அடுத்தது நீதான்: நாமலுக்கு ராஜபக்ஷ எச்சரிக்கை

 

எதிர்வரும் வாரத்தில் தனது மூத்த மகன் நாமல் ராஜபக்ஷ, கைது செய்யப்படுவார் என்றும் அதற்கு அவரைத் தயாராக இருக்குமாறு, தான் கூறியதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஒருவர் கைது செய்யப்படுவதற்கு முன்னர், அவரைப் பற்றிய கேள்விகள் நாடாளுமன்றத்தில் அதிகமாக கேட்கப்படும் என்றும் கடந்த வாரங்களில் நாமல் ராஜபக்ஷ குறித்தான கேள்விகள் அதிகமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனாலேயே சிறைக்குச் செல்வதற்கு தயாராக இருக்குமாறு, தனது மகனுக்கு தான் கூறியதாக அவர் தெரிவித்தார்.

No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan