மகனை கைது செய்த அதிர்ச்சியில் ரஜாபக்‌ஷே திடீர் மரணம் அடைந்து விட்டதாக பேஸ்புக்கில் பரவும் புகைப்படத்தால் பரபரப்பு




இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச கொழும்பில் நேற்று கைது செய்யப்பட்டார்.
இலங்கை அதிபராக ராஜபட்ச பதவி வகித்தபோது, சிஎஸ்என் தொலைக்காட்சிக்கு இலங்கை அணியின் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப உரிமம் வழங்கப்பட்டது. இதில் மோசடி நடந்ததாக புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து, சிஎஸ்என் தொலைக்காட்சியின் தலைமைச் செயல் அதிகாரியான நிஷாந்தா ரணதுங்க, யோஷித உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
ராஜபட்சவுக்கு யோஷித, நமல், ரோஹித் என 3 மகன்கள் உள்ளனர். இந்த அதிர்ச்சியில் ராஜபட்சே இறந்து கிடப்பதைப் போன்ற புகைப்படம்
இணையத்தளம் மற்றும் முகநூலில் பரவி வருகிறது.   முகநூலில் தீயாய் பரவும் இந்த புகைப்படத்தால் சிங்கள முகநூல் பிரியர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.  மகிந்தவுக்கு நரகலோகத்தில் தண்டனை கொடுக்க வேண்டும் என தமிழ் முகநூல்  பிரியர்கள் ஆண்டவனை கும்பிடுவது போல் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan