உண்மை உலகத்திர்க்கு வெளியாகி விட்டது ஆம் நபிகள் நாயகம் பற்றிய முன்னறிவுப்பு கொண்ட பைபில்


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ.
அன்பான சகோதரர்கள் ..
அதாவது ஈஸா (அலை.) அவர்களுடன் நெருங்கி இருந்த பர்னபாஸ் என்பவர் எழுதிய சுவிசேம் கிடைத்து அதனை மிகப் பெரிய கிருஸ்தவ மதகுருமார்கள் சாமானிய கிருஸ்தவர்களுக்கு தெரியாமல் மறைத்து வைத்து இருந்தனர் ஆனால் அது உலகத்திர்க்கு தெரிய வந்துள்ளது இதனால் இனிமேல் அல்லாஹ்வின் நாட்டப்படி அதிகமான கிருஸ்தவர்கள் இனி இஸ்லாத்தை தங்கள் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொள்வார்கள்
அங்காரா: இஸ்லாத்தின் இறுதி தூதரான முஹம்மது நபியை குறித்து இயேசு (ஈஸா நபி) முன்னறிவிப்புச் செய்யும் 15 நூற்றாண்டுகள் பழமையான பைபிள் துருக்கியில் கிபி 2000 மாவது ஆண்டில் கண்டெடுக்கப்பட்டது.
பர்ணபாஸின் சுவிசேஷம் என்று அழைக்கப்படும் இந்தநூல் 12 ஆண்டுகளாக துருக்கியில் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. பைபிளில் கூறப்படும் பர்ணபாஸ் இயேசுவின் முக்கியசீடராவார். இந்த
நூலை பார்ப்பதற்கு 16-வது போப்பெனடிக்ட் விருப்பம் தெரிவித்திருந்தார். இறுதி தூதர் முஹம்மது நபியின்
வருகையை குறித்தும், இயேசுவின் இஸ்லாம் குறித்த பார்வையை விளக்கும் இந்த நூலின் உள்ளடக்கம்,
தற்போது நடைமுறையில் இருக்கும் பைபிளில் காணப்படும் கருத்துக்களுடன் முரண்படுவதால், கிறிஸ்தவ தலைமை இந்நூலை மூடி மறைத்துள்ளது என்று துருக்கியின் கலாச்சார-சுற்றுலாத்துறை அமைச்சர் உர்த்துக்
ரூல்குனாய் செய்தியாளர்களிடம் கூறினார்.
யேசு ஆரம்ப காலக்கட்டத்தில் கூறிய கட்டளைகளும், முன்னறிவிப்புகளும் விலங்கின் தோலில் எழுதப்பட்டுள்ள இந்நூலில் அடங்கியுள்ளன. இதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததுதான் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் குறித்த முன்னறிவிப்பாகும். யேசு பேசிய மொழியான அராமிக்கில் எழுதப்பட்டுள்ள இந்த நூல் 14 ஆண்டுகளுக்கு முன்பு ( Year 2000) கள்ளக்
கடத்தல்காரர்களை கைது செய்யும் நடவடிக்கையின் போது துருக்கி போலீஸ் கண்டுபிடித்தது. இந்த புத்தகத்தின் மதிப்பு 28 மில்லியன் டாலராகும். இந்த நூலின் ஒரு பக்கத்திற்கான நகலுக்கு 1.7 மில்லியன் டாலர்
மதிப்பாகும். இந்த நூல் இயேசு சிலுவையில் அறையப்படவில்லை என்பதையும் அவர்க்கு பதிலாக ஜூடாஸ் இஸ்காரியோட் என்பவரே சிலுவையில் அறையப்பட்டார் என்பதையும் கூறுகிறது.மேலும் யேசு (இறைத்தூதர்
ஈஸா (அலை) அவர்கள் இறுதி தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை குறித்து தனது சீடர்களிடம்
முன்னறிவிப்பு செய்துள்ளார். இறுதி தூதர் வரும் வேளையில் அவரை நம்பி ஏற்றுக்கொள்ள வேண்டும்
என்று யேசு கூறியுள்ளார். இவ்வுண்மைகளை கண்டறிந்த போப் பதினாராம் பெனடிக்ட் தன்னுடைய போபாண்டவர் பதவியை 2013 ம் ஆண்டு இராஜினாமா செய்தார். ஆனால் இந்த செய்திகள் அனைத்தையும் வழக்கம்போல் மூடி மறைத்துவிட்டர்கள். அனைவரிடமும் இதை அதிகம் அதிகம் (Share)
பகிருங்கள்.

No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan