பொதுமக்களின் நன்மைக் கருதி நாடு பூராகவும் உள்ள அரச மருந்தகங்கள் 24
மணி நேரமும் திறந்திருப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாக சுகாதார
அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலையில் அரச மருந்தகங்கள் இரவு 10 மணி வரை மட்டுமே திறந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன்,
நாடளாவிய ரீதியல் தற்போது 31 அரச மருந்தகங்கள் மட்டுமே காணப்படுவதாகவும்
இதன் எண்ணிக்கையை 50 ஆக அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தில் அரச
மருந்தகத்தை நிர்வகிக்கும் அரச மருந்தக கூட்டுத்தாபனமானது அதிக இலாபத்தை
பெற்றுக் கொண்டதாகவும் இந்த இலாபமானது 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 438
மில்லியன் இலாபம் பெறப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும்
தெரிவித்துள்ளது.
No comments:
fazlycherryeducation.blogspot.com