சிலருக்கு சில சூழ்நிலைகளில் சூடு அதிகமாகி குறையவே குறையாது; அவர்களுக்கு உடனே ஏற்படும் விளைவு தான் அஜீரணம். அதுபோல, இந்த வகை பெண்களுக்கு வருவது தான் முகப்பரு. எதனால் சூடு வரும் தெரியுமா?

* தடுப்பூசி போட்டால் உடலில் சூடு அதிகரிக்கும். அதுபோல, ஸ்டிராய்டு ஊசி போட்டாலும் சூடு அதிகரிக்கும். அதைத்தான் காய்ச்சல் என்று சொல்லி மருந்து தரப்படுகிறது.

* மது குடிப்பவர்களுக்கு, அடிக்கடி சிகரெட் பிடிப்பவர்களுக்கு உடலில் சூடு அதிகமாக இருக்கும்.

* மாதவிடாய் மற்றும் மகப்பேறு சமயங்களில் சில பெண்களுக்கு இந்த பிரச்சனை இருக்கும்.

* தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கும் சூடு, உடலில் அதிகமாக இருக்கும்.

* நீண்ட தூர பயணங்களுக்கு பின், உடல் சூடு காணும்.

உடல் சூட்டை எப்படி சமாளிப்பது?

உடலில் உள்ள சீரற்ற தன்மையை சரி செய்ய ஒரே வழி உணவும், பழக்க வழக்கங்களும் தான். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் இருந்தால் பிரசச்னை ஏற்படும். அதுபோல, உணவுகளில் மாற்றம் இருந்தாலும் இதே தொல்லை தான். அதனால், இந்த இரண்டிலும் கவனம் தேவை. உடலில் சூடு தணிய வேண்டுமானால், உணவில் மாற்றம் ஏற்பட வேண்டும். இப்போது “ஜங்க் புட்’ என்று சொல்லப்படும் கொழுப்பு உணவுகளால் கூட உடலில் மாற்றம் ஏற்படுகிறது.

அதனால் தான் இதை சாப்பிடுவோருக்கு ஏதாவது ஒரு கட்டத்தில் பிரச்சனை ஏற்படுகிறது. என்ன உணவு சாப்பிட்டாலும், சத்தான, உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான பச்சைக் காய்கறி, சத்து உணவுகளையும் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு எட்டிப்பார்க்கக்கூட செய்யாது. இதை வளர் இளம் பெண்கள் மனதில் கொள்ள வேண்டும். வழக்கமான உணவுகளில் பச்சைக் காய்கறிகள், பழங்கள் என்று சேர்த்துக் கொள்வதுடன், இந்த உணவுகள் சேர்ப்பது மிக முக்கியம்.

* தர்பூசணி மட்டுமல்ல, கிர்ணி உட்பட பல வகை நீர்ச்சத்து உள்ள பழங்களில் பொட்டாசியம் சத்து உள்ளது. துண்டாக்கியோ, ஜூசாகவோ சாப்பிடலாம்.

* பொதுவாகவே கீரை வகைகள் உடலுக்கு நல்லது. மக்னீசியம் சத்துள்ள பசலைக் கீரையை சமைத்து சாப்பிட்டால், உடல் சூடு தணிவதுடன், கண்களுக்கும், தோலுக்கும் நல்லது.

* கோடையில் மட்டுமல்ல, பொதுவான சமயங்களில் வெள்ளரியை துண்டாக்கி சாப்பிடலாம். சமைத்தும் சாப்பிடலாம். நார்ச்சத்து உள்ளது.

* சிலருக்கு தயிர், மோர் சாப்பிடும் பழக்கமே இல்லை. இப்போது தான் பழக்கத்தை ஆரம்பித்துள்ளனர். தயிர் சாப்பிடுவது மிக நல்லது. சூடு தணிந்து, இதத்தை தரும் தயிர், கண்டிப்பாக சாப்பாட்டில் சேருங்கள். இப்படி எத்தனையோ சத்தான உணவுகள் உள்ளன. என்ன தான் ஜாலிக்காக வெளியில் வாய்க்கு ருசி என்று நினைத்து சாப்பிட்டாலும், இந்த சத்தான உணவுகளை மறக்கவே கூடாது தானே.





கதிர்வீச்சு, வெப்பம், தூசு போன்ற சுற்றுச்சூழலில் இருந்து நம்மைக் காக்கவும் உதவுகிறது. மேலும், உடலின் தட்பவெப்ப நிலையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், தொடு உணர்ச்சியைத் தூண்டவும் செய்கிறது. இப்படி, உடலின் சகலத்துக்கும் பயன்படும் சருமத்தை சுற்றுச்சூழல், மரபணு, ஊட்டச்சத்து உள்ளிட்ட பல்வேறு வெளிப்புற, உட்புற விஷயங்கள் பாதிக்கின்றன.

சருமப் பராமரிப்புக்கான க்ரீம்களை வாங்கிப் பூசுவதும், சிகிச்சைகளை மேற்கொள்வதும் இன்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. பலரும், தரமற்ற க்ரீம்களைத் தடவுவது, மன அழுத்தம், ஊட்டச்சத்துக் குறைபாடு, சுற்றுச்சூழல் மாசு, புறஊதாக் கதிர்வீச்சு, மது அருந்துதல், புகைப் பழக்கம் போன்ற பல காரணங்களால், இளமையிலேயே முதுமைத் தோற்றத்தை அடைந்து விடுகின்றனர்.

இளமையைத் தக்கவைக்க வழி சொல்கிறார் மரபியல் ஆராய்ச்சியாளர் டாக்டர் சலீம் முகமது.

'சருமம் ஆரோக்கியமாக இருப்பதற்கும், பாதிப்படைவதற்கும் வெளிப்புறக் காரணிகள்தான் மிக முக்கியமானது என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையில், இவை வெறும் 20 சதவிகிதம் அளவுக்கே இருக்கிறது. உடலுக்குள் நடக்கும் மாற்றங்கள், நாம் எடுத்துக்கொள்ளும் உணவு, ஆரோக்கியம் இவைதான் 80 சதவிகிதம் தோல் நலத்துக்குக் காரணமாக இருக்கின்றன. நம்முடைய சருமத்தில் கொலாஜன் (Collagen) என்ற புரதம் உள்ளது.

இதுதான் சருமம் பொலிவுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க முக்கியக் காரணம். வயது ஏற ஏற, சருமம் குறைந்த அளவில் கொலாஜனை உற்பத்தி செய்கின்றன. அதேநேரத்தில், 'கொலாஜன் சிதைவு’ என்பது விரைவுபடுத்தப்படுகிறது. கொலாஜன் சிதைக்கப்படும்போது, சருமத்தில் சுருக்கம் ஏற்படுகிறது. இன்றைய வாழ்க்கை முறை மாற்றம் உள்ளிட்ட காரணிகள், கொலாஜன் சிதைவை விரைவுபடுத்துகின்றன. அதிக அளவில் கொலாஜன் சிதைவு என்பது, அதிக அளவில் சருமச் சுருக்கத்துக்கும், சருமம் பொலிவற்ற தன்மைக்கும் வழிவகுக்கிறது.

இந்த கொலாஜன் சிதைவுத் தன்மை, நச்சுக்களின் தாக்கம் போன்றவை மரபணுவில் மாற்றத்தை ஏற்படுத்தி, வயதாவதை விரைவுபடுத்துவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மரபணுவில் குறிப்பிட்ட 'கோட்’-ல் தாக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம், வயதாகும் செயல்பாடு விரைவுபடுத்தப்படுகிறது. ஆனால், இயற்கையில் கிடைக்கும் சில பொருட்களைக் கொண்டு இந்த நச்சுக்களில் இருந்து பாதுகாத்து, கொலாஜன் சிதைவைக் கட்டுப்படுத்தி, இளமையில் முதுமைத் தன்மையைக் கட்டுப்படுத்தலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

முதுமையைத் தவிர்க்க முடியாது. ஆனால், அந்தந்த வயதுக்குரிய வசீகரத்துடன் வாழ முடியும். நம்முடைய சருமத்தின் வயதாகும் செயல்பாட்டின் தன்மையை, டி.என்.ஏ பரிசோதனை மூலம் தெரிந்து கொண்டு மிகவும் பாதுகாப்புடன், இயற்கையான முறையில் முதுமையைத் தாமதப்படுத்தலாம்'' என்ற டாக்டர் சலீம் முகமது, அதற்கான சிகிச்சை முறைகளைச் சொன்னார்.

''ஒருவருடைய சருமத்தின் வயதாகும் தன்மை எப்படி உள்ளது என்பதை 'கம் அலைவ்’ என்ற மரபியல் ஆய்வுப் பரிசோதனை செய்யப்படும்.  முதலில் ஒருவருக்கு சருமம் எப்படி உள்ளது என்பதைக் கண்டறிந்து, அந்தச் சருமத்துக்கு ஏற்றது போன்ற ஃபேஷியல் பரிந்துரைக்கப்படும். அதேநேரத்தில், அவர்களின் உமிழ்நீரை டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பிவைப்போம். டி.என்.ஏ பரிசோதனையில், கொலாஜன் சிதைவு மற்றும் சருமத்தைப் பாதிக்கும் நச்சுக்கள் வயதாவதற்குக் காரணமான மரபணுவில், எந்த அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது கண்டறியப்படும்.

இதன் அடிப்படையில், நச்சுக்களில் இருந்து பாதுகாப்பது, கொலாஜன் சிதைவைத் தடுத்து இளமையில் முதுமை அடையாமல் இருப்பதற்கான சிகிச்சை திட்டமிடப்படும். அவர்களுக்கான பிரத்யேக ஊட்டச்சத்து திட்டமிடப்பட்டு, ஒருநாளைக்கு ஒரு எஸ்.எம்.எஸ் என்ற அளவில் 270 நாட்களுக்கு அனுப்பப்படும். இதனுடன், அவர்களுக்கு ஏற்ற ஃபேஷியல் க்ரீம் பரிந்துரைக்கப்படும். இதனைச் சரியாகப் பின்பற்றுவதன் மூலம் ஒருவர் அந்தந்த வயதுக்கான வசீகரத்துடன் வாழ முடியும்' என்றார்.






வாட்ஸ் அப் செய்திகள் , புகைப்படங்கள், வீடியோக்கள், மற்றும் வாய்ஸ் நோட்ஸ் என அனைத்து வகையான வாட்ஸ் அப் செய்திகளையும்  'கூகுள் ட்ரைவ்'வில் சேமித்து வைத்துக்கொள்ளும் புதிய வசதி அறிமுகமாகி இருக்கிறது.

கூகுள் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து இதனை அறிமுகம் செய்துள்ளது. இனிமேல் ஐபோன் பயனாளிகள் தங்களது 'ஐகளவுட்'டில் தங்களது வாட்ஸ்அப் மெசேஜ்களை சேமித்து வைத்துக்கொள்வதை போல ஆண்ராய்டு பயனாளிகள் இனி தங்களது வாட்ஸ்அப் மெசேஜ்கள் அனைத்தையும் 'கூகுள் ட்ரைவ்'வில் பரிமாற்றம் செய்து சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

கம்யூட்டரில் போனை 'கனக்ட்' செய்து வாட்ஸ்அப் ஃபோல்டரில் உள்ள மெசேஜ்களை பரிமாற்றம் செய்து சேமிக்க வேண்டிய நீளமான வேலை இனி ஆண்ராய்டு பயனாளிகளுக்கு இல்லை. இந்த வசதியானது சில கைபேசிகளுக்கு மாடல்களுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வழிமுறை :

இந்த வசதியை தொடங்க, வாட்ஸ் ஆப் setting -ல் chat and Calls பகுதியில் Chat Backup வசதியை தேர்வு செய்து வரும் பகுதியில் உங்கள் கூகிள் கணக்கை இணைப்பதன் மூலம் தொடங்கலாம்.



‪#‎நெஞ்சு_எரிச்சல்_போகணுமா‬?
ஏதாவது எண்ணெய்ப் பலகாரம், சுவீட், அல்லது பூரி சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே எடுங்கள் ஒரு டம்ளர் வெந்நீரை…. மெதுவாகக் குடியுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போயே போச்சு!
‪#‎சதை_குறையணுமா‬?
வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் போடும் அதிகப்படி சதை குறையவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.
‪#‎காலையில்_சரியாக_மலம்‬ கழிக்க முடியவில்லை என்று ஃபீல் பண்ணுகிறீர்களா?
எடுங்கள் வெந்நீரை! குடியுங்கள் உடனே! இம்மீடியட் எஃபெக்ட் கிடைக்கும். (நிறையப் பேர், ”அட, காலையில் எங்க வீட்டில் காபி என்று பெயர் சொல்லி தினம் அதைத்தானே கொடுக்கிறார்கள்” என்று புலம்புவது கேட்கிறது!)
‪#‎உடம்பு_வலிக்கிறதா‬?
உடம்பு வலிக்கிற மாதிரி இருக்கிறதா? உடனே வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனங்கற்கண்டு போட்டு குடியுங்கள். இதன் மூலம் பித்தத்தினால் வரும் வாய்க்கசப்பு மறைந்து விடும். மேலும், உடல் வலிக்கு, நன்றாக வெந்நீரில் குளித்துவிட்டு, இந்த சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்துவிடும்.
‪#‎கால்_பாதங்கள்_வலிக்கிறதா‬?
எங்காவது அலைந்துவிட்டு வந்து கால் பாதங்கள் வலிக்கிறது என்றால், அதற்கும் நமது வெந்நீர்தான் ஆபத்பாந்தவன். பெரிய பிளாஸ்டிக் டப்பில் கால் சூடு பொறுக்குமளவுக்கு வெந்நீர் ஊற்றி அதில் உப்புக்கல்லைப் போட்டு, அதில் கொஞ்ச நேரம் பாதத்தை வைத்து எடுங்கள். காலில் அழுக்கு இருப்பது போல் தோன்றினால், வெந்நீரில் கொஞ்சம் டெட்டால் ஊற்றி அதில் பாதத்தை வைத்தால், கால் வலி மறைவதோடு, பாதமும் சுத்தமாகிவிடும்.
‪#‎மூக்கு_அடைப்பா‬?
மூக்கு அடைப்பா? நம்ம வெந்நீர்தான் டாக்டர்! வெந்நீரில் விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சனம் போட்டு அதில் முகத்தைக் காண்பித்தால், மூக்கடைப்பு போயிந்தி! வீட்டில் வேலைக்கு ஆட்கள் இல்லாமல் தாங்களே பாத்திரம் தேய்த்து, துணி துவைக்கும் பெண்கள், வாரத்திற்கு ஒரு முறையேனும் உங்கள் கைகளை வெந்நீரில் கொஞ்ச நேரம் வைத்திருங்கள். இதன் மூலம் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் போய், உங்கள் கைகள் ஆரோக்கியமாக இருக்கும்.
‪#‎வெயிலில்‬ அலைந்து தாகம் எடுக்கும் போதுவெயிலில் அலைந்து விட்டு வந்து உடனே சில்லென்று ஐஸ்வாட்டர் அருந்துவதைவிட, சற்றே வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவது, தாகம் தீர்க்கும் நல்ல வழி. ஈஸினோபீலியா, ஆஸ்துமா போன்ற உபாதைகள் இருப்போர், உங்களுக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வெதுவெதுப்பான வெந்நீர் குடியுங்கள்.
திருமணம் மற்றும் பார்ட்டிகளில் நாம் நன்றாக சாப்பிட்டு விட்டு குளிர் பானங்கள் குடிக்காமல் ஒரு கிளாஸ் வெந்நீர் குடியுங்கள் அது உங்களுக்கு உடம்புக்கு நல்ல பலனை தரும்.
‪#‎ஜலதோஷம்‬ பிடித்தவர்களுக்கு
அதுபோலவே, ஜலதோஷம் பிடித்தவர்களும் வெந்நீர் குடித்தால், அது அந்த நேரத்துக்கு நல்ல இதமாக இருப்பதோடு சீக்கிரம் குணமாகும். இதையெல்லாம் தவிர, வீட்டில் நெய், எண்ணெய் பாட்டில் இருந்த பாத்திரங்களைக் கழுவும்போது கொஞ்சம் வெந்நீரை ஊற்றி ஊற வைத்து, அப்புறம் கழுவினால் பிசுக்கே இல்லாமல் பளிச்சென்று சுத்தமாகும்.
‪#‎தரையை_துடைக்கும்‬ போது
அதுபோலவே தரை துடைக்கும் போது, குறிப்பாக குழந்தைகள், நோயாளிகள் இருக்கும் வீட்டின் தரைகளை வெந்நீர் உபயோகப்படுத்தி துடையுங்கள். கிருமி இல்லாத சுத்தமான தரை உங்களுடையதாகும்!
‪#‎திடீரென்று_கடுமையான_தலை_வலியா‬?
தலைவலியை உணர்ந்தவுடன் 200 மி.லி அளவு வெந்நீர் அருந்துங்கள். சில நேரங்களில் அஜீரணம் அல்லது குடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் கூட தலை வலி ஏற்பட வாய்ப்புண்டு. எனவே இளஞ்சூட்டில் வெந்நீர் குடித்தால், உடனடியாக ஜீரணத்தை தூண்டி தலைவலி நீங்கும். அல்லது சூடான காபியை குடியுங்கள். தலைவலிக்கு இதமான மருந்தாக காபி அமையும்.
‪#‎சுறுசுறுப்புக்கு_சுக்கு_வெந்நீர்‬
தமிழகத்தைப் பொருத்தவரை நகர்ப்புறங்களிலும், கிராமங்களிலும் பெரும்பாலான வீடுகளில் வாரம் ஒருமுறை சுக்கு வெந்நீர் தயாரித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.சென்னை போன்ற பெருநகரங்களிலும், மைக்ரோ ஃபேமிலி (micro family) எனப்படும் 3 அல்லது 4 பேரைக் கொண்ட தனிக்குடித்தனங்களிலும் சுக்கு வெந்நீர் என்பது கானல் நீர் எனலாம். விருந்து, விழாக்கள், அலுவலகப் பார்ட்டி என்று பல இடங்களிலும், பல்வேறு விதமான உணவு வகைகளைச் சாப்பிட்டு அஜீரணத்திற்கு உள்ளாவோர் இந்த சுக்கு வெந்நீரை 200 மி.லி அளவுக்கு வாரம் ஒரு முறை அருந்தி வந்தால், உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேராமல் தவிர்ப்பதோடு புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் தரும்.
சுக்கு வெந்நீரானது கிராமங்களில் சிறு ஹோட்டல் போன்ற கடைகளில் கிடைக்கும். அல்லது வீட்டிலும் நாமே தயாரித்து பருகலாம்.
சிறிதளவு சுக்கினை சிறுசிறு துண்டுகளாக்கியோ அல்லது பொடித்தோ தண்ணீரில் கொதிக்க வைத்து, வெல்லம், பனங்கற்கண்டு அல்லது கருப்பு கட்டி (பனைவெல்லம்) ஆகிய ஏதாவதொன்றை தேவையான அளவுக்கு சேர்த்து வடிகட்டி குடிக்கலாம்.
சுக்கு உடன் சேர்த்து சாரணவேர், மிளகு, திப்பிலி ஆகியவற்றையும் சேர்த்து கஷாயம் தயாரித்தும் அருந்தி வந்தால் சளி, இருமல் போன்றவே நம்மை அண்டாமல் போயே போய் விடும்.

நாம் வெளியேற்றும் சிறுநீரில் பலவித வேதிப் பொருட்கள் கலந்துள்ளன. அவற்றுள் சில மணிச் சத்துக்கள், சில உயிரிப்பொருட்கள் அடங்கும். இவை இரண்டும் சரியான வீதத்தில் இருப்பதால், தான் அவை படிகங்களாகவோ, (crystals) திடப் பொருள்களாகவோ, சிறுநீர்பாதையில், பையில் படியாமல் இருக்கின்றன. சிலருக்கு ஏற்படும் வளர்சிதை மாற்றங்களால் இவற்றின் வீதங்கள் மாறி சிறு துகள்களாகவோ, கற்களாகவோ படிய வைக்கின்றன. இவையே நாளடைவில் சிறுநீர் கற்களாக உருவாகின்றன.

சிறுநீர் கற்கள் உருவாவதற்கான காரணங்கள்:


சிறுநீரில் கல் உருவாவதற்கான காரணங்களை உறுதியாகக் கூற முடியாவிட்டாலும், இயல்பாக உடல் பலவீனம் கொண்டவர்கள், தவறான உணவுப்பழக்கம், போதுமான நீர் அருந்தாமை போன்ற காரணங்களாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் உணவுப்பழக்கம் மட்டுமே இதற்கு காரணம் என்றும் கூற முடியாது எனவும் அவர்கள் கூறுகின்றனர். சிறுநீரில் உண்டாகும் கற்களில் கால்சியம், பாஸ்பேட் மூலகங்கள் அடங்கியவைகளே அதிகம் காணப்படுகின்றன.

யூரிக் அமிலம் ரத்தத்தில் 6 மில்லிகிராம் அளவில் இருக்க வேண்டும். பிறவி குறைபாடுகள் சிலவற்றால் இந்த அளவை தாண்டும் போது மிகுதியான  யூரிக் அமிலம் சிறுநீரில் வரும். அப்போது அதுகற்களாக படிவதுண்டு .நாம் உண்ணும் உணவில் இருந்து தேவையான கால்சியம் நமக்கு கிடைக்கிறது.

அதிகப்படியாக கால்சியம் நாம் மாத்திரைகளாகவோ, உணவாகவோ எடுக்கும்போது அவை சிறுநீரில் கழிவு பொருளாக வெளியேறுகிறது. இப்படிப்பட்ட சமயங்களில் கால்சியம் மூலகங்கள் ஆக்சலேட் மற்றும் பாஸ்பேட் உடன் சேர்ந்து சிறுநீர் தாரைகளில் படிகங்களாக படிந்து பின் கற்களாக மாறுகின்றன. சில சிறுநீர் பெருக்கி மருந்துகள் கால்சியம் கலந்த மருந்துகள் கல் உருவாகக்கூடிய வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

யாருக்கு வரும்:


பொதுவாக 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இந்த நோய் வரலாம். பெண்களைப் பொறுத்த வரை, 50 வயதைத் தாண்டும் போது இந்த நோய் வருகிறது. ஒருவருக்கு ஒரு முறை கிட்னியில் ஒன்றுக்கு மேற்பட்ட கற்கள் வந்துவிட்டால், அடுத்தடுத்து கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு.

அறிகுறிகள்:


சிறுநீரகத்தில் இருந்து கல் வெளியேறி குறுகிய சிறுநீர்க் குழாயில் நுழைந்து வெளியேற முடியாமல் தடைபடும் போது இடுப்பைச் சுற்றி தாங்க முடியாதவலி ஏற்பட்டு, கடுமையான வியர்வை ஏற்படும். சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் உண்டாகும். சில நேரங்களில் சிறுநீர் ரத்தத்துடன் கலந்து, எரிச்சலுடன் சிறுநீர் வெளியேறும். அளவில் சிறியதான கற்கள் சிறுநீர் மூலமாகவே வெளியேறிவிடும். தண்ணீர் அதிகம் அருந்தினால் சிறுநீர் கல் தானாகவே கரைந்து வெளியேறும். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை மூலம் கல்லை வெளியேற்ற வேண்டிய அவசியம் ஏற்படும்.

சிறுநீரகப்பையில் கற்கல் சேராமல் தடுப்பது எப்படி?


அதிகமான பழங்கள், காய்கறி, பருப்பு உட்கொள்ள வேண்டும். அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். குறைந்த பட்சம் 3 முதல் 5 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள் வகைகள்:


பாலில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளில் கால்சியம் அதிகம் இருப்பதால் அவற்றை குறைவாக சேர்த்துக் கொள்ளவேண்டும். வைட்டமின் டி சத்துள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். எண்ணெயில் பொரிக்கப்பட்ட மற்றும் மசாலா சேர்த்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
 
சேர்க்க வேண்டிய பழங்கள், காய்கறிகள்:


திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, போன்ற பழ வகைகளையும், பூசணிக்காய், வாழைத்தண்டு, போன்ற நீர்ச்சத்து மிகுந்த காய்களையும் நம் அன்றாட உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். தர்பூசணி, ஆப்பிள், எலுமிச்சை பழச்சாறுகள் சிறுநீரக கற்களைக் கரைக்கும் தன்மை கொண்டவை.

புண்களை ஆற்றக் கூடியதும், சிறுநீரக கற்களை கரைக்க வல்லதும், வயிற்றுபோக்கை கட்டுப்படுத்த கூடியதும், மருக்கள், காலாணிகளை குணமாக்கும் தன்மையும் கொண்டது ரண கள்ளி. அழகுக்காக வளர்க்க கூடியது ரண கள்ளி. இது கிருமி நாசினியாக விளங்குகிறது. கொசுக்களை விரட்ட கூடிய தன்மை உடையது. ரண கள்ளியை வீட்டு முற்றத்தில் கட்டி வைத்தால் கொசுக்கள் வராது. மேல்பூச்சு மருந்தாக போடும்போது விஷக்கடிக்கு மருந்தாகிறது.

வலி நிவாரணியாக விளங்கும் ரண கள்ளி வீக்கத்தை குறைக்கும் தன்மை கொண்டது. காலரா, சீதபேதியை தணிக்க கூடியது. சிறுநீரக கற்களை உடைக்க கூடியது. சிறுநீர் சரியாக போகாமல் அடி வயிற்றில் வீக்கம் இருந்தால் மேல்பூச்சாக பயன்படுத்துவதன் மூலம் வீக்கம் சரியாகும். ரண கள்ளி இலையை பயன்படுத்தி சிறுநீரக கற்களுக்கான உள்மருந்து தயாரிக்கலாம். 3 அல்லது 4 இலைகள், அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் பனங்கற்கண்டுடன் நீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்தால் சிறுநீரக கற்கள் கரையும்.

சிறுநீர் எரிச்சலை போக்க கூடியது. சிறுநீர் தாரையில் ஏற்படும் அழற்சி சரியாகும். உயர் ரத்த அழுத்தம் சீராகும்.இலைகளை பயன்படுத்தி சிறுநீர் கற்களால் ஏற்படும் வலியை போக்கும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயுடன் இலைகளை லேசாக வதக்க வேண்டும். வதக்கிய இலையில் உப்பு தடவி அடிவயிற்றில் பற்றாக போடவும். இவ்வாறு செய்தால் வலி சரியாகும். இலைகளை பயன்படுத்தி வயிற்றுப்போக்குக்கான மருந்து தயாரிக்கலாம்.


தேவையான பொருட்கள்: இலைசாறு, புளிப்பில்லாத மோர், உப்பு. இலைகளை வெந்நீரில் 15 நிமிடம் ஊறவைக்க வேண்டும். பின்னர் இலைகளை  பிழிந்து சாறு எடுக்கவும். 10 முதல் 20 மி.லி சாறு, அரை டம்ளர் மோருடன் சிறிது உப்பு கலந்து காலை, மாலையில் எடுத்துக்கொள்ளலாம். இதனால் வயிற்றுபோக்கு, ரத்த கழிச்சல் குணமாகும். ரத்த மூலம், தடைப்பட்ட மாதவிடாய் சரியாகும். வாதம், பித்தத்தால் ஏற்படும் நோய்களுக்கு மருந்தாகிறது.

புற்றுக்களை உண்டாகும் நச்சுகளை வெளித்தள்ளும் தன்மை கொண்டது ரண கள்ளி. புண்களை ஆற்ற கூடியது. கள்ளி வகையை சேர்ந்த இது நோய் கிருமிகளை அழிக்கவல்லது. ரத்த கசிவை கட்டுப்படுத்தும். அதிக மாதவிலக்கை சீராக்கும். சிறுநீரை சீராக வெளியேற்றும். இலைகளை பயன்படுத்தி மருக்கள், கால் ஆணிக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.

ரண கள்ளி இலைகளை நசுக்கி பசையாக்கி கொள்ள வேண்டும். இதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி வடிகட்டி எடுத்து கொள்ளவும். இதை மேல்பூச்சாக பயன்படுத்துவதால் கால் ஆணிகள் குணமாகும். மருக்கள் கரைந்து போகும். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட ரண கள்ளி, காயங்களை ஆற்றக் கூடியது. நாள்பட்ட, அழுகிய மற்றும் சீல் வைத்த புண்களை சீக்கிரம் ஆற்ற கூடியது. விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது.

3கறை நல்லதோ இல்லையோ… காபி இதயத்துக்கு நல்லது என்கிறார்கள் கொரியாவை சேர்ந்த ஆய்வாளர்கள். நாள் ஒன்றுக்கு 3 கப் காபி சாப்பிடுகிற 25 ஆயிரம் ஆண்கள் மற்றும் பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இருந்து இந்த முடிவைக் கூறியிருக்கிறார்கள். இதயத்தின் கரோனரி ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படும் அபாயத்தை காபி குறைப்பதே இதற்குக் காரணம் என்று கூறியிருக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

21 இதய நோய், பக்கவாதம், நீரிழிவு என்று ஒன்றுக்கும் மேற்பட்ட பல நோய்கள் கூட்டாக ஒருவரைத் தாக்குவதையே ‘மெட்டபாலிக் சிண்ட்ரோம்’ என்கிறார்கள். பாரம்பரிய உணவு முறையைப் பின்பற்றுகிறவர்களுக்கு இந்த மெட்டபாலிக் சிண்ட்ரோம் நிலை ஏற்படும் அபாயம் 21 சதவிகிதம் குறைவு என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன் என்ற இதழ் இந்த முடிவை வெளியிட்டு உள்ளது.

40 ‘மேஜிக் வயது 40’ என்கிறார் அமெரிக்காவின் பாஸ்டன் நகரை சேர்ந்த சரும நல மருத்துவரான எமி கிராபர். ‘முகத்தில் சின்னச் சின்ன புள்ளிகளாக இருந்துகொண்டு சங்கடப்படுத்தும் துவாரங்கள், 40 வயதில் நின்று போவதால்தான் இதை லாபகரமான பருவம் என்கிறேன்’ என்று விளக்கமும் சொல்கிறார். எமியின் கருத்தை ஆதரிக்கும் விதமாக மும்பை பிரபலங்களின் சரும நல மருத்துவரான ரேஷ்மி ஷெட்டி சொல்லும் டிப்ஸையும் இங்கே குறிப்பிட வேண்டும். ‘ஓட்ஸை, பவுடர் போல ஆக்கிக்கொண்டு மாய்சரைஸருடன் கலந்து முகத்தில் ஃபேஷியல் செய்துகொள்ளுங்கள். ஒரு நிமிடத்துக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவினால் முகம் பொலிவாகிவிடும்’ என்கிறார்.

63 அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. ஆமாம்… 10 மணி நேரம் அல்லது அதற்கு மேல் இரவில் தூங்குகிற பெண்களுக்கு பக்கவாதம் வரும் வாய்ப்பு நேரம் 63 சதவிகிதம் அதிகமாம். 7 முதல் 8 மணி நேரம் வரை தூக்கமே இயல்பானது என்றும் இந்த அளவுக்கும் மேல் தூங்கும் பழக்கம் கொண்ட பெண்கள் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது என்றும் பரிந்துரைத்திருக்கிறது ஆய்வை மேற்கொண்ட ஹார்வர்ட் பள்ளி.

433 நாள் ஒன்றுக்கு பொதுவாக 2,500 கலோரி தேவை. ஆனால், மது அருந்தும்போது மட்டும் தேவைக்கு அதிகமான 433 கலோரி கிடைக்கிறது என்கிறது அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் க்ளினிக்கல் நியூட்ரிஷன் அமைப்பு. பீர் அடிக்கிறவங்களுக்கு தொப்பை வர்றது இதனால்தானோ!



* வெனிசூலாவில் உள்ள ஒரு சிறைச்சாலையின் உள்ளே இரவு விடுதியும் அமைக்கப்பட்டிருக்கிறது!

* வெள்ளி கிரகத்தில் நாம் பேசினால், நம் குரல் ஆழமாக வெளிப்படும். அங்குள்ள அடர்த்தியான வளிமண்டலம் காரணமாக குரல்நாண்கள் மிக மெதுவாகவே துடிக்கும்.

* இறந்து உயிர்பெற்றவர்களாகக் கருதப்படும் ஜோம்பிகளுக்கு (ஹாரர் திரைப்படங்களில் வருமே), 9 சதவீத அமெரிக்கர்கள் நிஜமாகவே பயப்படுகிறார்கள்!

* 56 சதவீத ஜெர்மானியர்களும், 52 சதவீத பிரிட்டிஷாரும் உண்மையிலேயே வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதாக நம்புகின்றனர்.

* அமெரிக்காவிலுள்ள ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக மாணவர்கள், எம்ஐடி மாணவர்களிடம் ‘மாரிஜுவானா’ எனும் போதைப்பொருள் வாங்கியதுதான் முதல் ஆன்லைன் வர்த்தகம்!

* பூமியில் தோராயமாக 3,04,000 கோடி மரங்கள் உள்ளன.

* எந்தக் கையை அதிகம் பயன்படுத்துவது என்கிற தேர்வை மூன்றாவது மாதத்திலேயே கருவில் இருக்கிற குழந்தை செய்துவிடுகிறது.

* ஒரு தேனீ உலகம் முழுக்க சுற்றிவர 2 டேபிள்ஸ்பூன் தேனிலுள்ள ஆற்றலே போதுமானது!

* 2014ல் காசநோய் காரணமாக உலகில் 15 லட்சம் பேர் இறந்திருக்கின்றனர். இது எய்ட்ஸ் மரணங்களை விடவும் அதிகம்.
| Copyright © 2013 Online Srilankan