தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு, எதிர்வரும் 23ஆம் திகதியன்று, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மாநகர அபிவிருத்தி அமைச்சுப் பதவியே பொன்சேகாவுக்கு கிடைக்கவிருப்பதாக அறியமுடிகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பியான எம்.கே.டி.எஸ் குணவர்தன மரணமடைந்ததையடுத்து ஏற்பட்ட எம்.பி பதவி வெற்றிடத்துக்கே, சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நேற்றிரவு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சாய்ந்தமருது கிளையில் இடம்பெற்ற கருத்தரங்கை குழப்பி, மர்க்கஸிக்கும் கல்லெறிந்து, மர்க்கஸையும் உடைக்க திட்டமிட்டு, மர்க்கஸில் பயானை கேட்டுக் கொண்டிருந்த எமது சகோதரர்களுக்கு கல்லெறிந்தும் தாக்கிய அனைவருக்கு எதிராகவும் குறிப்பாக சட்டத்தை அமுல் படுத்தாமல் பாரபட்சம் காட்டிய கல்முனை போலிஸ் அதிகாரிககளுக்கும் தக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
Related Pots
இன்ஷா அல்லாஹ் இன்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சாய்ந்தமருது கிளையில் இரத்ததான முகாம் நடைபெறும்.
அனைத்து சகோதர, சகோதரிகளும் தங்களது குருதிக்கொடைகளை அல்லாஹுவுக்காக வழங்கி அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்.
அல்குர்ஆன் 5:32
Related Pots
எதிர்வரும் வாரத்தில் தனது மூத்த மகன் நாமல் ராஜபக்ஷ, கைது செய்யப்படுவார் என்றும் அதற்கு அவரைத் தயாராக இருக்குமாறு, தான் கூறியதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஒருவர் கைது செய்யப்படுவதற்கு முன்னர், அவரைப் பற்றிய கேள்விகள் நாடாளுமன்றத்தில் அதிகமாக கேட்கப்படும் என்றும் கடந்த வாரங்களில் நாமல் ராஜபக்ஷ குறித்தான கேள்விகள் அதிகமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனாலேயே சிறைக்குச் செல்வதற்கு தயாராக இருக்குமாறு, தனது மகனுக்கு தான் கூறியதாக அவர் தெரிவித்தார்.
Related Pots
Related Pots
நண்பர்களே நீங்களும் COMPUTER கற்க வேண்டுமா இதோ உங்களுக்காக நீங்கள் இப்போது வீட்டில் இருந்தபடியே COMPUTER கற்கலாம்
வெறும் 200/ ரூபாய் மட்டுமே
Tamil Tutorial DVD list
>IT Students
>House wife
>Office workers
>Foreign employees
>Teachers
$. Ms Word
$. Ms Excel
$. Ms power point
$. Ms Access
$. Adobe Photoshop
$. Adobe Illustrator
$. Adobe InDesign
$. Dreamweaver
$. Macromedia Flash
$. Corel DRAW X3
$. Corel DRAW X5
$. HTML
$. HTML 5
$. Python
$. PHP
$. Tally
$. After Effects Cs6
$. Auto desk 3D Max
$. Maya
$. Cinema 4D
$. Auto Desk AutoCAD
$. JAVA
$. JAVA Scrip
t
$. VB Script
$. VB Script
$. C Language
$. C++
$. C#.Net
$. Internet & email
$. Hardware engineering
$. Visual basis 6.0
$. Blogger
$. Jquery
$. Google AdSense
$. WordPress
$. Cooking: veg
$. Cooking: non Veg
$. Cooking: Sweets
$. iPhone Repairing
and more.....
Related Pots
இரண்டு கருந்துளைகள் ஒன்றையொன்று சுற்றி பிணைந்தபோது அண்டவெளியில் ஏற்பட்ட ஈர்ப்பு கவர்ச்சி அலைகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது வானியல் அறிவியலில் அதிசயிக்கத்தக்க அடுத்த கட்டமாக வர்ணிக்கப்படுகிறது.
விண்வெளியில் சூரியனைப் போன்ற மிகப் பெரிய நட்சத்திரங்கள் உள்ளன. அவை தங்களது வாழ்நாளின் இறுதியில் கருந்துளைகளாக (black-hole) மாறும். அவை ஒன்றையொன்று சுற்றும்போது அண்டவெளியில் (space-time) அதிர்வுகள் ஏற்பட்டு அவை ஈர்ப்பு கவர்ச்சி அலைகளாக வெளியாகும் என்று 100 ஆண்டுகளுக்கு முன்பே இயற்பியல் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கணித்திருந்தார்.
அந்த கணிப்பு சரியானது என்பதை விஞ்ஞானிகள் இப்போது உறுதி செய்துள்ளனர். இதுகுறித்து லிகோ (LIGO – Advanced Laser Interferometer Gravitational-Wave Observatory) திட்ட செயல் இயக்குநர் டேவிட் ரிட்ஸ், வாஷிங்டனில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
விண்வெளியில் ஏதோ ஒரு இடத்தில் சூரியனை போன்று 29 மற்றும் 36 மடங்குகள் பெரிய இரண்டு ராட்சத கருந்துளைகள் அல்லது விண்மீன்கள் ஒன்றை ஒன்று சுற்றிக் கொண்டே மோதிப் பிணைந்துள்ளன. அந்த நிகழ்வால் ஏற்பட்ட ஈர்ப்பு கவர்ச்சி அலைகளை இப்போது கண்டுபிடித்துள்ளோம்.
அந்த இரண்டும் பிணைந்து சூரியனைவிட 62 மடங்குகள் பெரிதாக மாறிவிட்டது. இந்த நிகழ்வால் உருவான ஈர்ப்பு கவர்ச்சி அலைகள் பிரபஞ்சத்தின் கீச்சுக்குரல் போல வெளிப்பட்டிருக்கின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Pots
ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்தின் செயலாளர் அப்துர் ராசிக் புத்த மதத்தை இழிவு படுத்தும் விதமாக பேசியதாக கூறி பொது பல சேனாவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
குறித்த வழக்கில் ஆரம்பமாக ஒரு சுவாரஷ்யம் நடைபெற்றது.
அதாவது தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் துணை செயலாளர்களில் ஒருவரான மவ்லவி ரஸ்மின் இலங்கையை சேர்ந்தவரில்லை என்றும் அவர் வெளிநாட்டவராக இருக்கலாம் என்றும் தமது தரப்பு சந்தேகிப்பதாகவும் அதனை உறுதி செய்யுமாறும் பொது பல சேனாவின் சார்பில் நீதி மன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி கோரிக்கை வைத்தார்.
அவருடைய கோரிக்கைக்கிணங்க தௌஹீத் ஜமாஅத்தின் துணை செயலாளர் ரஸ்மினின் ஆளடையாள அட்டை உடனே நீதிபதிக்கு காண்பிக்கப்பட்டது. அதனை அருகிலிருந்த பொலிஸ் அதிகாரியிடம் கையளித்த நீதிபதி இது உண்மையானது தானா? என்று வினவினார்.
குறித்த பொலிஸ் அதிகாரி அதனை பரிசோதித்து விட்டு இது உண்மை தான் என்று சொன்னவுடன் இப்போது உங்கள் சந்தேகம் தீர்ந்து விட்டது தானே? என்று நீதிபதி பொது பல சேனா தரப்பு சட்டத்தரணிக்கு கூறினார்.
அதன் பின்னர் மத நிந்தனை பற்றிய வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டது.
Related Pots
விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ள ஞானசார தேரரின் வழக்கை விசாரித்த நீதிபதி ரங்க திசானாயக்க
ஞானசார தேரருக்கு கடும் தொனியில் சில அறிவுருத்தல்களை வழங்கியுள்ளார்.
ஞானசார தேரர் சார்பாக ஆஜாரான வழக்கரிஞரிடம் சந்தேக நபர் (ஞானசாரர்) பிணை கோருகிறாரா என நீதிபதி கேட்டுள்ளார்.
