வெளியே..ஆனால் உள்ளே : 2 லட்சம் பிணையில் வந்த ஞானசார தேரருக்கு மீண்டும் மறியல் ..!! பெண்ணை பயமுருத்தினாராம்



 
ஹோமாகம நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்ப்பட்ட ஞானசார தேரரின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இன்று ஞானசார தேரர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு சற்றுமுன்னர் பிணை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஞானசார தேரர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் இரண்டு லட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் அவரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
மேலதிக வழக்கு விசாரனையை இம்மாதம் இருபத்து மூன்றாம் திகதி வரை ஒத்திவைக்க நீதிபதி ரங்க விஜேசிங்க உத்தரவிட்டுள்ளார்.

பிணையில் வந்த தேரர் மீண்டும் உள்ளே !
முன்னதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இரண்டு லட்சம் இரு சரீர பிணைகளில் விடுவிக்கப்பட்ட தேரருக்கு ஊடகவியளாலர் எக்னெலிகொடவின் மனைவியை அச்சுருத்திய வழக்கில் நாளை  வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதீ ரங்க விஜேசிங்க உத்தரவிட்டுள்ளார்.

No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan