இலங்கைப் பெண்ணின் வாயிற்றில் 8 கிலோ கல் (படங்கள்)

டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் பெண் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையில் 8 கிலோ கிராம் நிறையுடைய கல்லொன்று வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.

அக்கரப்பத்தனை பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் மூலம் இந்த கல் அகற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வயிற்று வலி காரணமாக நீண்ட காரலமாக அவதியுற்று வந்த பெண்ணிற்கு மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனைகளின் பின்னர் வயிற்றில் பாரிய கல்லொன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையில் குறித்த பெண்ணின் வயிற்றிலிருந்து 8 கிலோ கிராம் நிறையுடைய பாரிய கல்லொன்று அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அறுவை சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட பெண் ஆரோக்கியமாக இருப்பதாக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன

No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan