உயர்தரப் பரீட்சைக்கு இன்று முதல் விண்ணப்பிக்க முடியும்

உயர்தரப் பரீட்சைக்கு இன்று முதல் விண்ணப்பிக்க முடியும்
2016 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்படிவங்கள் இன்று (01) முதல் ஏற்றுக் கௌ்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்படிவங்கள் இன்று (01) தொடக்கம் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்தார்.
பாடசாலை மூலம் விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பப்படிவங்கள் மற்றும் ஆலோசனைகள் பாடசாலை அதிபர்களுக்கு தபால் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட பரீட்சார்த்திகள் மாதிரி விண்ணப்படிவம் மற்றும் ஆலோசனைகளை WWW.DOENETS.LK என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.
இதன் பிரகாரம் பாடசாலை விண்ணப்பதாரிகள் பாடசாலை அதிபர் ஊடாகவும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தனிப்பட்ட ரீதியிலும் பெப்பரவரி மாதம் 29 ஆம் திகதிக்கு முன்னராக பரீட்சைகள் திணைக்களத்திற்குக் கிடைக்கக் கூடியவாறு விண்ணப்பங்களை அனுப்பிவைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan