Posted by
oneline srilanka
|
Wednesday, January 13, 2016 |
1:34:00 AM
ஈரானுக்காக உளவு பார்த்த வழக்கு : இருவருக்கு மரண தண்டனை விதித்தது குவைத்
குவைத், ஜன.13 (டி.என்.எஸ்) அல் அப்தாலி என்ற இயக்கத்தை சேர்ந்தவர்கள்,ஈரானுக்காகவும், ஸ்புல்லா இயக்கத்துக்காகவும் உளவு வேலையில் ஈடுபட்டதுடன், குவைத்துக்குள் ஆயுதங்களையும், வெடிகுண்டுகளையும் கடத்தி வந்து தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டதாகவும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் முடிவுக்கு வந்தது.
இதையடுத்து 2 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. ஒருவருக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 19 பேருக்கு தலா 5 அண்டு முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர். ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் ஈரான் பிரஜை, மற்றொருவர் குவைத் குடிமகன் என்றும் தகவல்கள் கூறுகின்ற
No comments:
fazlycherryeducation.blogspot.com