இஸ்லாமிய சமுதாயமே மனசாட்சி இருந்தால் சிந்தித்துப்பார்.....!!


ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலப்பாளையத்தில் TNTJ வை சேர்ந்த ஹுசைன் அவருடைய தந்தை உள்ளிட்ட குடும்பத்தினர் மீது கொடூரமான முறையில் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது.

ஷிர்க் ஒழிப்பு மாநாட்டு பிரச்சாரம் தொடங்கிய நாள் முதல் இன்றுவரை தமிழகம் முழுவதும் எண்ணற்ற TNTJ சகோதரர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் அனைத்தும் ஏன் என்று சிந்தித்ததுண்டா ?

சாராயம் குடியுங்கள் என்று சொன்னார்களா ? சாராயம் குடிக்காதீர்கள் என்று சொன்னதற்கு ஏன் இந்த தாக்குதல் ?

வரதட்சணை வாங்குங்கள் என்று சொன்னார்களா ? வரதட்சணை வாங்காதீர்கள் என்று சொன்னதற்கு ஏன் இந்த தாக்குதல் ?

வட்டி வாங்குங்கள் என்று சொன்னார்களா ? வட்டி வாங்காதீர்கள் என்று சொன்னதற்கு ஏன் இந்த தாக்குதல் ?

அல்லாஹ்வை வணங்காதீர்கள் என்று சொன்னார்களா ? அல்லாஹ்வை மட்டும் வணங்குங்கள் என்று சொன்னதற்கு ஏன் இந்த தாக்குதல் ?

நபியை பின்பற்றாதீர்கள் என்று சொன்னார்களா ? நபியை மட்டும் பின்பற்றுங்கள் என்று சொன்னதற்கு ஏன் இந்த தாக்குதல் ?

அடி, உதை, வெட்டு, குத்து, இரத்தம் சிந்தி, ஊர் நீக்கம் செய்து, தவ்ஹீத் ஜமாஅத் குடும்பத்தினர் இறந்து விட்டால் பள்ளிவாசல் மைய வாடியில் அடக்கம் செய்ய மறுப்பு என்று இதெல்லாம் எதற்காக ?

மனசாட்சி இருந்தால் சிந்தித்தித்துப்பாருங்கள்.

இஸ்லாமிய இயக்கங்களில் RSS க்கு பிடிக்காத முக்கிய இயக்கம் TNTJ, தமிழக வரலாற்றில் எங்கேயாவது ஆர்.எஸ்.எஸ் காரனிடம் TNTJ காரன் அடி வாங்கி விட்டான் என்று எங்கேயாவது வரலாறு இருக்கிறதா ? அப்படி எங்கேயாவது TNTJ வினர் மீது தாக்குதல் நடந்து விட்டால் அடுத்த அரை மணிநேரத்தில் தமிழகத்தையே பரபரப்பாக ஆக்குகிறார்கள்.

முன்னறிவிப்பு இல்லாமல், சுவர் விளம்பரம் இல்லாமல், வால் போஸ்டர்கள் இல்லாமல் ஒரேயொரு SMS அனுப்பினால் அடுத்த அரை மணிநேரத்தில் 10 ஆயிரம் பேரை திரட்டும் சக்தி கொண்ட அமைப்பாக TNTJ இருந்தும் எங்கேயாவது 30 ஆண்டுகால வாழ்வில் உங்களை திருப்பி அடித்து உள்ளார்களா ?

அடி வாங்குவதற்கே பிறந்தவனை போன்று இரத்தம் சொட்ட சொட்ட அடி வாங்கியும் சிரித்த முகத்துடன் லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் என்று அல்லாஹ்வை மட்டும் வணங்குங்கள் என்கிறார்களே இதுவெல்லாம் ஏன் என்று தெரியுமா ?

அல்லாஹ்வுக்கு இணை வைத்து நீங்கள் நரகம் போய்விடக்கூடாது என்பதாலே....

எங்கே உங்களை திருப்பி அடித்து விட்டால் அதன்பிறகு நாம் சொல்லும் ஓர் இறைக்கொள்கை உங்களிடம் சென்றடையாமல் போய்விடுமே அச்சத்தின் காரணமாக தான் அடி வாங்கி அடி வாங்கி இரத்தம் சொட்டி இரத்தம் சொட்டி சிரித்த முகத்துடன் ஓர் இறைக்கொள்கையை சொல்லி வருகிறார்கள்.

இஸ்லாமிய சமுதாயமே மனசாட்சி இருந்தால் சிந்தித்துப்பார் !!

No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan