முறைகேடு குற்றச்சாட்டு: ராஜபக்சே மனைவியிடம் விசாரணை



முறைகேடாக வீடு வாங்கிய குற்றச்சாட் டில் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே வின் மனைவி சிராந்தியிடம் விசாரணைக் குழுவினர் திங்கள்கிழமை தீவிர விசா ரணை மேற்கொண்டனர்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ராஜ பக்சேவின் மகன் யோஷித ராஜபட்ச உள்ளிட்ட 5 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். இந் நிலையில், இப்போது ராஜ பக்சேவின் மனைவியும் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளார்.
இலங்கை அதிபராக ராஜபக்சே இருந்தபோது, அனுமதிக்கப்பட்டதை விட மிகக் குறைந்த விலை யில் தனக்கு நெருக்கமான வருக்கு வீட்டை வழங்கு மாறு தேசிய வீட்டு வசதி மேம்பாட்டு வாரியத்துக்கு சிராந்தி ராஜபக்சே உத்தர விட்டுள்ளார். அதன்படி ரூ.55 லட்சம் மதிப்புள்ள வீடு, ரூ.5 லட்சத்துக்கு வழங் கப்பட்டுள்ளது. ராஜபட்ச இலங்கையில் 10 ஆண்டு கள் ஆட்சியில் இருந்தார். அப்போது அவரது குடும் பத்தினர் பல்வேறு முறை கேடுகளில் ஈடுபட்டதாக இப்போதைய அரசு குற்றம் சாட்டியுள்ளது.
எனினும், தன் மீதும் தனது குடும்பத்தின் மீதும் கூறியுள்ள குற்றச்சாட்டு களை மறுத்துள்ள ராஜ பட்ச, அரசியல் பழிவாங் கும் நோக்கத்துடன் சிறீசேனா அரசு தன் மீதும், தனது குடும்பத்தினர் மீது பொய் வழக்குகளை தொடுத்து வருவதாக கூறியுள்ளார்.

No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan