வீடியோ: ஈரானிய அதிபர் வருகை இத்தாலியில் நிர்வாண ரோமன் சிலைகள் திரையிட்டு மூடல் பொதுமக்கள் ஆத்திரம்



ரோம்

மேற்காசிய நாடான ஈரான், அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டதால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், சமீபத்தில் அணுசக்தி ஒப்பந்தம் செய்தன. இதையடுத்து, ஈரான் மீது அந்த நாடுகள் விதித்த பொருளாதார தடை நீக்கப்பட்டது. இதையடுத்து, ஈரான் அதிபர் ஹசன் ருஹானி, ஏராளமான தொழில் அதிபர்களுடன் ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டார் இத்தாலி சென்ற அவர், அந்த நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இத்தாலிய நிறுவனங்களுடன், 1.25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகி உள்ளது.
பைப்லைன்' மூலம் இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விற்பனை செய்யும் திட்டம், பிரான்ஸ் நாட்டுடன் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம்,ரெனால்ட் உள்ளிட்ட பிரான்ஸ் கார் தயாரிப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் ஆகியவற்றில் கையெழுத்திடப்பட்டு உள்ளது.


ஈரான் அதிபர் ஹாசன் ருஹானி இத்தாலிய பிரதமர் மாட்டியோ ரென்சி இருவரும் இத்தாலியின் கலைபொருட்கள் குவிந்துள்ள
கேப்பிடோலின் அருங்காட்சியகத்திற்கு சென்றனர். ஆனால் அங்குள்ள இத்தாலியின்  விலைமதிப்பற்ற கலைப்பொருட்களான சிலைகள் அனைத்தும் வெள்ளை பெட்டிகள் கொண்டு மூடப்பட்டு இருந்தது.ஏன் என்றால்  ரோமனின் பெண்  தெய்வங்கள் மற்றும் ஆண் தெய்வங்களின் சிலைகள் அனைத்தும் ஆடையில்லாமல் இருந்தவைகளாகும் இதனால் தங்கள் விருந்தினர் அதிருப்தி அடைய கூடாது  அவற்றை பெட்டிகள் கொண்டு மறைத்து விடடனர்.
அதிகாரப்பூர்வ தலைவர்களின் புகைப்படங்கள்   மார்கஸ் அவ்ருலியஸ் குதிரை சவாரி செய்திருப்பது போல் இருந்த சிலையின் அருகே இருந்து எடுக்கபட்டது.ஆனால்   ரோம பேரரரசர் மற்றும் நிர்வாண சிலைகள் அனைத்தும் திரையிட்டு மூடபட்டு இருந்தன. ஆனால் இது பொது மக்கள் மத்தியில் அத்ருப்தியை ஏற்படுத்தி உள்ளது.  பலர் இது குறித்து கோபம் கொண்டு விமர்சனம் செய்து உள்ளனர். அரசியல் காரணங்களுக்காக நமது நாட்டின் கலாசாரத்தை பாரம்பரியத்தை விட்டு கொடுக்கவேண்டியது இல்லை என கூறி உள்ளனர்.


No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan