இலங்கை பெண்ணிடம் அசிங்கப்பட்ட கோஹ்லி



கிரிக்கெட் உலகின் புகழ் பெற்ற வீரரான வீராட் கோஹ்லி இலங்கை பெண்ணிடம் அசிங்கப்பட்ட சம்பவம் வைரலாக பரவி வருகிறது.
அவுஸ்திரேலியாவுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது, இந்த போட்டிகளில் வீராட் கோஹ்லி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் தன்னுடைய மேனேஜருடன் அவுஸ்திரேலியாவில் உள்ள உணவகம் ஒன்றிற்கு காலை உணவை உட்கொள்ளச் சென்றிருந்தார்.
அப்போது அங்கிருந்த இலங்கை பெண்ணிடம், கோஹ்லியின் மேனேஜர் ”தற்போது முடியாது” என்று கூறியுள்ளனர். உடனே அந்தப் பெண், என்ன முடியாது? என்று கேட்டுள்ளார்.
புகைப்படம் எடுக்க அனுமதி கிடையாது என பதிலளிக்கவே, அந்த பெண்ணோ, நான் ஏன் இவருடன் இணைந்து புகைப்படம் எடுக்க வேண்டும்? யார் இவர்? நீங்கள் என்ன அவ்வளவு பிரபலமானவரா? எனக்கு உங்களைத் தெரியாது எனக் கூறியுள்ளார்.

இதைக் கேட்ட கிர்க்கெட் வீரர் கோஹ்லியும், அவரது மேனேஜரும் மிகுந்த அவமானத்துடன் தலை குனிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவத்தை குறித்த பெண்ணின் கணவர் பேஸ்புக் வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan