அமெரிக்காவின் ஹிஜாப் அணிந்த முதல் தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளர்



அரபு வம்சாவளியைசேர்ந்த அமெரிக்க முஸ்லிமான 21 வயது நிரம்பிய நூர் தாகூர் தனது ஹிஜாப் வாழ்க்கைபற்றி இங்கு
அறியத்தருகிறார்......
ஒரு சிறிய அமெரிக்க கிராமத்தில் பிறந்த இவருடைய போராட்டம் இங்கு இளம் வயதிலேயே ஆரம்பமானது.
கிராமத்தில் இவர்களைசுற்றி அதிகளவு முஸ்லிம்கள் இருக்கவில்லை. இருந்தாலும் இவர் வித்தியாசமான முஸ்லிமாகவும், ஒரு உண்மையான முஸ்லிம் அடையாளத்துடனும் வாழ விரும்பியுள்ளார்.
இந்த அடையாளத்தினால், நூர் தாகூர் மிகப்பெரிய
சவாலை சந்திக்க வேண்டியிருந்துள்ளது.( Identity Crisis)
அன்றைய கால கட்டத்தில் இவரை போன்றே அமெரிக்க முஸ்லிம்கள் பலரும் இந்த சவாலை எதிர் நோக்க வேண்டியிருந்தது. எந்த மதம், கலாச்சாரம், அல்லது பின்னணி போன்ற கேள்விகள் கேட்கப்படுவதை இவர் விரும்பவில்லை.
இவர் விரும்பி பார்க்கும் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் தொகுப்பாளர் இவரை கவர்ந்தபடியால், தானும் தொகுப்பாளராக வர வேண்டுமென விரும்பியுள்ளார். இதற்கு இவருடைய பெற்றோர் உறுதுணையாக இருந்துள்ளார்கள்.
ஒருநாள், ABC (American Broadcasting Cooperation) தளத்தில் இவர் தனது படத்தை பதிந்து "இவ்வாறுதான் நான் இருக்க விரும்புகின்றேன்" என்று குறிப்பிட்ட பதிவு உலகம் முழுவதும் வேகமாக பரவி, இவரை தொடர்ந்து மக்கள் தங்களது விருப்பங்களையும் அங்கு பதிவிட ஆரம்பித்தனர்.
CBS வானொலி இவரை செய்தித்துறையில் பயிற்சிபெறுபவரக தேர்ந்தெடுத்தது. இன்று நூர் தாஹிர் ஹிஜாப் அணிந்த தொலைக்காட்சி ஊடகவியளாளராவார்.
முஸ்லிம்கள் பற்றியும், முஸ்லிம் பெண்களின் ஹிஜாப்பற்றியும் தனது தொகுப்புரைகளில் அழகாக விளக்கமளித்து வருகிறார்.

thanks for  Meezan - தராசு

No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan