா‬..??
இவன் தமிழக மக்களிடத்தில் ஏதும் ‪#‎தேவையுடையவனா‬..??
இவன் யாருமில்லை..
மதங்களைக் கடந்து மனிதநேயத்தை நேசிக்கத் தெரிந்த ஓர் சாதாரண ‪#‎மனிதன்‬...
‪#‎சிங்கள‬ ஆட்சியின் கீழே ஓர் சிங்களவனாய் இருந்து கொண்டே ‪#‎தமிழ்‬ மக்களுக்காக குரல் கொடுத்ததோர் தந்தைக்குப் பிறந்த ‪#‎தங்க‬ ‪#‎மகன்‬ இவன்.
ஆயிரம் அரசியல் அழுத்தங்கள் வந்தபோதும் கூட, அநீதிக்குத் தலை வணங்காத ‪#‎தர்மத்‬ ‪#‎தாயின்‬ புதல்வன் இவன்.
விளையாட்டிலும் சரி, நிஜ வாழ்க்கையிலும் சரி ‪#‎கரை‬ ‪#‎படியாத‬ கரங்கழுக்கு சொந்தக்காரன் இவன்..
அபாரமான சாதனைகள் செய்தும் கூட அமைதின் இலக்கணமாய்த் திகழும் ‪#‎அற்புத‬ ‪#‎மனம்‬ படைத்தவன் இவன்..
தன் ‪#‎பிறந்த‬ நாளை திருவிழாவைப் போல் கொண்டாடிக் கழிக்கின்ற சக வீரர்களுக்கு மத்தியில் தானும் இரத்த தானம் செய்து, தன் ரசிகனையும் இரத்த தானம் செய்யச் சொன்ன ‪#‎உத்தமன்‬ இவன்..
‪#‎இலங்கை‬ வீரர்கள் ‪#‎சென்னை‬ மன்னை மிதித்தால் கல்லால் அடிப்போம் என்று சொன்ன பரந்த மனம் படைத்த மக்களின் முன்னால்,
இன்னார் செய்தாரை ஒருத்தல், அவர் நான நன்னயம் செய்துவிடல் என்ற வல்லுவன் வாக்கிற்கு ஏற்ப வாழ்ந்து காட்டியவன் இவன்..

பாடசாலை மாணவர் தொடக்கம், பாமர மக்கள் வரை ஆயிரம் ‪#‎உதவிகள்‬ செய்தும் தன்னை அடையாளம் காட்ட நினைக்காதவன் இவன்..
நான் சிங்கழவன்,
நான் தமிழன்,
நான் முஸ்லிம்,
நான் கிரிஸ்தவன்,
நான் மலாயன், என்று சொல்வதை விட நான் ஓர் இலங்கையன் என்று சொல்வதில் எப்போதுமே பெருமைப்படுகின்ற தேசப் பற்றாளன் இவன்..

அனைத்துக்கும் மேலே ‪#‎தாயகத்தை‬ நேசிக்கின்ற ஒவ்வெரு இலங்கையரின் இதயங்களில் வாழும் எங்கள் அன்பான ‪#‎அண்ணன்‬ இவன்..
நாங்கள் ‪#‎குமார்‬ #சங்கக்கார என்ற கிரிக்கட் வீரனின் ரசிகர்கள் மட்டுமல்ல..
குமார் சங்கக்கார என்ற நல்ல மனிதனின் ரசிகர்கள்....
News Media - புதிய தலைமுறை, தந்திTV, Kokki Kumaru
உண்மையை உலகம் அறிய முடிந்த அளவு ★Share★ செய்யுங்கள்.....
| Copyright © 2013 Online Srilankan