தென்னிந்திய மார்க்க அறிஞர் PJ இலங்கை வருகிறார்.










சிங்கள மொழியில் குர்ஆன் வெளியீடு - தென்னிந்திய மார்க்க அறிஞர் PJ இலங்கை வருகிறார்.
===============
✵ தென்னிந்திய மார்க்க அறிஞர் சகோ. PJ கலந்து சிறப்பிக்கும்.
★சிங்கள மொழியில் புனித அல் குர்ஆன் வெளியீட்டு நிகழ்வு
இன்ஷா அல்லாஹ்…..
☛ 08.11.2015 (ஞாயிற்று கிழமை)
☛ நேரம் : மாலை 4.00 மணி முதல்.
☛ இடம் : சுகததாச உள்ளக அரங்கு - கொழும்பு
அனைவரையும் அன்புடன் அழைக்கிறது ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ).

கஃபாவில் அனைத்து நபிமார்களும் தொழுதுள்ளார்கள் என்ற செய்தி உண்மையா?

 

 

 

 


kaava

 

கஃபதுல்லாஹ் இறைவனுக்காக கட்டப்பட்ட முதல் வணக்கஸ்தலமா ?
அனைத்து நபிமார்களும் அந்த வணக்கஸ்தலத்தில் தொழுகை நடத்தினார்களா?

- ஷாகுல் ஹமீது
பதில்:
முதன்முதலில் அல்லாஹ்வை வணங்குவதற்காகக் கட்டப்பட்ட ஆலயம் மக்காவில் உள்ள கஃபா தான் என்று அல்குர்ஆன் கூறுகின்றது.
அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும்.
அல்குர்ஆன் 3:96 
அனைத்து நபிமார்களும் கஃபத்துல்லாஹ்வில் தொழுகை நடத்தினார்களா என்று கேட்டுள்ளீர்கள்.  அதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. ஆனால் மிஃராஜ் பயணத்தின் போது பைத்துல் முகத்தஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனைத்து நபிமார்களுக்கும் தொழுகை நடத்தியதாகவும், அதில் அனைத்து நபிமார்களும் தொழுததாகவும் ஆதாரப்பூர்வமான செய்தி உள்ளது.
மிஃராஜ் பயணத்தில் பைத்துல் முகத்தஸிற்குச் செல்தல்
மஸ்ஜிதுல் ஹராமிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன். அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.
(அல்குர்ஆன் 17:1)

பைத்துல் முகத்தஸுக்கு வந்ததும் நபிமார்கள் (வாகனத்தை) கட்டும் வளையத்தில் புராக்கை நான் கட்டினேன். பிறகு பள்ளியில் நுழைந்தேன்.
(அறிவிப்பவர்: அனஸ் (ரலி),
நூல்: முஸ்ம் 234, அஹ்மத் 12047)
பைத்துல் முகத்தஸில்...
என்னை நபிமார்களின் கூட்டத்தில் இருக்கக் கண்டேன். அப்போது மூஸா (அலை) அவர்கள் தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள் ஷனூஆ குலத்தைச் சோந்த மனிதரைப் போன்று நல்ல தோற்றமும், நடுத்தர உயரமும் உள்ள மனிதராக இருந்தார்கள். அப்போது ஈஸா (அலை) அவர்களும் தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள் மக்களில் கிட்டத்தட்ட உர்வா பின் மஸ்ஊத் சகபீயைப் போன்று இருந்தார்கள். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்களும் தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள் உங்களுடைய தோழரை (முஹம்மத்) போன்றிருந்தார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: முஸ்லிம் 251)
நான் அழைத்துச் செல்லப்பட்ட இரவில் மூஸா (அலை) ஷனூஆ குலத்தைச் சேர்ந்த மனிதரைப் போன்று பழுப்பு நிறமுடைய உயரமான சுருள் முடி கொண்ட மனிதராகக் கண்டேன். ஈஸா (அலை) அவர்களை நடுத்தர உயரமும் சிகப்பும் வெண்மையும் சார்ந்த மிதமான சரும அமைப்பு கொண்டவர்களாகவும், படிந்த, தொங்கலான தலை முடியுடையவர்களாகவும் கண்டேன். நரகத்தின் காவலரான மாக்கையும், (இறுதிக் காலத்தில் வரவிருக்கும்) தஜ்ஜாலையும் கண்டேன். இவையெல்லாம் அல்லாஹ் எனக்குக் காண்பித்த அவனுடைய சான்றுகளில் அடங்கியவை. "அவரை (மூஸாவை) சந்தித்ததில் நீர் சந்தேகம் கொள்ளாதீர்'' (அல்குர்ஆன் 32:23)
(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்கள்: புகாரி 3239, முஸ்ம் 239)
நபிமார்களுக்கு இமாமாக நின்று தொழுவித்தல்
அப்போது தொழுகைக்கு நேரமாகி விட்டது. நான் அவர்களுக்குத் தொழுவித்தேன். நான் தொழுது முடித்ததும், "முஹம்மதே! இதோ மாக்! நரகத்தின் அதிபதி! இவருக்கு ஸலாம் சொல்லுங்கள்'' என்று ஒருவர் சொன்னார். உடனே அவர் பக்கம் திரும்பினேன். அவர் முதல் எனக்கு (ஸலாம்) சொல் விட்டார்.
(முஸ்லிம் 251)

(இந்தச் செய்தி இப்னு ஜரீர் என்ற நூலும் இடம்பெற்றுள்ளது)
        

2007-ம் ஆண்டே ஓய்வு அறிவித்திருப்பேன், சச்சின் என்னை தடுத்தார்: சேவாக்

                               


















90 ஒருநாள் போட்டிகளுக்கும் அதிகமாக தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ள சச்சின், சேவாக். | பிடிஐ.
2007-ம் ஆண்டு அணியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு உடனடியாக ஓய்வு அறிவிக்க முடிவெடுத்ததாகவும், ஆனால் சச்சின் டெண்டுல்கர் தன்னை தடுத்தததால் அந்த முடிவை கைவிட்டதாகவும் விரேந்திர சேவாக் தெரிவித்தார்.
"எந்த ஒரு வீரரும் அவரது கிரிக்கெட் வாழ்வின் உச்சத்தில் ஓய்வு பெறவே விரும்புவார்கள். நானும் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிய போதே ஓய்வு பெற்றிருந்தால் நானும் பிரியாவிடை உரையாற்றியிருப்பேன். ஆனால் விதி எனக்காக வேறு ஒன்றை வைத்திருந்தது.

2007-ம் ஆண்டு அணியிலிருந்து நீக்கப்பட்டவுடன் ஓய்வு அறிவிக்க முடிவெடுத்தேன். ஆனால் சச்சின் டெண்டுல்கர்தான் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று தடுத்து நிறுத்தினார்.

2013-ம் ஆண்டு ஆஸ்திரேலியா தொடரின் போது என்னை அணியிலிருந்து நீக்கிய போதே அணித் தேர்வாளர்கள் என்ன செய்யப் போகிறேன் என்று என்னிடம் கேட்டிருந்தால், அந்தத் தொடரிலேயே ஓய்வு அறிவித்திருப்பேன்.

நான் இப்போதும், இனிமேலும் கூட கிரிக்கெட் ஆட்டத்துடன் தொடர்பில்தான் இருப்பேன். வர்ணனை வாய்ப்பு கிடைத்தால் பரிசீலிப்பேன். எனது பேட்டிங் போலவே எனது வர்ணனையும் நேர்மையாக, வெளிப்படையாக கருத்துகளை தெரிவிப்பதாக இருக்கும்.

நான் ஓய்வு பெற்றது குறித்து எனது இரு மகன்களுக்கும் ஏமாற்றம். ஆனால் எனக்கு அதுபற்றி கவலையில்லை. நான் விளையாடிய கேப்டன்களில் அனில் கும்ளே சிறந்தவர், அவர் எங்கள் தன்னம்பிக்கையை மேலும் வளர்த்தெடுத்தவர்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நடப்பு தொடரில் டெல்லி டெஸ்ட் போட்டியின் போது சேவாக் தனது பிரியாவிடை உரையளிக்க வாய்ப்புகள் உள்ளன. பிசிசிஐ-யும் அதனை பரிசீலித்து வருகிறது.



                     இவரை பற்றிய உண்மை தகவல்












யார் இந்த ஏ பி டி வில்லியர்ஸ்..?
அனைவருக்கும் தெரிந்த பதில் அவர் ஒரு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வீரர்.
பெங்களூரு அணிக்காக ஆடுகிறார் என்பது மட்டுமே. ஆனால் அவர் அது மட்டும் அல்ல.
1.தேசிய ஜூனியர்
ஹாக்கி அணிக்கு தேர்வு செய்ய பட்டவர்.
2.தேசிய ஜூனியர் கால் பந்து அணிக்கும்
தேர்வானவர்.
3.தேசிய ஜூனியர் ரக்பி அணியின் தலைவர்,
4.தேசிய நீச்சல் ஜூனியர் பிரிவில் 6 தேசிய
சாதனைகளை படைத்தவர்.
5.தேசிய தடகள போட்டியில் ஜூனியர் பிரிவில்
வேகமாக 100 மீட்டர் ஓடிய
சாதனைக்கு சொந்தக்காரர்.
6.19 வயதிற்கு உட்பட்டோருக்கான
பூ பந்து போட்டியில் சாப்பியன் பட்டம்
வென்றவர்.
7.தன்னுடைய அறிவியல் ஆராய்சிக்காக
நெல்சன் மண்டேலாவிடம்
விருது வாங்கியவர்.
இப்போது சொல்லுங்கள் யார் நிஜமான ஆல் ரவுண்டர்...?














           அல்சர்  நோயாளிக்கு அற்புத உணவுகள்









அல்சர் நோயாளிகள் தங்களுக்கான உணவு முறைகளில் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

1. காலையில் எழுந்ததும் பால் அல்லது குறைவான அளவில் காபி அல்லது டீ அருந்தலாம்.

காலை: இட்லி / இடியாப்பம் / குறைந்த எண்ணெயில் செய்த தோசை அல்லது ஏதாவது பழங்கள். தொட்டுக்கொள்ள, காரம் அதிகம் இல்லாத தேங்காய் சட்னி, தேங்காய் பால். (வாய் மற்றும் வயிற்றுப் புண்ணை ஆற்றும்.)

* 11 மணி: புளிக்காத மோர்.

* மதிய உணவு: நிறையக் காய்களுடன் சேர்த்த அரிசி சாதம். கூடவே சப்பாத்தி, பருப்புக் கூட்டு, சப்ஜி, மோர். அசைவப் பிரியர்கள், பருப்புக்குப் பதில் சிக்கன் அல்லது மீன் கிரேவி.

* மாலை 4 மணி: பால், அதிக டிகாக்ஷன் இல்லாத காபி/டீ. அரை மணி நேரம் கழித்து அந்தந்த சீஸனில் கிடைக்கும் ஏதாவது பழங்களை சாப்பிட வேண்டும்.

* இரவு: இரண்டு இட்லி, தோசை, சப்பாத்தி இவற்றில் ஏதேனும் ஒன்றை 2 அல்லது 3 அளவில் பருப்பு, மோருடன் சாப்பிடலாம்.

கொஞ்சம் சாதம், காய்கறிகள் சேர்க்கப்பட்ட சாலட், தயிர்ப் பச்சடி, நீர்த்த சூப், தேங்காய்ப் பால் சேர்த்த உணவு வகைகள் சேர்க்கலாம்.

சேர்க்க வேண்டியவை

* மோர் அதிகம் அருந்துவது மிகவும் நல்லது.

* கீரை, பீன்ஸ், கேரட் மற்றும் அனைத்து நீர்க்காய்கள்.

* காரத்துக்கு மிளகு, சீரகம் சேர்த்துச் சாப்பிடலாம்.

* தயிர்ப் பச்சடியில் காய்கள் அதிகமாகவும் தயிர் குறைவாகவும் சேர்க்கவேண்டும்.

* நெஞ்செரிச்சல் பிரச்சனை உள்ளவர்கள், இரவு படுக்கைக்குச் செல்வதற்கு 2 மணி நேரம் முன்பாகச் சாப்பிட்டுவிட வேண்டும்.

* எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்களை, காலை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. இரு வேளை உணவுகளுக்கு இடைப்பட்ட வேளையில் சாப்பிடலாம்.

தவிர்க்க வேண்டியவை

* வறுத்த, பொரித்த உணவுகள், கடின உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

* பருப்பு , வறுத்த மீன், கடலைமாவில் செய்த பஜ்ஜி, பக்கோடா, மிக்சர் மற்றும் அதிகச் செரிவான சொக்லேட்டுகள், கருப்புக் காபி தவிர்க்கலாம்.

  சவுதி பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு  

  • சவுதி அரபியாவின் , நஜ்ரான் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் 1 பள்ளியில் குண்டு வெடிப்பு சம்பவம் இடம் பெற்றது . 

  • இதுவரை வெளியான தகவளின் அடிப்படையில் 1 நபர் இறந்து விட்டார்.

  • சந்தேக 1 நபர் உற்பட 12 நபர் காயமடைந்ததாகவும் தெறிக்கப்பட்டுள்ளது

  • குறித்த பிரதேசம் யெமன் எல்லைக்கருகே உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

| Copyright © 2013 Online Srilankan