">
சாரதி இல்லாமல் ஓடும் கார்கள், பகுதிநேரம் கம்ப்யூட்டரால் இயக்கப்படும் தானியங்கி லாரி போன்ற கண்டுபிடிப்புகளில் உலக நாடுகள் தீவிரம்காட்டி வரும் நிலையில், சாரதி இன்றி பயணிக்கும் பஸ் ஒன்றை நெதர்லாந்து நாட்டை சேர்ந்த இயந்திரப் பொறியியல் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி, வெள்ளோட்ட பரிசோதனையிலும் வெற்றி கண்டுள்ளனர்.
ஆறு பயணிகளுடன் மணிக்கு 8 கிலோமீற்றர் வேகத்தில் நடைபெற்ற இந்த சோதனை வெள்ளோட்டம் ஒரு ஆரம்பகட்ட முயற்சிதான்.
விரைவில் 6 கிலோமீற்றர் கொண்ட வேகனிங்கன் நகர வழித்தடத்தலில் மணிக்கு 25 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கும் வகையில் இந்த ‘விபாட்’ பஸ்கள் தரம் உயர்த்தப்படும் என இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள பொறியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Posted by
onlinesrilankan
|
Thursday, February 4, 2016 |
2:14:00 AM
No comments:
fazlycherryeducation.blogspot.com