துடுப்பாட்ட செய்தி |
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரருக்கு 20 ஆண்டுகள் தடை! |
[ செவ்வாய்க்கிழமை, 26 சனவரி 2016, 08:04.36 மு.ப GMT ] |
சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான குலாம் போடிக்கு 20 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.குலாம்
போடி இந்தியாவில் பிறந்து தென்ஆப்பிரிக்காவில் குடியேறியவர். 2012ம் ஆண்டு
ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம் பெற்று இருந்தார். இந்நிலையில் இவர் கடந்த ஆண்டு (2015) நடந்த உள்ளூர் டி20 போட்டியான ராம்ஸ்லாம் டி20 தொடரில் “மேட்ச் பிக்சிங்” செய்ய வீரர்களை அணுகியதாக புகார் எழுந்தது. இது குறித்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நடத்திய விசாரணையில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குலாம் கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்க 20 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. |
Posted by
oneline srilanka
|
Tuesday, January 26, 2016 |
1:54:00 PM
No comments:
fazlycherryeducation.blogspot.com