ஆம் என ஞானாசார தேரரின் வழக்கறிஞர் பதில் வழங்க
எங்களை கைது செய்து உள்ளே போடுங்கள் என கூச்சல் போட்டவர்களுக்கு இப்போது
எதற்கு பிணை அவர் கேட்பதற்காக என்னால் பிணை வழங்க முடியாது சட்டத்தில்
இடமிருந்தால் பிணை வழங்குவேன்.
சந்தேகனபரின் முன்னைய செயற்பாடுகளை பார்த்தால் ஏதோ ஒன்றை அடைவதற்காக திட்டமிட்டு நீதிமன்றை அவமதித்தது போல தெரிகிறது.
யாரினதும் தனிப்பட்ட விடயங்களை அடைந்துகொள்ள நீதிமன்றை பயன்படுத்த இடமளிக்க
முடியாது , அப்படி எவரும் செயற்பட முற்பட்டால் கடுமயான தண்டனைகளை சந்திக்க
நேரிடும் என நேற்று ஞானசார தேரரின் வழக்கை விசாரித்த நீதிபதி
திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வழக்கு விடயம் தொடர்பாகவும் நீதிமன்ற செயற்பாடுகள் தொடர்பாக ஞானசார
தேரருக்கு ஊடகங்களுக்கு கருத்து கூற நீதிபதி கட்டுப்பாடு
விதித்திருந்தார்.
Related Pots
ஹோமாகம
நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்ப்பட்ட ஞானசார தேரரின் நீதிமன்ற
அவமதிப்பு வழக்கில் இன்று ஞானசார தேரர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு
சற்றுமுன்னர் பிணை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஞானசார தேரர் 14 நாட்கள்
விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் இரண்டு லட்சம் பெறுமதியான இரண்டு சரீர
பிணையில் அவரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
பிணையில் வந்த தேரர் மீண்டும் உள்ளே !
முன்னதாக நீதிமன்ற அவமதிப்பு
வழக்கில் இரண்டு லட்சம் இரு சரீர பிணைகளில் விடுவிக்கப்பட்ட
தேரருக்கு ஊடகவியளாலர் எக்னெலிகொடவின் மனைவியை அச்சுருத்திய வழக்கில் நாளை
வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதீ ரங்க விஜேசிங்க உத்தரவிட்டுள்ளார்.
Related Pots
சிறுநீரங்கள் தான் உடலில் உள்ள கழிவுப் பொருட்களை சிறுநீரின் வழியே பிரித்து வெளியேற்றுவது. இப்படி கழிவுகளை பிரித்து வெளியேற்றுவதால், அந்த சிறுநீரகங்களின் மூலை முடுக்குகளில் நச்சுக்கள் தங்கி, அதுவே பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய சிறுநீரக நோயின் 12 அறிகுறிகள்!!! இதைத் தடுக்க சிறுநீரகங்களைச் சுத்தமாக வைத்துக் கொள்ளும் உணவை உட்கொள்ள வேண்டியது அவசியம். மேலும் சிறுநீரகங்கள் பாழாவதற்கு நம் அன்றாட பழக்கவழக்கங்களும் ஓர் காரணம்.
அந்த பழக்கவழக்கங்களைத் தவிர்த்தால் சிறுநீரகங்கள் சேதமடைவதைத் தடுக்கலாம். மக்களே! இந்த உணவுகளை சாப்பிட்டா சிறுநீரகத்தில் கல் உருவாகும்… கவனமா இருங்க… சரி, இப்போது உடலின் மிகவும் முக்கிய உறுப்பான சிறுநீரகங்களைச் சேதப்படுத்தும் நம் பழக்கவழக்கங்கள் என்னவென்று படித்து, அவற்றைத் தவிர்த்து உங்கள் சிறுநீரகங்களை பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.
சிறுநீரை அடக்குதல்
Related Pots
ஞானசார தேரரின் கைது தொடர்பாக பெரும்பான்மை சிங்கள மக்களிடத்தில் எதுவித தாக்கங்களும் ஏற்படாமை பொதுபல சேனா அமைப்புக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அவ்வமைப்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் மூலம் எமக்கு அறியக்கிடைத்தது.
மிகுந்த எதிர்பார்ப்புடன் தேர்தலை எதிர்கொண்ட பொதுபல சேனா மூக்குடைத்து கொண்டது. அதனை தொடர்ந்து சிறிது துவண்டு போன பொதுபல சேனா ஞானசார தேரரின் கைது சிங்கள மக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்திருந்தது.
இந்த நிலையில் பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஞானசார தேரரின் கைது நடவடிக்கையை பெரும் பெருட்டாக கருதவில்லை என்பதால் அவ்வமைப்பு எதிர்கால நகர்வு தொடர்பாக அதிருப்தியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஞானசார தேரருக்கு ஆதரவாக கையெழுத்து வேட்டை திரட்டும் பணியும் அவ்வமைப்புக்கு எதிர்பார்த்த அளவு வெற்றியளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
வரும் ஒன்பதாம் திகதி விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஞானசார தேரரின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஞானசார தேரர் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் அவருக்கு எதிராக சட்டம் மிக கடுமையாக தனது கடமையை செய்யும் என பொதுபல பல சேனா அமைப்பு அச்சத்தில் உள்ளதாக அவ்வமைப்பின் முக்கியஸ்தர்கள் மூலம் அறியமுடிகிறது. (J)
Related Pots
தூதுவளை, வல்லாரை, அருகம்புல், கடுக்காய், வில்வம், நாவல் என பல
இயற்கை பொடிகள் உடலுக்கு பல நன்மைகளை விளைவிக்கின்றன. நீரிழிவு, ஆண்மை
குறைபாடு, இரத்த கொதிப்பு, சளி, காய்ச்சல் என சிறிய பிரச்சனையில் இருந்து,
பெரிய பெரிய பிரச்சனைகள் வரை அனைத்திற்கும் நாம் ஆங்கில மருத்துவத்தை தேடி
ஓடுகிறோம்.
இதில் பலவன நமக்கு பக்கவிளைவுகள் தருகின்றன என தெரிந்தும் நாம் அதையே தான்
உட்கொண்டு வருகிறோம். இனி, எந்த பக்க விளைவுகளும் அற்ற, நாமே வீட்டில்
எளிதாய் தயாரிக்க கூடிய இயற்கை பொடிகளின் பயன்கள் குறித்து பார்க்கலாம்....
Related Pots
இறைவனின் மாபெரும் கிருபையினால் நெல்சன் மண்டேலாவின் பேரன் மண்ட்லா மண்டேலா அவர்கள் சில தினங்களுக்கு முன் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார்.
ஆப்பிரிக்காவில் கறுப்பின மக்கள் மீது அடக்குமுறைகள் ஏவி விடப்பட்ட
காலக்கட்டத்தில் மண்ட்லா மண்டேலாவின் தாத்தா நெல்சன் மண்டேலா நிறவெறிக்கு
எதிரான பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டவராவார். தென்னாப்பிரிக்காவின்
மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார்.
இன அழிவு நீங்க இஸ்லாமே சரியான தீர்வு என்பதை உணர்ந்த மண்ட்லா மண்டேலா அவர்கள் இஸ்லாத்தை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....
இன அழிவு நீங்க இஸ்லாமே சரியான தீர்வு என்பதை உணர்ந்த மண்ட்லா மண்டேலா அவர்கள் இஸ்லாத்தை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....
Related Pots
- A. நுழைவுக் கட்டணம் இல்லை
- B. vipக்கு என்று தனி வழி இல்லை
- C. vipக்களுக்கு தனி இருக்கை
இல்லை - D. காசு வசூலிக்க உண்டியல்
இல்லை - E. vipக்காக வழியை ப்ளாக் செய்ய
மாட்டார்கள் - F. எல்லோருக்கும் ஒரே வழி தான்
- G. முன்னால் வருகிறவர் முதலில்
அமர்வார் தாமதமாக அதிபரே
வாந்தலும் ரோட்டில் தான்
அமரவேண்டும் - H. சாலைப் பணியாளரோடு
சாதணையாளரும் அமருவார் - J. ஏழைப் பணகாரன் பாகுபாடு
இல்லை - K. உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற
பாகுபாடு இல்லை - L. வெள்ளையர் கருப்பர் என்ற
நிறப் பாகுபாடு இல்லை - M. மொழி பாகுபாடு இல்லை!
- இதுதான் கண்ணியமிக்க "காபா"
- இதுதான் கண்ணியமிக்க
- "இஸ்லாம்
Related Pots
ஜப்பானில் வடக்கு பகுதியில் உள்ள கொசாய்டோ தீவில் பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. அந்த ரயில் கமி–கிரதாகி பகுதியில் செல்கிறது.
ஆனால் இப்பகுதியில் ரெயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே சென்றது தற்போது அந்த ரயிலில் ஒரே ஒரு பயணி மட்டுமே பயணம் செய்கிறார்.
அவர் ஒரு பாடசாலை மாணவி, அவர் உயர்நிலைப் பாடசாலையில் படிக்கிறார். அவரை ஏற்றிச் செல்வதற்கும், இறக்கி விடுவதற்கு மட்டும் தினமும் 2 முறை இந்த ரயில் இங்கு நிறுத்தப்படுகிறது.
அந்த மாணவி வருகிற மார்ச் மாதம் பாடசாலை படிப்பை முடித்தவுடன் அப்பகுதியில் அந்த ரயில் போக்குவரத்து நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதை கருத்தில் கொண்டே பயணிகள் ஏறாவிட்டாலும் மாணவியின் படிப்பை கருத்தில் கொண்டு இந்த ரயிலை ஜப்பான் அரசு இயக்குகிறது.
Related Pots
பாரிஸில் உள்ள ஃப்ளவர் டவர் (Flower Tower) எனும் அடுக்குமாடிக் கட்டிடமானது பார்ப்பதற்கு ஒரு சிறு காடு போல தோற்றமளிக்கிறது.
10 மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டிடத்தின் ஒவ்வொரு தளத்திலும் 380 மூங்கில் மரத் தொட்டிகள் வைக்கப்பட்டு அவை வளர்ந்து காணப்படுவதே காடு போல தோற்றமளிக்கக் காரணம்.
மழை நீர் சேமிக்கப்பட்டு, செடிகளுக்குத் தானாகத் தண்ணீர் செல்லும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
வெயில் காலத்தில் தண்ணீர் இல்லாவிட்டாலும்கூட மூங்கில் மரங்கள் பசுமை மாறாமல் காட்சியளிக்கின்றன.
Related Pots
2015 ஆம் ஆண்டு நிறைவடையவுள்ள நிலையில் இந்த ஆண்டு பல்வேறு விடயங்களை நம் மனங்களில் விதைத்து விட்டுச் செல்கின்றது. அந்த வகையில் 2015 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் உலகில் பலராலும் பேசப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு :
அவுஸ்திரேலிய நீர்ச் சறுக்கு வீரர் சுறா ஒன்றினால் தாக்கப்பட்டார்
சிரிய அகதிகள் கிறீஸ் வருகை
அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ரொனி அப்போர்ட்
புளூட்டோ தொடர்பான நாசாவின் புகைப்படம்
நேபாள பூகம்பம் – 22 மணித்தியாலங்களின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை
கரையொதுங்கிய அயிலன்
ரக்பி உலகக்கிண்ண இறுதிப் போட்டி
பிரான்ஸ் பயங்கரவாதத் தாக்குதல்
வீதியில் சிறுவனுடன் விளையாடும் பொலிஸ் உத்தியோகத்தர்
Related Pots
தாய்வான் உயிரியல் பூங்காவில் சிங்கங்களிடம் சிக்கிய மனநலம் பாதிக்கப்பட்ட நபர் மரண வாசலிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
தாய்வானின் தைபேய் உயிரியல் பூங்காவில் சிங்கங்கள் அடைக்கப்பட்டிருக்கும் பகுதிக்குள் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் திடீரென குதித்துவிட்டார்.
அவரை வேட்டையாடுவதற்காக சிங்கங்கள் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருந்தன.
தன்னைச் சுற்றியுள்ள விபரீதத்தை உணராதவராக அந்நபர் நடந்துகொள்கிறார்.
மரணத்தின் வாசலில் நின்ற அவரை சிங்கங்களிடம் இருந்து மீட்பதற்காக சிங்கங்கள் மீது தண்ணீரைப் பாய்ச்சி அடித்தனர் பூங்கா ஊழியர்கள்.
இதனால் சிங்கங்கள் விலகிக்கொள்ள மனநிலை பாதிக்கப்பட்டவர் உயிரோடு மீட்கப்பட்டார்.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் பதிவேற்றப்பட்டுள்ள இந்த வீடியோக் காட்சி சமூக வலைத்தளங்களில் தற்போது பெரும் வைரலாகப் பரவி வருகிறது.
Related Pots
ப்ளோரிடாவைச் சேர்ந்த ஜாமி கீட்டன் (Jamie Keeton) தலையில் கப், கேன், பாட்டில் போன்ற பொருட்கள் ஒட்டிக்கொள்கின்றன.
இதற்கென அவர் ஒட்டும் பசைகள் எவற்றையும் பயன்படுத்துவதில்லை. இவரது தோலில் உள்ள துளைகள் அவற்றை உறிஞ்சிக் கொள்வதாகக் கூறப்பட்டுள்ளது.
சிறு வயது முதலே அவருக்கு இந்த சக்தி உள்ளது. பைன் மரங்களில் சிறு வயதில் ஏறி விளையாடும் பழக்கம் இவருக்கு இருந்ததால் மரத்தின் சாறு காரணமாக பொருட்கள் ஒட்டிக்கொள்வதாக அனைவரும் நினைத்துள்ளனர்.
20 வயதில் தான் தனது தோல், பொருட்களை ஈர்த்துக்கொள்வதை அறிந்திருக்கிறார் ஜாமி கீட்டன்.
நல்ல வெய்யில் காலம். முதல் முறை மொட்டை அடித்திருந்தேன். குளிர்ச்சியாக இருக்கட்டும் என்று சோடாவை வாங்கித் தலையில் வைத்தேன். நண்பர்கள் பந்தை எறிந்து, சோடாவைத் தள்ளிவிட்டனர். சோடா பாட்டில் சாய்ந்ததே தவிர கீழே விழவில்லை. பசை போட்டு ஒட்டியது போல ஒட்டிக்கொண்டது. சோடா மட்டும் கீழே கொட்டி விட்டது. எல்லோரும் இதைக் கண்டு சிரித்தனர். பல பொருட்களை வைத்துப் பார்த்தேன். எல்லாமே ஒட்டிக்கொண்டன. ஒக்டோபஸ் உணர்கொம்புகள் போல என் தலை அனைத்தையும் இழுத்துக்கொண்டது. மருத்துவரிடம் சென்றேன். மருத்துவருக்கும் காரணம் தெரியவில்லை. பின்னர் சில மருத்துவர்கள் ஏதோ குறைபாடு என்றார்கள். அமெரிக்காவிலேயே இந்தக் குறைபாடு உள்ள ஒரே மனிதன் நான்தான். இந்தியாவிலும் தென் அமெரிக்காவிலும் இருவர் இருக்கிறார்கள்என தெரிவித்துள்ளார் ஜாமி.
இன்று இவர் அமெரிக்காவில் ஒரு மிகப்பெரும் பிரபலம். வாரத்திற்கு ஒன்றரை இலட்சம் முதல் ஐந்தரை இலட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார்.
சிலர் அவர்களின் பொருட்களை ஜாமியின் தலையில் வைத்து விளம்பரம் செய்துகொள்கிறார்கள். சிலர் அவர் அணியும் ஆடையில் விளம்பரம் செய்கிறார்கள். சமீபத்தில் கின்னஸ் சாதனையையும் நிகழ்த்திவிட்டார் ஜாமி.
Related Pots
(ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்புக்கு கடந்த டிசம்பர் மாதம் வரை, உலகம் முழுவதும் 34 தீவிரவாத அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் அளித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த டிசம்பர் மாதம் வரை ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு உலகம் முழுவதிலுமுள்ள 34 தீவிரவாத அமைப்புகள் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளன.
மேற்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா, மேற்காசிய நாடுகள்,
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வெறும் 18 மாதங்களில் ஐ.எஸ்.
பயங்கரவாதிகளின் செல்வாக்கு அதிகரித்துள்ளது அவர்களது வளர்ச்சி வேகத்தைக்
காட்டுகிறது.
பாகிஸ்தான், பிலிப்பின்ஸ், உஸ்பெகிஸ்தான், லிபியா,
நைஜீரியா ஆகிய நாடுகளில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் மற்றும் அவர்களது
ஆதரவாளர்களின் தாக்குதலை எதிர்கொள்ள ஐ.நா. உறுப்பு நாடுகள் தயார் நிலையில்
இருக்க வேண்டும்.
உலகின் மிக அதிக நிதி வசதி கொண்ட பயங்கரவாத அமைப்பு
, அந்த அமைப்பால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தலை
அதிகரிக்கச் செய்துள்ளது.
கச்சா எண்ணெய் விற்பனை மூலம் அந்த அமைப்பு கடந்த ஆண்டு
40 கோடி டாலர் (சுமார் ரூ.2,700) முதல் 50 கோடி டாலர் (சுமார் ரூ.3,400
கோடி) வரை நிதி திரட்டியுள்ளது என்று பான் கி-மூன் தனது அறிக்கையில்
குறிப்பிட்டுள்ளார்.
Related Pots
வாஷிங்டன், பிப். 7- நிலாவில் கால் பதித்து நடந்த 6-வது விண்வெளி வீரர் என்ற சிறப்பை பெற்றவர், எட்கர் மிட்செல் (வயது 86). அமெ ரிக்கரான இவர், 1971-ம் ஆண்டு, இதே பிப்ரவரி மாதம் 5-ந் தேதி அப்பல்லோ 14 விண்கலம் மூலம் ஆலன் ஷெப்பேர்டு என்ற விண் வெளி வீரருடன் சென்று நிலவில் கால் பதித்தார். அத்துடன் நிலவில் மிக நீண்ட தூரம் நடந்து சாதனை படைத்தவர்கள் என்ற பெயரும் இவர்க ளுக்கு உண்டு.
94 பவுண்ட் எடை கொண்ட சந்திர மண்டல பாறைகள், மண் மாதிரி களை சேகரித்து பூமிக்கு கொண்டு வந்து, அவற்றை ஆராய்ச்சிக்காக அமெரிக் காவில் 184 விஞ்ஞானிகள் குழுக்களுக்கும், 14 பிற நாடுகளுக்கும் வழங்கியதில் எட்கர் மிட்செல்லுக்கு முக்கிய பங்கு உண்டு. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு நாசா விலும், அமெரிக்க கடற்படை யிலும் பணியாற்றி ஓய்வு பெற்றவர் இவர்.
நிலவில் கால் பதித்து நடந்ததின் 45-வது ஆண்டு விழாவை கடந்த 5-ந் தேதி கொண்டாடவிருந்த நிலையில், 4-ந் தேதி மாலை புளோரிடாவில் மரணம் அடைந்தார்.
Related Pots
இந்த ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் இன்று பெங்களூரில் நடைபெற்றது.
இதில் அதிகபட்சமாக அவுஸ்திரேலியாவின் ஆல்-ரவுண்டர் ஷான் வாட்சனை இந்திய ரூபா. 9.50 கோடிக்கு ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஏலத்தில் எடுத்தது.
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் கிரிஸ்டோபர் மோரீஸை டெல்லி டெயார்டெவில்ஸ் அணி இந்திய ரூபா. 7 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
இந்திய வீரர்களைப் பொருத்தவரையில், யுவராஜ் சிங் இந்திய ரூபா. 7 கோடிக்கு ஏலம் போனார். அவரை சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணி ஏலத்தில் எடுத்தது.
அதிக விலைக்கு ஏலம் போன ஏனைய வீரர்கள் விபரம்:
ரோஹித் சர்மா (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) – இந்திய ரூபா. 6.50 கோடி
ஆஷிஸ் நெஹ்ரா (சன் ரைசர்ஸ் ஹைதரபாத்) – இந்திய ரூபா. 5.50 கோடி
மிட்சல் மார்ஷ் (ரைசிங் புனே சூப்பர் ஸ்டார்ஸ்) – இந்திய ரூபா. 4.80 கோடி
சஞ்சு சாம்சன் (டெல்லி டெயார்டெவில்ஸ்) – இந்திய ரூபா. 4.20 கோடி
கார்லஸ் பாரத்வைட் (டெல்லி டெயார்டெவில்ஸ்) – இந்திய ரூபா. 4.20 கோடி
Related Pots
ஜிம்பாப்வேயில் வறட்சியினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பெரும் பிரதேசங்களில் பேரழிவுகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வேயில் பேரழிவுகால நிலையை அறிவிக்குமாறும், அவ்வாறு அறிவித்தால்தான் சர்வதேச கொடையாளி நாடுகள் உணவு உதவிக்காக நிதி வழங்க முன்வருவார்கள் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்திருந்தது.
இதனால், ஜிம்பாப்வேயில் பேரழிவுகால நிலையை அந்நாட்டு அதிபர் ரொபர்ட் முகாபே பிரகடனப்படுத்தியுள்ளார்.
வறட்சி காரணமாக ஜிம்பாப்வேயில் விவசாயம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் சுமார் 25 இலட்சம் மக்கள் உணவுத் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது.
மேய்ச்சல் தரைகள் இல்லாமல் ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
அங்குள்ள மக்கள் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
Related Pots
இந்தியாவின் குவாட்டியில் இடம்பெற்று வரும் 12 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை முதல் பதக்கத்தை இன்று (06) சுவீகரித்துள்ளது.
48 கிலோ கிராம் எடைப் பிரிவில் பளு தூக்கும் வீராங்கனை தினூஷா ஹன்சினி வௌ்ளிப் பதக்கத்தை வென்றெடுத்துள்ளார்.
இதே எடைப் பிரிவில் தங்கப்பதக்கத்தை இந்தியா வென்றெடுத்ததுடன் வெண்கலப் பதக்கத்தை பங்களாதேஷ் சுவீகரித்தது.
Related Pots
காத்மாண்டு,
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலநடுக்கம் பீகார் மாநிலத்திலும் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேபாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ந் தேதி 7.9 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு அந்த நாட்டையே உருக்குலைத்து விட்டது.
தலைநகர் காட்மாண்டு வில் ஏராளமான வீடுகள், கட்டிடங்கள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள், பழமை வாய்ந்த புராதன சின்ன கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த பூகம்பத்தில் ஆயிரக் கணக்கானோர் சிக்கி உயிரிழந் தனர். 90 லட்சம் பேர் வீடு இன்றி தவித்தனர்.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலநடுக்கம் பீகார் மாநிலத்திலும் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேபாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ந் தேதி 7.9 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு அந்த நாட்டையே உருக்குலைத்து விட்டது.
தலைநகர் காட்மாண்டு வில் ஏராளமான வீடுகள், கட்டிடங்கள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள், பழமை வாய்ந்த புராதன சின்ன கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த பூகம்பத்தில் ஆயிரக் கணக்கானோர் சிக்கி உயிரிழந் தனர். 90 லட்சம் பேர் வீடு இன்றி தவித்தனர்.