இலங்கையின் கல்வித் திட்டத்தில் விரைவில் மாற்றம்!



இலங்கையின் கல்வித் திட்டம் எதிர்வரும் 05 ஆண்டுகளுக்குள் மாற்றம் செய்யப்படுமென கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள் விநியோகிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று கொழும்பு ஆனந்தாக் கல்லூரியில் நடைபெற்றது.இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இலங்கையின் கல்வித் திட்டம் எதிர்வரும் 05 ஆண்டுகளுக்குள் மாற்றம் செய்யப்படுமென கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள் விநியோகிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று கொழும்பு ஆனந்தாக் கல்லூரியில் நடைபெற்றது.இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
  இலவச சீருடை விவகாரத்தில் பல்வேறுபட்ட அழுத்தங்களும் விமர்சனங்களும் வந்து கொண்டே இருக்கின்றன. உலக நாடுகளில் இலவச பாடப்புத்தகம், இலவச சீருடை வழங்கும் திட்டம் இலங்கையில் மட்டுமே உள்ளது. ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் அரச பாடசாலைகளில் நூல்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு பாடசாலைக்கும் 50 கணனிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அவை பராமரிப்பின்றி மூலைகளில் வீசப்பட்டுள்ளதை அவதானித்தேன். இதனால் கணனிகளை வாடகை அடிப்படையில் பாடசாலைகளுக்கு பெற்றுக் கொடுக்கவுள்ளேன்.
1200 பாடசாலைகளுக்கு மலசலகூடம், குடிநீர் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதேபோன்று கிராமப்புற மாணவர்களுக்கு காலணி வழங்கும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan