இலங்கையில் ஐ.எஸ். தீவிரவாதத்தை பரப்பும் முயற்சியில் புலிகள்?



இலங்கையில் ஐ.எஸ். தீவிரவாதத்தை பரப்பும் முயற்சியில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈடுபட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று குற்றம் சுமத்தியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பினர், ஐ.எஸ் தீவிரவாதத்தை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸிலிருந்து இயங்கி வரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவிற்கு பொறுப்பாக கடமையாற்றி வரும் விநாயகம் என்பவரினால், இலங்கையில் ஐ.எஸ் தீவிரவாதம் பரப்பப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் வஹாப் என்னும் கடும்போக்குடைய அமைப்பு ஒன்று செயற்பட்டு வருவதாகவும், அந்த அமைப்புடன் விநாயகம் தொடர்பு பேணி வருவதாகவும் புலனாய்வுப் பிரிவினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த நிலையில் இளைஞர் இவ்வாறான கடும் போக்குடைய அமைப்புக்களின் பிரச்சாரத்திற்கு அடிமையாகி விடக் கூடாது என்ற நோக்கில் மதத் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை தெளிவுபடுத்தும் முயற்சியில் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டுள்ளதாக சிங்கள பத்திரிகை மேலும் செய்தி வெளியிட்டுள்ளது

No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan