நேபாளத்தில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு


காத்மாண்டு,

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலநடுக்கம் பீகார் மாநிலத்திலும் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேபாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ந் தேதி 7.9 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு அந்த நாட்டையே உருக்குலைத்து விட்டது.

தலைநகர் காட்மாண்டு வில் ஏராளமான வீடுகள், கட்டிடங்கள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள், பழமை வாய்ந்த புராதன சின்ன கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த பூகம்பத்தில் ஆயிரக் கணக்கானோர் சிக்கி உயிரிழந் தனர். 90 லட்சம் பேர் வீடு இன்றி தவித்தனர்.

 

No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan